மௌன ராகம் 33
அத்தியாயம் 33:
கார்ப்பரேட்சதிவலைகளைத் தனது அறிவுத்திறத்தால் அறுத்தெறிந்தகவிவர்ஷன், இப்போது தனது பார்வையைத் தனதுவேர்களை நோக்கித் திருப்பினான். லண்டனின் பளபளப்பான சாலைகளை விட, தனது கிராமத்துமண் சாலைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதே ஒரு உண்மையான வெற்றியாளனின்அடையாளம் என்று அவன் நம்பினான்.
அன்றுஅதிகாலை, கவிவர்ஷன் தனது தந்தை சசிதரனுடன்அவர்கள் பிறந்த கிராமமான ‘பூம்பொழில்’ கிராமத்திற்குச் சென்றான். அங்கே பசுமையான வயல்களுக்கு இடையே ஒரு சிறிய தொடக்கப்பள்ளிசிதிலமடைந்த நிலையில் இருந்தது.
”பாரு கவி… இந்த ஸ்கூல்ல தான் நீ முதல்முதல்ல அ ஆ இஈ கத்துக்கிட்ட. ஆனா இன்னைக்கு இங்கஇருக்குற பிள்ளைகளுக்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி பத்தி எதுவுமே தெரியல,” என்று வருத்தத்துடன் சொன்னார் சசிதரன்.
கவிவர்ஷன்அந்தப் பள்ளியின் சுவர்களை வருடினான். “அப்பா… நான் லண்டன்ல கத்துக்கிட்டஅத்தனை வித்தைகளும் இந்த மண்ணுக்குப் பயன்படலைன்னாநான் படிச்ச படிப்புக்கே அர்த்தம் இல்ல. இந்த கிராமத்தை நான்ஒரு ‘டிஜிட்டல் வில்லேஜ்’ ஆக மாற்றப் போறேன். இங்க இருக்குற ஒவ்வொரு விவசாயிக்கும், மாணவனுக்கும் இன்டர்நெட் ஒரு வரப்பிரசாதமா இருக்கும்,” என்றான் உறுதியுடன்.
அடுத்தஒரு வாரத்தில், கவிவர்ஷனின் பொறியாளர்கள் குழு அந்தக் கிராமத்தில்முகாமிட்டது. அவர்கள் கிராமம் முழுவதும் அதிவேக வைஃபை (Wi-Fi) வசதியை ஏற்படுத்தினர். ஆனால் அது வெறும் இன்டர்நெட்மட்டுமல்ல; விவசாயிகளுக்கு வானிலை அறிக்கை, சந்தை நிலவரம் மற்றும் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி ஆகியவற்றை அவர்களது தாய்மொழியிலேயே வழங்கும் ஒரு பிரத்யேக மென்பொருளைகவிவர்ஷன் உருவாக்கினான்.
அதேசமயம் கோயம்புத்தூரில், ஹர்ஷாந்த் மற்றும் நிலாவின் வீட்டில் ஒரு பெரிய மகிழ்ச்சிகாத்திருந்தது. நிலா கடந்த சிலநாட்களாக மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். ஹர்ஷாந்த் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.
பரிசோதனைமுடிந்து டாக்டர் வெளியே வந்த போது, ஹர்ஷாந்தின் இதயம் ஒரு கணினி மென்பொருள்கிராஷ் ஆவதைப்போலப் படபடத்தது.
”மிஸ்டர் ஹர்ஷாந்த்… வாழ்த்துக்கள்! நிலா கன்சீவா இருக்காங்க. அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க, நல்லா கவனிச்சுக்கோங்க,” என்றார் டாக்டர்.
ஹர்ஷாந்த்அப்படியே சிலையென நின்றான். அவனது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவன் உடனடியாக நிலாவின்அறைக்குள் ஓடிச் சென்று அவளது கைகளைப் பற்றிக் கொண்டான். “நிலா! தேங்க்ஸ் நிலா… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அண்ணனுக்கு ராகவி கிடைச்ச மாதிரி, நமக்குள்ளயும் ஒரு உயிர் வளரப்போகுது,” என்றான் நெகிழ்ச்சியுடன்.
நிலாபுன்னகைத்தாள். “ஹர்ஷாந்த்… இனிமேலாவது நீங்க அந்த லேப்டாப்பை ஓரமாவச்சுட்டு, நம்ம குழந்தைக்குக் கதைசொல்லிக் கொடுக்கக் கத்துக்கோங்க,” என்று செல்லமாக மிரட்டினாள்.
