“அர்ஜூன் ஹாஸ்பிடல் ரிசப்ஷன்ல கேட்குறான்”..
அவங்க அபி இருக்க ரூம் நம்பர் சொல்றாங்க”..
“அர்ஜூன் முகம் முழுக்க கலவரத்தோட வரான்”…
“கணபதி அபி பக்கத்துல சேர்ல உட்கார்ந்து இருக்காரு”..
அர்ஜூன் : “மாமா…என்ன ஆச்சு ?? ன்னு உள்ள வரான்”.
கணபதி : “பெருசா ஒன்னும் இல்ல மாப்பிள்ளை..சாப்பிடமா இருந்து இருக்கா..அதா”..
அர்ஜூன் : “தூங்குறாளா ?? ன்னு அபி பக்கத்துல நிக்குறான்”.
கணபதி :” இல்ல மாப்பிள்ளை.. இன்னும் மயக்கத்துல தான் இருக்கா.. நீங்க உட்காருங்க.. நான் நீங்க குடிக்க காஃபி வாங்கிட்டு வரேன்…ன்னு போறாரு”..
“அர்ஜூனும் அபி கூட தனியா இருக்கா..அவரு போகட்டும் ன்னு விட்டுட்டான்”..
“ஒரு சேரை இழுத்து அபி மேட் பக்கத்துல போட்டு அதுல உட்கார்ந்து அபி கையைப் பிடிக்குறான்”.
“அவன் கண்ணு கலங்குது”…
“சாரி அபி.. என்னால தானே இப்படி ஆச்சு..சாரி.. கண்டிப்பா இனி இப்படி நடக்காது.. நிஜமா கோபத்துல லா அப்படி போகலை..டக்குன்னு மீட்டிங் ஸ்டார்ட் ஆகிட்டுச்சு…ன்னு அபி கையை எடுத்து அவன் கண்ணுக்கிட்ட வைச்சு அழுகுறான்”.
அபி : “எதுக்கு இப்போ அழுகுற ?? சின்ன பையன் மாதிரி”..
அர்ஜூன் : “ஹே..நல்ல இருக்க தானே”..
அபி : “ம்ம்…பாத்தியா ?? எனக்கு ஒரு ரிப்ளே பண்ணா மா போனா..ஆனா பாக்க நேருலயே வரமாதிரி ஆய்டுச்சு”..
அர்ஜூன் :” ஏய் லூசு.. நான் ரிப்ளே பண்ணாலன்னு சாப்பிடமா இப்படியா ஹாஸ்பிடல் வர மாதிரி பண்ணுவ”??
நர்ஸ் : “அது மட்டும் இல்ல சார்.. ரொம்ப அழுது இருக்காங்க..அதானால தான் இப்படி”..
அர்ஜூன் : “அழுதியா” ??
அபி : “ம்ம் ன்னு பாவமா தலையை அசைக்குறா”…
“அர்ஜூன் பாவமா பாக்குறான்”…
அபி : “என்ன அப்படி பாக்குற” ??
அர்ஜூன் :” ஒன்னு இல்ல “??
அபி : “ஒன்னும் இல்லையா” ??
அர்ஜூன் : “இருக்கு”..
அபி :” என்ன இருக்கு “??
அர்ஜூன் : “லவ்”..
அபி :” யாருக்கு யாரு மேல “??
அர்ஜூன் :” உனக்கு என் மேல ?? எனக்கு உன் மேல” ??
அபி : “அப்படியா ?? எனக்குல லவ் இல்ல “??
அர்ஜூன் : ‘ஓ..லவ் இல்லமா தான் ஹாஸ்பிடல் ல இருக்கீயா ‘??
அபி : “அப்போ உனக்கு என் மேல லவ் இல்ல “??
அர்ஜூன் :” உன் மேல லவ் இல்லன்னா ?? மும்பைல இருந்து இவ்வளவு சீக்கிரம் வந்து இருப்பேன்னா ?? நீயே சொல்லு”..
அபி :” ம்ம்”..
அர்ஜூன் : ம்ம் ன்னா என்ன அர்த்தம். வாயா திறந்து சொல்லு..
அபி : என்ன சொல்றது ??
அர்ஜூன் : ஐ லவ் யூ சொல்லு..
அபி : ஹா..அதுலா நான் சொல்ல மாட்டேன்..
அர்ஜூன் : சொல்லு டி..
அபி : டி யா ??
அர்ஜூன் : ஆமா..என் பொண்டாட்டி நீ..டி தா சொல்லுவேன்.
அபி : ஹாலோ சார்.. இன்னும் கல்யாணம் ஆகால..
அர்ஜூன் : அதா ஆகப்போகுது இல்ல..நீ என் பொண்டாட்டி தான்..அது யாராலும் மாத்தா முடியாது..சரி இது விடு..நீ லவ் யூ சொல்லு..
