பாகம் – 24.
“டேய் இதெல்லாம் திமிர்த் தனமான பேச்சு. உனக்கு பேயும் பிடிக்கல . சாத்தானு புடிக்கல. உனக்கு கை நிறைய சம்பளம் .பொழுது போக்குறதுக்கு நேரம் இல்ல ..அப்பொழுது பொழுது போவதற்கு அந்த அண்ணா இருந்தாரு .இப்ப அதுவும் இல்ல .அதனால தான்டா எத்தனையோ பிரச்சனை பண்ணிக்கிட்டு நேரத்தை கடத்தலாம் என்று பார்க்கிற . ”
“அப்படி எல்லாம் . என்னன்னே தெரியல. எப்படி பேசினாலும் வம்பு வந்துடுது. இல்லா விட்டா பேசாமலேயே வீடு அமைதியா என்று எனக்கு வீடே பிடிக்காமல் போகுது..”
” இந்த எழவுக்கு தானடா நான் உன்ன அந்த செல்லை எடுத்து பார்க்க சொன்னேன் .அதை எதற்கு நீ பார்க்காம இன்னும் சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்க. உன் மகனை கல்யாணம் செய்தாலும் உன் மனசுல இருக்குற இந்த அழுக்கு நீங்காமல் போயிடும் போல இருக்குடா.. முதல் வேலையா அதை செஞ்சி தொலையேண்டா .. ஏன்டா நீ இப்படி இருக்கற எல்லார் உயிரையும்
வாங்குற .. ” நவீன் கடுமையாய் பேசுகிறான்..
“ எனக்கு அத செய்றதுக்கு தான்டா பயமா இருக்கு ..அப்படி செஞ்சி அவ மேல உண்மைன்னு தெரிஞ்சு போயிட்டா நான் உயிரோடு இருக்க மாட்டேன் டா. ”
அரவிந்தை ஓங்கி நான்கு அறைகள் அறைந்தாலாவது தன் ஆத்திரங்கள் திருமா என்று இருக்கிறது நவீனுக்கு..
“ என்னடா நீ இப்படியே உயிரை எடுப்பாய் போலயே.. நீ பார்க்கவும் மாட்டாயாம்.. பார்க்காமலும் இருக்க மாட்டாயாம்.. உயிரையும் எடுப்பாயாம், எடுக்காமலும் இருப்பாயாம்..ம், இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.. அந்தப் பெண்ணை சந்தேகமும் படுவாயாம்.. ஆனால் படாமலும் இருப்பாயாம்.. ”
“ எனக்கு அப்படியே எரிச்சலாக வருகிறது..ஏன்டா அந்த பொண்ணு தான் அவ்வளவு நேர்மையா பேசுதேடா ..பிறகு எப்படிடா நீ சந்தேகப்படுவ .உன்னுடைய அழுக்கை நீக்குவதற்கான நிவாரணத்தை தான் நான் சொல்கிறேன்.. ”
“நீ சந்தேகப்படறதுக்காக நான் சொல்லல.. இல்லா விட்டால் அந்த செல் எல்லாவற்றையும் கொண்டு வந்து என்கிட்ட கொடு ..நான் கேட்கிறேன்.. இல்லை இல்லை நீ என்னை நம்ப மாட்ட.. நான் பொய் சொல்கிறேன் என்று .. நீ எடுத்துட்டு வா நம்ம இரண்டு பேருமே எல்லா செல்லையும் எல்லா வாட்ஸ் ஆப்பையும் அலசி பார்த்திடுவோம் ..இது மட்டும் தான் ஒரே தீர்வு. இதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்… நீ என்னன்னா திரும்பத் திரும்ப துன்பம் கொடுத்துக்கிட்டே இருக்க ..அந்த பொண்ணு மனச விட்டு தற்கொலை செய்ய முயற்சிக்க போகிற வரைக்கும் நீ மித்ராவை விடமாட்டடா..”
