மாந்த்ரீகன்
வணக்கம் நண்பர்களே,
மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.
இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்காலப் பின்னணியில் காண வாருங்கள்..
நன்றி,
ரியா மூர்த்தி
