ஆடி வரும் வண்ண மயிலே-20

அத்தியாயம்:20 

பவதீப் மாலதி ராகவன் கையை விடவில்லை என்றால்…அதற்கு பிறகு நடப்பதற்கு ஏதுவுமே அவன்… பொறுப்பு இல்லை என்றான்… 

அவன் இரும்பு குரலில் உள்ள அழுத்தமே… அவன் சொன்னதை செய்து விடுவான் என சொன்னது.  

ராகவன் “ மாலதி கையை விடு எனக்கு என் சொந்த பெரியப்பாவை விட…பெரியம்மாவை தான் ரொம்ப பிடிக்கும் அம்மா இல்லாத எனக்கு.. அம்மாவை விட அதிகமாக பாசம் காட்டி வளர்த்தவங்க.  

எனக்காக அவங்க பெரியப்பா கிட்ட எத்தனை தடனை சண்டை போட்டு இருக்கிறாங்க…நான் ஆசைபட்டு கேட்டால் அடுத்த செக்கன் எனக்கு அதை வாங்கி கொடுப்பாங்க..புவனாவை விட அவங்களுக்கு நான் தான் முக்கியம்.  

பெரியப்பா கண்டிப்பானவர் தான்…ஆனா‌ல் என் மேலே பாசம் உள்ளவர் அதுவும் எனக்கு தெரியும்…நான் அவர் வீட்டுக்கு இப்போ போக முடியாத சூழ்நிலை… 

இப்படி வெளியே பார்த்தால் தான்… பெரியம்மா, என் தங்கச்சி, மருமக்கள் கூட பேச முடியும்.  

சொன்னால் புரிந்து கொள்ளு உன்னை அவங்க எப்பவுமே ஏற்று கொள்ள மாட்டாங்க…காரணமும் உனக்கு தெரியும் அதற்காக நீ என் பொண்டாட்டி.. சரிகா என் பெண்ணு இல்லை என்று யாருமே சொல்ல முடியாது.  

பாண்டி உன் தங்கச்சிக்கு எடுத்து சொல்லு…இது பொது இடம் பலர் வந்திருக்கிறாங்க இங்கே என் கெளரவம் கெடுவது போல..உன் தங்கச்சியை நடந்து கொள்ள வேணாம் என்று சொல்லு…”என்றான்.  

மாலதி “ யாரு உங்க கெளரவத்தை கெடுப்பது …உங்க பெரியப்பா தான் உங்களை அடிமை போல நினைக்கிறார்…அவர் கூப்பிட்ட குரலுக்கு நீங்க நாய் போல வாலை ஆட்டி கொண்டு… வர வேணும் என்று நினைக்கிறார்.  

நீங்களும் அது போல தான் நடந்து கொள்கிறீங்க…எனக்கு ஒரு சந்தேகம் நீங்க பெரியம்மாவை பார்க்க போகவில்லை….அவங்க பெயரை சொல்லி அந்த மயூரிகாவை பார்க்க போகிறீங்க.  

அப்போ இத்தனை நாள் அவளை அலட்சியப்படுத்தியது…எல்லாம் நடிப்பா..? எதற்காக இந்த நாடகம் என தெரிந்து கொள்ளலாமா..? என கோபமாக கேட்டாள்.  

ராகவன் “ நடிப்பும் இல்ல ஒரு மண்ணும் இல்ல…நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை மயூரி என் பெண்ணு அதுவும் மூத்த பெண்ணு…அவளை பார்க்க, பேச நான் எதற்காக மற்றவங்க கிட்ட அனுமதி கேட்க வேணும்.  

அவளை நான் மொத்தமாக விட்டு விலகி இருக்க பல காரணம் இருக்கு…அது பற்றி நான் யாரிடமும் விளக்கம் கூற வேண்டிய அவசியம் இல்லை…உனக்கும் சரிகாவுக்கும் நான் இப்போ வரைக்கும் எந்த குறையும் வைத்தது இல்லை.  