கவிவர்ஷன்கிராமத்தில் வேலையாக இருந்த போது, பிரக்யுவிற்கும் ராகவிற்கும் ஒரு சர்ப்ரைஸ் தயார்செய்திருந்தான். கிராமத்தின் எல்லையில் இருந்த தரிசு நிலத்தை விலைக்கு வாங்கி, அதை ஒரு மிகப்பெரியகுறுங்காடாக மாற்றியிருந்தான். அதற்கு ‘ராகா வனம்’ என்றுபெயரிட்டான்.
சிலமாதங்களுக்குப் பிறகு அவன் ராகவியையும் பிரக்யுவையும் அங்கே அழைத்துச் சென்ற போது, அங்கே ஆயிரக்கணக்கான பறவைகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.
”கவி! இதுஎவ்வளவு அழகா இருக்கு! இந்தவறண்ட நிலத்தை இப்படி ஒரு சோலையா எப்படிமாத்தின?” என்று பிரக்யு வியப்புடன் கேட்டாள்.
”இதுதான் என்னோடபுது புராஜெக்ட் பிரக்யு. ‘நேச்சர் அண்ட் டெக்’ நாம எவ்வளவுதான் டெக்னாலஜிலமுன்னேறினாலும், இயற்கையை இழந்தா எதுவுமே மிஞ்சாது. இந்த வனத்தை நம்மமௌனிகா தான் பராமரிக்கப் போறா. அவ வளரும்போது இந்த மரங்களும் அவகூடவே வளரும்,” என்றான் கவி.
ராகவி அங்கே இருந்த பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கத் தத்தித் தத்தி ஓடினாள். அவளது சிரிப்புச் சத்தம் அந்த வனம் முழுவதும்எதிரொலித்தது.
அன்றுமாலை கிராமத்து வீட்டின் திண்ணையில் ரூபனும் சசிதரனும் அமர்ந்து இளநீர் குடித்துக் கொண்டிருந்தனர்.
”சசிதரன் சார்… அன்னைக்கு நான் கவியை இங்கஇருந்து போக வைக்க எவளோலாம் பண்ணன் , இவன் இவ்வளவுபெரிய ஆளாவான்னு நான் கனவுல கூடநினைக்கல. ஆனா இன்னைக்கு இவன்இந்த கிராமத்தையே மாத்திட்டான். இப்போ புரியுது… அறிவுக்கும் அன்புக்கும் முன்னாடி பணமும் அதிகாரமும் எவ்வளவு சின்னதுன்னு,” என்றார் ரூபன் தனது பழைய நாட்களைநினைத்து வருந்தியபடி.
சசிதரன்அவரது தோளில் கை வைத்தார். “ரூபன்சார்… காயங்கள் தான் ஒரு மனிதனைச்செதுக்கும். கவி பட்ட காயங்கள்தான் அவனை இன்னைக்கு ஒருசிற்பியா மாத்தியிருக்கு. நாம இப்போ ஒருகுடும்பமா இருக்கிறது தான் எனக்குப் பெரியநிம்மதி,” என்றார்.
மேனகாவும்மீனாவும் உள்ளே அமர்ந்து நிலாவிற்காகச் சத்தான உணவுகளைத் தயாரிப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அந்த வீட்டில் இருந்தபகை மறைந்து, இப்போது வெறும் பாசம் மட்டுமே எஞ்சியிருந்தது.
அன்றுஇரவு கவிவர்ஷனுக்கு லண்டனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “கவிவர்ஷன் சார்… உங்கள் ‘டிஜிட்டல் வில்லேஜ்’ புராஜெக்ட் பற்றிப் பல நாடுகள் பேசுகின்றன. உலகப் பொருளாதார மன்றம் உங்களை ஒரு சிறப்பு உரைநிகழ்த்த அழைத்திருக்கிறது,” என்றனர்.
கவிவர்ஷன்பிரக்யுவைப் பார்த்தான். “பிரக்யு… மறுபடியும் லண்டன் கூப்பிடுறாங்க. ஆனா இந்த முறைநான் ஒரு கவிஞனா இல்ல, ஒரு கிராமத்துப் பிள்ளையா அங்க போகப் போறேன்,” என்றான் புன்னகையுடன்.
”நீ எங்கபோனாலும் உன் கூடவே இந்தராகா வனத்தோட வாசனையும், நம்ம ராகவியோட சிரிப்பும்இருக்கும் கவி. போய் ஜெயிச்சுட்டுவா,” என்றாள் பிரக்யு பெருமையுடன்.