அபி : முதல்ல நீங்க சொல்லுங்க.. அப்பறம் நான் சொல்றது பத்தி பாக்கலாம்.
அர்ஜூன் : ஐ லவ் யூ..
அபி : என்ன இப்படி சொல்றீங்க…நல்லா சொல்லுங்க.
அர்ஜூன் : நல்லா தானே டி சொல்றேன்…
அபி : ஏங்க ?? நல்லா ஃபீல் பண்ணி..புதுசா சொல்லுங்க… கையில பூ வைச்சு , மண்டி போட்டு , இந்த பேரை பச்சை குத்தி , அப்பறம் மேல பூ தூவி இப்படிலா ஏதாவது யோசிங்க..
அர்ஜூன் : அடிப்பாவி ரொம்ப டிவி பாப்பீயோ..ஒரு மனுஷன் லவ் சொன்னா.. ஓகே சொல்லுவீயா..அது விட்டுட்டு பேக்ரவுண்ட் செட்டிங்ஸ் வைச்சு ப்ரப்போஸ் பண்ண சொல்ற ??
அபி : எனக்கு அப்படி தான் வேணும்..
அர்ஜூன் : ரொம்ப கஷ்டம் ..
அபி : முடியாதா ??
அர்ஜூன் : அப்படி சொல்லல..
கணபதி : மாப்பிள்ளை.. இந்தாங்க.. காஃபி.
அர்ஜூன் : தேங்க்ஸ் மாமா..
கணபதி : அபி மா.. எப்படி டா இருக்க..
அபி : எனக்கு என்ன மா.. நான் நல்லா இருக்கேன்…
அப்போ கௌசல்யா ப்ரியா ரெண்டு பேரும் வராங்க..
அபி : ஓய்.. நீங்க எங்க போனீங்க ??
ப்ரியா ஓடி வந்து கட்டிப் பிடிச்சு அழுகுறா..
அபி : ஏய் ?? ஏன் டி..எனக்கு ஒன்னும் இல்ல..
ப்ரியா : நாங்களா எப்படி பயந்துட்டோம் தெரியுமா ?? எவ்வளவு நேரம் கதவை தட்டி நீ எழுந்திருக்கவே ?? தண்ணீ மூஞ்சுல அடிச்சும் எழவே இல்ல.. ஏன் இப்படி லா பண்றா..
அர்ஜூனுக்கு இதை பார்த்து ஃபீல் பண்றா.. என்னால தானே இப்படி ஆச்சுன்னு..
கௌசல்யா அமைதியா பார்த்துட்டே இருக்காங்க..
அபி : என்ன மா அப்படி பாக்குற ?? எனக்கு ஒன்னும் இல்ல மா..நீ ஒன்னும் கவலைபடதே.. அவ்வளவு சீக்கிரம் லா உங்களை விட்டு போக மாட்டான்…உங்க கூடவே இருந்து உங்க எல்லாரையும் இம்சை பண்ணிட்டே தான் இருப்பேன்..
இதை கேட்கும் போது கணபதியும் கௌசல்யா வும் அழுகுறாங்க..
அபி : ஆச்சோ காமெடி சொன்னா சிரிக்கணும்.. அழக்கூடாது.
அர்ஜூன் : மாமா அத்தை ஏன் அழறீங்க.. ஏதாவது பிரச்சனையா ??
கணபதி : அதுலா ஒன்னும் இல்ல மாப்பிள்ளை..சும்மா தான்…. கொஞ்ச நேரத்தில நாங்க ரொம்பவே பயந்துட்டோம். இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.
அர்ஜூன் : இனி இப்படி நடக்காது மாமா..அபிக்கு இப்படி ஆக நான் தான் காரணம்.
கௌசல்யா : என்ன சொல்றீங்க மாப்பிள்ளை..நீங்களா ??
அர்ஜூன் : ஆமா அத்தை..அவ பேசிட்டு இருக்கும் போது நான் மீட்டிங் போய்ட்டேன்.. என்னால மெஸேஜ் பண்ண முடியலை.. அப்பறம் ஃபோன் ஆஃப் ஆகிடுச்சு..அதா அழுதுட்டு இருந்து இருக்கா..
அபி : “அச்சோ உண்மை விளிம்பி அப்படியே போட்டு கொடுத்துட்டானே..( என்ன நினைக்கப் போறாங்களோ )
ப்ரியா கௌசல்யா ஒருமாதிரி பாக்குறாங்க’..
அபி : ” லைட்டா பல்லை கட்டுறா ‘??
அர்ஜூன் :” இனி இப்படி நடக்காது மாமா”..
மனோ : “யாரு ?? இதுதான் அபியை கட்டிக்க போற மாப்பிள்ளை யா “??
கணபதி : “ஆமா டா..பேரு அர்ஜூன்”..
மனோ : “ஹாய் அர்ஜூன்.. நான் டாக்டர் மனோ.. டாக்டர் மட்டும் இல்ல.. நானும் உனக்கு ஒரு மாமா தா..அபி எனக்கும் பொண்ணு மாதிரி”.