அதை நீ கூட மறுக்க முடியாது இது பற்றி… விவாதிக்க இது இடம் இல்லை ..” என்றான்.  

பாண்டி “ மாலதி மாப்பிள்ளை கையை விடு…அவர் சொன்னது எல்லாம் உண்மை தான் அவர் என்ன..? அங்கே போவது சொந்தம் கொண்டாடுவதற்காக இல்லை தானே… 

முதலில் அவர் பெண்ணை பார்க்க என்ன அவள் நிழலை கூட தொட…அந்த சக்ரபாணி அனுமதிக்க மாட்டார் மகள் சாவுக்கு காரணமான மனிதன் என நினைக்கும் ஒருவரிடம்… 

தன் சொந்த பேத்தியை எப்படி பார்க்க அனுமதி கொடுப்பார்..? என்ன மாப்பிள்ளை நான் சொல்வது சரி தானே…? என கேட்டான்… 

அவன் பேசியதை கேட்ட ராகவன் முகம் மாற… அவன் மாலதி கையை விலக்கி விட்டு போக…பவதீப் பாண்டியை ஒரு தடவை பார்த்து விட்டு.. ராகவனை பின் தொடர்ந்து போனான்.  

மாலதி “ என்ன அண்ணா நீ இப்போ எதற்காக அந்த குடும்பத்து கூட..அவரை பேச விட்ட அவர் பெரியம்மா, தங்கச்சி அவர் மனசை மாற்றி விடுவாங்க…இது கூடவா உனக்கு தெரியாது…? என கேட்டாள்.  

பாண்டி “ தெரியாமல் இல்ல மாலு எல்லாம் தெரிந்து தான் அவரை அங்கே போக விட்டேன்…உன் அண்ணன் ஒரு விஷயம் செய்தால் அதற்க்கு பின்னே…உனக்கு நன்மை தான் வந்து சேரும்.  

இப்போ எலக்சன் டைம் முதல்வர் கிட்ட.. இப்படி ராகவன் குளோஸாக இருந்தால் தான்…நமக்கு அதிகமாக ஓட்டு விழும் சக்ரபாணி பற்றி உனக்கு சரியாக தெரியாது.  

அவர் ராகவனை கொலை செய்யும் வெறியில் இன்னும் இருக்கிறார்…இப்படி இருக்கும் போது தன் பேத்தி கிட்ட இவரை நெருங்கி பழக விடுவாரா..? 

அந்த பெண்ணுக்கும் ராகவன் மேலே பெரிதாக அப்பா என்ற பாசம் இல்ல…அவள் அப்பாவாக பார்த்தது சக்ரபாணியை தான்…அதனால் அது பற்றிய பயம் உனக்கு தேவை இல்லை.  

உன் அண்ணுக்கு உன் வாழ்க்கையை பாதுகாக்க தெரியும்…அது மூலமாக தானே நான் பலதை அடைய வேண்டி இருக்கு…இப்போ நீ செய்ய வேண்டியது அமைதியாக இருப்பது தான்…” என்றான்.  

குருமூர்த்தி ராகவனிடம் பேசி விட்டு வர கண்டது சக்ரபாணியை தான்…முதல் வரிசையில் தர்ஷனை மடியில் வைத்து கொண்டு…அவன் கூட ஏதோ பேசி கொண்டு இருந்தார்.  

கிட்ட தட்ட சக்ரபாணியை அவர் நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது…சியாமளா இறந்த பிறகு அவர்களிடையே பெரிதாக போக்குவரத்து இல்லை… 

சக்ரபாணிக்கு மகள் இழந்த சோகம் ஒரு பக்கம் என்றால் அடுத்த பக்கம்… வேலை பளு, பேத்தியை கவனிக்க என்று நேரம் சரியாக இருந்தது.  

அசோக் அப்போ சின்ன பையன் டெல்லியில் படித்து கொண்டு இருந்தான்…அவன் வந்து பொறுப்பை கையில் எடுத்த பிறகு தான்…சக்ரபாணிக்கு ஓய்வு கிடைத்தது இதில் எங்கே குரு மூர்த்தியை நேரில் பார்ப்பது.  