இப்படி சொன்னதுமே அரவிந்த் பயந்து விடுகிறான்..” இல்லடா நான் அவளை இனிமே சந்தேகப்பட மாட்டேன்..”
“போடா போ, ஒரு பத்து நாள் தான் ஒழுங்கா இருப்ப.. திரும்பவும் ஆரம்பித்து விடுவ.. நீ காலம் பூரா அந்த பொண்ணுக்கு நல்ல கணவனா இருக்கணும்னு நினைச்சேன்னா மனசு கல்லாக்கி கிட்டு இதை செய்.. அப்படியே அந்த பொண்ணு மேல தப்பா இருந்தா அதுக்கு பிறகு அது உன்னுடைய இஷ்டம். அந்த பெண்ணோட நீ வாழ்வதும், விலக்கி விடுவதும்.. ஒரு முடிவுக்கு வாடா.. மதில் மேல் பூனையாக எந்த பக்கம் தாவறதுன்னு இப்படி வயசையும் வருசத்தையும் கழிச்சு கிட்டே இருந்தீங்கன்னா கடைசியில் இப்ப கோபித்துக் கொண்டு போனது பார்த்தியா.. இதற்குப் பிறகு வெறுத்துப் போய் விவாகரத்து பத்திரமே கொடுத்து விடும் ..அப்பொழுது நீ என்ன செய்தாலும் உன்னால் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முடியாது.. ”
நவீன் புலம்புகிறான்.. “நான் செய்வது எனக்கே தப்பா தான்டா தெரியுது.. என்னமோ உன்னுடைய குடும்பத்தை நான் கலைப்பது மாதிரி இருக்குடா.. “உனக்கு நல்லது தான்டா செய்கிறேன்.. ஆனா அது உனக்கும் புரியவில்லை.. என்னையும் போட்டுக் குழப்பி அடிக்கிறாய்.. பேசாமல் நான் உன்னை விட்டு விலகி போவது தான் சரி என்று தோன்றுகிறது.. எப்பா சாமி நான் உன் வழிக்கே வரவில்லை நீ ஏதாவது செய்துக்கப்பா.. ஒரு பொண்ணோட வாழ்க்கையில இன்னொரு ஆள் வந்து இடைஞ்சல் தருவது பெரிய தப்புடா ..நீயே சரி செய்து விடு.. ”
” இல்லைடா நவீனு நான் யோசிச்சா பைத்தியம் மாதிரி ஆகுறேன் ..எனக்கு எது செய்றதுன்னே புரியல .. இந்த உறவு உதவி மட்டும் செய்டா..கடைசியா நீ சொன்னதை நான் செய்து பார்க்கிறேன்.. இனிமேல் நான் தட்டிக் கழிக்க மாட்டேன்..” என்று அரவிந்த் கெஞ்சுகிறான் ..
எல்லாவற்றிற்கும் சரி என்று விட்டு வீட்டிற்கு வந்ததும் அம்மாவையும் மகனையும் சேர்ந்து பார்த்ததுமே அவனுக்கு பற்றி கொண்டு வருகிறது..
‘ இவளுக்கும் வேற வேலை இல்லை. இந்த பயலுக்கும் வேற வேலை இல்லை.., வாய்க்குள் முனகியவன் , நான் ஏன் இப்படி எல்லாம் எண்ணுகிறேன் என்று தன்னை தானே கேள்வியும் கேட்டுக் கொள்கிறான் ..
அவளிடம் பேச்சுக் கொடுத்தாலே வம்பு தான் வருகிறது என்று தெரிந்தாலுமே அறையில் அவர்கள் இருவரும் தான் இருக்கிறார்கள் . பின்னே எப்படி இந்த செல்களை எடுப்பது என்று யோசித்தவன் சும்மாவேணும் பேச்சு கொடுக்கிறான்..
“ இந்த பயலை கொஞ்சம் அப்படி இப்படி விளையாட விட்டா என்னடி..அப்படியே பிடிச்சு வச்சிருக்க..”