அர்ஜூன் : “ஹோ..நைஸ் அங்க்குள்..நைஸ் டூ மீட் யூ”..
மனோ :” ஐம் ஆல் சோ… ஓகே பேசி அபியை டிஸ்டர்ப் பண்ண வேண்டா..வாங்க நாமா வெளியே போகலாம்..ன்னு அர்ஜூனை கூட்டிட்டு போறாரு”.
அர்ஜூன் : “சொல்லுங்க அங்க்குள்”.
மனோ : “அபியை இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் அர்ஜூன்..பட் அவ கொஞ்சம் வீக்கா இருக்கா..சோ ஆல்ரெடி அவ ஒரு டேப்லெட் சாப்பிட்டு இருக்கா..அது மேரேஜ் அப்புறமும் அவ அதை கன்ட்யூ பண்ணணும்”.
அர்ஜூன் : “ஓகே அங்க்குள்.. பண்ணட்டும்.. நான் பாத்துக்குறேன்.. தினமும் மறக்கமா நான் கொடுக்குறேன்.ஆனா”..
மனோ :” பரவால்லையே நான் சொல்றதுக்கு முன்னாடி நீயே புரிஞ்சுக்கற..ஆனா என்ன” ??
அர்ஜூன் : “மேரேஜ் அப்பறம் அபி படிக்கணும்மாம்..சோ அவ அம்மா வீட்டுல தான் இருப்பா.. அப்போ அத்தையே தந்துருவாங்க”..
மனோ : “வாட்..இங்கயா ?? அப்போ நீ” ??
அர்ஜூன் : “நான் பெங்களூர் லா தான் அங்க்குள்..வோர்க் அங்க தானே “!!
மனோ : “நோ..நோ..நீ அவ சொன்னத்தை எல்லாம் பெருசா எடுத்துக்காதா..அவ உன்கூட தான் இருக்கணும்”..
அர்ஜூன் : “ஆனா அவ படிப்பு”..
மனோ : “ஏன் பெங்களூர் ல இல்லதா காலேஜ் ஜா..அதுலா நான் பாத்துக்கிறேன்..அவ டேப்லெட் மட்டும் மறக்கமா சாப்பிடணும் ஓகே வா”..
அர்ஜூன் : “ம்ம்.. ஓகே அங்க்குள்”.
மனோ : “ம்ம்..
அர்ஜூன் :” இப்போ நான் போகவா அங்க்குள்”.
மனோ :” தாராளமா” ??
“அர்ஜூன் அபி ரூம்க்கு வரான்”..
“அவ கிளம்ப ரெடியா இருந்தா”..
அர்ஜூன் : “போலாமா” ??
அபி :” ஹா”..
“அர்ஜூன் அபி கையை பிடிக்குறான்”.
அபி : “ஹே..என்ன பண்ற ?? அம்மா அப்பா இருக்காங்க” ??
அர்ஜூன் : “இல்ல ஒரு சப்போர்ட்க்கு.. உன்னால நடக்க முடியாது இல்ல”..
கௌசல்யா :” பரவால்ல மாப்பிள்ளை நீங்களே கூட்டிட்டு வாங்க..நீ மெல்ல வா.. நாங்க முன்னாடி போறாம்ன்னு போறாங்க”..
அபி : “ஏய்..லூசு.. எல்லாரும் இங்க இல்ல..இப்படியா கைக்கோர்த்துட்டு வருவா”..
அர்ஜூன் :” நீ வேற.. நான் உன்னை தூக்கிட்டு போலாம்ன்னு இருந்த”..
அபி :” பாரு டா..தூக்குவ தூக்குவ ?? ஆளா பாரு’..
அர்ஜூன் : “என்ன முடியாதுன்னு சொல்ல வரீயா.. என்ன யாரு கேள்வி கேட்பான்னு…தூக்குறான்”.
அபி :” அடப்பாவி…விடு டா..
அர்ஜூன் முடியாது ன்னு தூக்கிட்டு போறான்.. ஹாஸ்பிடல் ல இருக்கவாங்க பாத்து சிரிக்குறாங்க”..
அபி :” ஹே..விடு டா… எல்லாரும் பாக்குறாங்க”..
அர்ஜூன் :” பாக்கட்டும்..எனக்கு என்ன ??ன்னு தூக்கிட்டு வெளியே வரான்.
கார்கிட்ட வந்து இறக்கி விடுறான்”..
“கௌசல்யா சிரிக்குறாங்க”..
“கணபதி பாக்குறாரு”..
அர்ஜூன் : “மாமா..நடக்க முடியலைன்னு சொன்னா ?? அதா”..
அபி : “நானா”..
கணபதி : “சேரி பரவால்ல மாப்பிள்ளை..வாங்க போலாம்’..
“எல்லாரும் வீட்டுக்கு போறாங்க”.
தொடரும்..