பார்த்தாலும் கூட அவருக்கு சியாமளா ஞாபகம் வருவதால்…வீணான மனக்கசப்பை தடுக்க அவர் விலகி இருப்பது… 

ஆனால் கல்யாணி, மயூரி அப்படி இல்லை…அவர்கள் குரு மூர்த்தி குடும்பம் கூட நன்றாக உறவு பாராட்டி கொண்டார்கள்.  

குருமூர்த்திக்கும் அப்படி தான் சியாமளா இறந்த சோகம் மறைவதற்குள்ளே…தன் ஒரே மகள் வாழ்க்கையை இழந்து கையில் ஒரு குழந்தை…வயிற்றில் ஒரு குழந்தையோடு நின்றிருந்தாள்….பெத்த மகன் போல நினைத்தவன் வீட்டு பக்கமே எட்டி கூட பார்க்கவில்லை.  

அரசியல் தான் அவன் வாழ்க்கை, உறவு என்று இருந்து விட்டான்…இதற்கு இடையில் அவருக்கு அரசியலில் குடைச்சல் கொடுத்தான்… 

அதை எல்லாம் அவர் பவதீப் அவரிடம் வரும் வரைக்கும்…ரவி கூட சேர்ந்து தனியாக சமாளித்து நின்றார்.  

இப்போ தான் பவதீப் இருப்பதால்…அவர் கொஞ்சம் நிம்மதியாக இருப்பது நீண்ட நாளைக்கு பிறகு நண்பர்கள்…சந்தித்து கொண்டதும் பேச நா எழுதாது நின்றிருந்தார்கள்.  

சக்ரா என குரு மூர்த்தி அழைக்க மூர்த்தி என அழைத்தவாறே… எழுந்த சக்ரபாணி நண்பனை அணைத்து கொண்டார்.  

அவர்களின் நட்பை கேமரா எல்லாம் உள் வாங்கி கொண்டு இருந்தது.. 

குரு “ உன்னை இன்று இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை டா…நம்ம பார்த்து ரொம்ப காலமாகி விட்டது மொபைலில் தான்…அதுவும் முக்கிய விஷயத்தை தான் பேசி கொள்வோம்…எப்படி டா இருக்க..? என கேட்டார்.  

சக்ரபாணி “ கடவுள் புண்ணியத்தில் பணத்துக்கு குறை இல்லை டா…அள்ளி கொடுக்கிறார் இந்த பரமேஸ்வர்…அதில் என்னால் முடிந்தளவு சேவை செய்கிறேன் நீ எப்படி இருக்க..? 

பத்திரிகை, டிவியில் தான் உன்னை பார்க்க முடிகிறது…எலக்சன் வேறு வருகிறது நீ பிஸியாக இருப்ப என்று தெரியும்…முதலில் இங்கே எனக்கு வர விருப்பம் இல்லை.  

உனக்கே காரணம் தெரியும் என் பெண்ணு…சலங்கையின் ஒலி இங்கே இன்னும் உயிர்போடு இருக்கிறது…இந்த தூண்களில் அவள் நடனமும் இந்த காற்றில் அவள் வாசம் நிறைந்து இருக்கு.  

அவள் உருவில் இருக்கும் என் பேத்தி… தாத்தா என் நடனத்தை பார்க்க நீ வர வேணும் என்று கண்களை கசக்கும் போது…என்னால் அதை மறுக்க முடியவில்லை அது தான் வந்தேன்.  

இங்கே வந்த பிறகு தெரிந்தது யாரை என் வாழ்நாளில் பார்க்க கூடாது என்று…நினைத்தேனோ அவனை பார்த்து விட்டேன் கூடவே என் பெண்ணு இடத்தில்…நயவஞ்சகமாக வந்த ஒருத்தியையும் ஊருக்கு கிளம்ப தான் நினைத்தேன்.  