“ ஆரம்பிச்சிட்டீங்களாங்க, இவ்வளவு நேரம் விளையாடி களைச்சுப் போய் தான் இதோ வந்து நாங்க பெட்ல ஏறி படுத்து கிடக்கோம். ”
“ ஆமா உங்க இரண்டு பேருக்கும் தான் வேற வேலையே கிடையாதே.. இப்படி பொழுதன்னைக்கும் படுத்தே இருக்காத.. இப்படி இருக்கிறதால தான்டி உன் வயித்துல அடுத்ததா ஒன்னு வரவே மாட்டேங்குது ..அது வந்தாலாவது நீங்க உங்க இரண்டு பேர் கொட்டமும் அடங்குமான்னு பார்க்கிறேன்..”
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியை படுத்து கிடக்கிறாள் மித்ரா .மறுபடியும் சண்டை வந்து விடப் போகிறதோ என்று அமிர்தனின் முகம் பயத்துடன் தெரிகிறது..
மித்ரா எதார்த்தமாகத்தான் பேசுகிறாள்.. ஆனால் அதற்கும் வம்பு வருகிறது..
” அப்பா சும்மா தான்டா பேசுறாங்க. வம்பெல்லாம் இல்லை . “என்று மகனை சமாதானம் செய்கிறாள்..
“ம்,இப்படியே இவன்கிட்ட சொல்லி சொல்லி என்னை சண்டைக்காரன் என்ற பட்டத்தை ஏற்படுத்தி விடு. அப்பத்தான அவன் உன்கிட்ட மட்டும் இருப்பான். சபாஷ் நல்ல வேலை தான்டி நீ செய்ற.. ”
“ ஏங்க நான் எது செஞ்சாலும் நீங்க தப்பாவே பேசுறீங்க . இல்ல ,எனக்கு புரியல .நான் என்ன செய்யனும்னு என்று நீங்களாவது சொல்லுங்க.. அதன் படியாவது நடந்து கொள்கிறேன். ”
“ முதல்ல இரண்டு பேரும் எழுந்து வெளியே போங்க.. எனக்கு தலையை வலிக்குது.. ஆபீஸ்லயும் டென்ஷனும் வீட்லயும் டென்ஷன்.. கொஞ்ச நேரம் நான் படுக்கணும்னு வந்தா நீங்க இரண்டு பேரும் இடத்தை பிடிச்சிக்கிறீங்க .. ”
“ஓஹோ இதற்கு தான் இவ்வளவு பேச்சா.. சொன்னா போயிருக்க மாட்டோமா ..வேணும்னா தைலம் போட்டு தடவி விட்டு பிடிச்சு விடவா .. “என்று பரிவுடன் கேட்கிறாள் மித்ரா..
மனைவியின் அக்கறையான பேச்சினால் அமைதியான அரவிந்த் , “இல்லடி வேணாம் கொஞ்ச நேரம் படுத்து எழுந்து வச்சா சரியா போயிடும்.. ”
” நீங்க உங்க மனசுல ஒன்னு வச்சுக்கிட்டு வாய் வழியா வேற ஏதோ பேசுறீங்க ..அந்த பழக்கத்தை கொஞ்சம் மாத்துங்க.. அதனாலதான் நம்ம இரண்டு பேருக்கும் சண்டை வருது .. சண்டைப் போடறதால தானே உங்களை பார்த்தால் இந்த பயலும் பயப்படறான்.., ” சொல்லி விட்டு அவன் திரும்பவும் ஏதாவது ஆரம்பித்து விடுவானோ என்று பையனை இழுத்துக் கொண்டு வேகமாக வெளியேறுகிறாள்..
போகும் போது அவன் சொல்லி விடுகிறான்..” நான் கதவை தாழ் போட்டு தான் படுக்கப் போகிறேன் . இரண்டு பேரும் கதவைத் தட்டாதீங்க..”
ஏன் என்று கேட்டால் அதற்கும் சண்டை வரும் என்று அமைதியாக செல்கிறாள் மித்ரா .இப்பொழுது அவர்கள் இருவரும் தாத்தா பாட்டி அறைக்கு சென்று விடுகிறார்கள்..