ஆனால் என் பேத்தியின் முகம் வந்து என்னை தடுத்தது…இது கோவில் பொது இடமும் கூட அது தான் அமைதியாக இருந்து விட்டேன்…” என்றார்.  

குரு மூர்த்தி அவர் கையை பற்றி அழுத்தியவர்… 

“ ம்,புரிகிறது சக்ரா எனக்கும் ராகவன் இங்கே வந்தது அதிர்ச்சியாக தான் இருந்தது….எனக்கு அவன் வருவதை பவதீப் சொல்லவே இல்லை நான் சங்கடபடுவேன் என்று…ரவி தான் காரில் வரும் போது சொன்னான். 
 
இனி என்ன செய்ய முடியும் இது பொது இடம் ஈசன் வாசம் செய்யும் ஸ்தலம்…நம்ம மற்றவர்களை வர கூடாது என ஆடர் போட முடியுமா..? கலை சங்கம் வேறு அவனுக்கும் அழைப்பு வைத்து விட்டது.  

நான் எதிர்பார்க்காத விஷயம் பாண்டி அவன் தங்கச்சியும் வருவாங்க என்று…அது தான் ஒரு வேலை செய்து விட்டு வந்திருக்கிறேன்…நீ வருத்தப்படாதே அவன் அவங்க கூட குடும்பமாக உட்கார மாட்டான்.  

இது தான் அவன் குடும்பம் சியாமளா தான் அவன் உரிமையுள்ள மனைவி…மயூரி தான் அவன் பெண்ணு அதை ஊருக்கு காட்ட தான்…அவனை மீனாவை காரணமாக வைத்து இங்கே வர சொல்லி விட்டு வந்திருக்கிறேன்.  

மீனா பெயரை சொன்னால் போதும்…எல்லாவற்றையும் தூக்கி போட்டு விட்டு ஓடி வந்து விடுவான்…நீ ஏதுவுமே சொல்லி விடாதே பிறகு நம்ம பேத்திக்கு தான் சங்கடம்…அவள் நல்லபடியாக மேடை ஏறட்டும்…” என்றார்.  

அவர் சொல்லி வாய் மூடவில்லை அடுத்த செக்கன்…ராகவனை அழைத்து கொண்டு பவதீப் வந்தான் மீனா முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை…ராகவன் மீனா, புவனாவுக்கு நடுவே இருந்தவன்… 

தியாவை தூக்கி மெல்ல தன் மடியில் வைத்தவன்…அவள் தலையை தடவி அவள் கூட கொஞ்சி பேச தொடங்கினான்… இதை எல்லாம் பார்த்த பாண்டி, ராஜவேலு…இருவரின் மனதில் வேறு வேறு எண்ணங்கள் தோன்ற தொடங்கியது.  

அதைய நேரம் கிட்ட தட்ட மக்களுக்களோடு மக்களுக்காக இருபது தீவிரவாதிகள்…கோவிலுக்குள்ளே நுழைத்தார்கள் கோவில் காவலை சரி பார்த்து கொண்டு இருந்த… ராகுல் மனதில் ஏதோ தப்பாக தோன்ற தொடங்கியது.  

அவனும் எக்ஸ் மிலிட்டரி மேன் தானே அவனும் பவதீப்பும் பார்க்காத தீவிரவாதிகளா..? அவர்கள் எப்போ..? எப்படி..? எந்த வேஷத்தில் வருவார்கள் என்று சில அனுமானங்கள் இருக்கு.  

பவதீப் உள்ளே காவலை சரி பார்த்து கொண்டு இருந்தவன் மனதில் கூட…ராகுலின் எண்ணம் போல தான் தோன்றியது… 

இப்படிப்பட்ட பொது நிகழ்சியில் தான்… மக்களை பணய கைதிகளாக்கி அவர்களின் கோரிக்கையை வைக்க முடியும்.  

முதலில் கடவுள் வாழ்த்து ,பிறகு தேசிய கீதம் அடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடி முடிந்ததும்… நடன நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது.

மயில் ஆடி வரும்…
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page