இருவரும் சேர்ந்து வருவதை பார்த்ததுமே கயலுக்கும் மாறனுக்கும் ஆச்சரியம் ஆகிறது.. தங்களுடைய வீடு தான் என்றாலும் இதுவரை தங்களுடைய அறைக்கு பேரனும் மித்ராவும் தேவை இல்லாமல வந்ததில்லை என்பதால் கயலுக்கு ஆனந்தமாக இருக்கிறது..
விருந்தினரை உபசரிப்பதை போல ஆராவாரமாய், ” அடடே வாங்க வாங்க . உங்களுக்கு இப்பதான் இந்த இடம் தெரிந்ததா .. “என்கிறார் ..
மித்ராவுக்கு சிரிப்பு வந்து விடுகிறது. , “ஐயோ அத்தை இங்கே வந்தால் இவ்வளவு சந்தோசமான வரவேற்பு கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை ..உங்க மகன் சொல்வதைப் போல எனக்கு அமிர்தனைத் தவிர வேறு உலகமே தான் தெரியவில்லை தான் போல.. நானும் தான் என்னை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்.. பாருங்களேன் கொஞ்சம் என்னுடைய அணுகுமுறையை மாற்றியதுமே உங்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கிறது என்று.. இனிமேல் அடிக்கடி நான் உங்கள் அறைக்கு வந்து தொல்லை கொடுக்கப் போகிறேன் பாருங்கள்.. ”
“அட ஏம்மா நீ வேற இப்படி சொல்கிற ..நானும் இதை தானே வேண்டிக் கொள்கிறேன். இதெல்லாம் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டாமா. நானாக வந்து இவனிடம் பேசினாலும் முகம் கொடுத்து பேச மாட்டான். நீயும் ஏதாவது சொல்லி அனுப்பி விடுவாய். அதனால் தான் உன் அறைப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை .. ”
” சாரிங்க அத்தை, இவன் ஏதாவது பேசி விடுவானா என்று நான் முந்திக் கொள்கிறேன். கடைசியில் நான் தான் இவனை வீணடிக்கிறேன் பாருங்க. இவனை கண்டிக்காமல் உங்களை அனுப்பி விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறேன்..” ஒரு புதிய ஒரு பழக்கம் தன் புருஷனால் கிடைத்து இருக்கிறது என்று எண்ணிக் கொள்கிறாள் மித்ரா..
அமிர்தன் ஏதோ வேற்று உலகத்திலிருந்து வந்தவனை போல அந்த அறையில் இருக்கும் பொருள்களை எல்லாம் சுற்றி சுற்றி பார்க்கிறான்.. இதுதான்டா உன்னுடைய தாத்தா பாட்டியின் அறை.. நன்றாக பார்த்துக் கொள் .. இப்போது தான் முதல் முதலாக வருகிறாயா என்ன .. “
ஆச்சரியமாய் அமிர்தன் அதற்கு பதில் கூறுகிறான் .. “இல்லை பாட்டி நான் ஏதாவது வேண்டும் என்றால் வந்து தேடி விட்டுப் போவேன் ..அதனால உங்களுக்கு தெரியாமல் வருவேன் … “என்கிறான்..
” ஓகோ நீ இந்த வேலை எல்லாம் கூட செய்வாயா.. உன்னுடைய பொருளை நானாடா தூக்கிக் கொண்டு வைத்திருக்கிறேன்..” கயல் கிண்டல் செய்யவும் மாறன் சிரிக்கிறார்..
“ஆமாம் டி நான் போய் அவனுடைய பேனாவையோ பென்சிலோ எடுத்து வந்து விடுவேன் ..அதை தான் பிள்ளை பொறுப்பாக திரும்பவும் வாங்கி சென்று விடுவான் .. ”
“சரி சரி இங்கேயே விளையாடு.. ” என்று பேரனை நடுவில் விட்டு இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் தாத்தாவும் பாட்டியும்..
ஆஹா..!
தொடரும்..
