மௌன ராகம் 37
அத்தியாயம் 37:
லண்டன்ஹீத்ரோ விமான நிலையத்தில் ராகவி கால் பதித்தபோது, அவளுக்குள்ஒரு இனம் புரியாத சிலிர்ப்புஏற்பட்டது. இது வெறும் ஒருவெளிநாட்டுப் பயணம் அல்ல; தனது தந்தை கவிவர்ஷன்அவமானங்களையும் வலிகளையும் சுமந்த அதே மண்ணில், ஒருவெற்றியாளனின் மகளாகத் தான் வந்திருப்பது அவளுக்குள்ஒரு பெரும் பொறுப்புணர்வைக் கொடுத்தது.
அவள்கையில் வைத்திருந்த டேப்லெட் கணினியில், கவிவர்ஷன் லண்டனில் தங்கியிருந்த இடங்களின் வரைபடம் இருந்தது. அவள் முதலில் செல்லவிரும்பியது ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கோஅல்லது பல்கலைக்கழகத்திற்கோ அல்ல. தனது தந்தை பாத்திரம்கழுவிய அந்தச் சிறிய ஹோட்டலுக்குத்தான்.
லண்டனின்கிழக்குப்பகுதியில் உள்ள அந்தச் சிறியசந்திற்குள் ராகா நடந்தாள். பனிமெல்லத் தூவிக்கொண்டிருந்தது. அவளது கருப்பு நிறக் கோட் மற்றும் கழுத்தில்சுற்றியிருந்த ஸ்கார்ஃப் அவளுக்கு ஒரு கம்பீரத்தைத் தந்தது. அவள் அந்த ஹோட்டலின் வாசலில்நின்றாள். அது இப்போது மிகவும்பழமையடைந்து காணப்பட்டது.
உள்ளேசென்ற ராகா, அங்கே ஒரு முதியவர் அமர்ந்துகணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
”ஹலோ சார்… உங்களை எனக்குத் தெரியும். நீங்கதான் என் அப்பாக்கு அன்னைக்குவேலை கொடுத்தீங்க,” என்றாள் ராகா மென்மையான குரலில்.
அந்தமுதியவர் நிமிர்ந்து பார்த்தார். “நீ… நீ பார்க்க அப்படியேகவிவர்ஷன் மாதிரியே இருக்க. நீ அவரோட மகளா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
ராகாபுன்னகைத்தாள். “ஆமாம் சார். என் அப்பா இப்போஒரு பெரிய இடத்துல இருக்கலாம், ஆனா அவர் இந்தஇடத்தை என்னைக்குமே மறக்கல. அதான் நான் வந்த உடனேஉங்களைப் பார்க்க வந்தேன்,” என்று சொல்லிவிட்டு, தனது பையிலிருந்து ஒருகாசோலையை எடுத்தாள்.
”இது என்அப்பாவோட அன்பளிப்பு இல்லை சார். இது ஒரு முதலீடு. இந்த ஹோட்டலை நீங்க இப்போ புதுப்பிக்கணும். இங்க வேலை செய்றவங்களுக்குநீங்க ஒரு கௌரவமான சம்பளம்கொடுக்கணும். இதுக்கான முழுச் செலவையும் எங்க ‘ராகா அறக்கட்டளை’ ஏத்துக்கும்,” என்றாள்.
அந்தமுதியவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “கவிவர்ஷன் ஒரு கவிஞன் மட்டும்இல்ல, அவன் ஒரு தீர்க்கதரிசி. அவனோட பொண்ணும் அப்படியே இருக்க,” என்றார்.
ராகாஅந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது, ஒரு கறுப்பு நிறகார் அவளைப் பின்தொடர்வதை அவள் கவனித்தாள். தனபாலின்வாரிசுகள் லண்டனில் பதுங்கியிருந்தது உண்மைதான். அவர்கள் மௌனிகாவை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்திகவிவர்ஷனை மிரட்டத் திட்டமிட்டிருந்தனர்.
அவள்ஒரு பார்க் வழியாகநடந்தபோது, காரிலிருந்து இறங்கிய நான்கு பேர் அவளைச் சூழ்ந்துகொண்டனர்.
”ராகவி கவிவர்ஷன்… உன் அப்பா கிட்ட சொல்லு, அவர் எங்க குடும்பத்தைஅழிச்சதுக்கு நீ இப்போ பதில்சொல்லணும்,” என்று ஒருவன் கத்தியை எடுத்தான்.
ராகவி பயப்படவில்லை. அவள் தனது கையில் இருந்தகடிகாரத்தில் ஒரு பட்டனைத் தொட்டாள். அடுத்த நொடி, ஹர்ஷாந்த் உருவாக்கியிருந்த அந்த ‘டிஜிட்டல் செக்யூரிட்டி’ கவசம் செயல்படத் தொடங்கியது. ஒரு மெல்லிய லேசர்திரை அவளைச் சுற்றி உருவானது. அந்த ரவுடிகளால் அவளைத்தொடக்கூட முடியவில்லை.
அதேநேரம், கோயம்புத்தூரில் இருந்த ஹர்ஷாந்தின் லேப்டாப்பில் எச்சரிக்கை ஒலித்தது. “அண்ணா! ராகவிக்கு ஆபத்து. லண்டன்ல அவங்க அட்டாக் பண்றாங்க,” என்று ஹர்ஷாந்த் கத்தினான்.
கவிவர்ஷன்துடித்தான். “ஹர்ஷாந்த்! இப்போவே லண்டன் போலீஸ்க்கு அந்த லொகேஷனை ஷேர்பண்ணு. நான் அங்க இருக்குறஎன் நண்பர்களுக்குத் தகவல் சொல்றேன்,” என்றான் ஆவேசமாக.
ஆனால்ராகவி அங்கே சும்மா இருக்கவில்லை. அவள் தனது கையில்இருந்த ஒரு சிறிய ஸ்ப்ரேவை அவர்கள்மீது அடித்தாள். அது ஒரு தற்காலிகமானமயக்க மருந்து. அடுத்த ஐந்து நிமிடங்களில் லண்டன் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் அங்கே வந்து அவர்களைக் கைது செய்தனர்.
இந்தியாவில், பிரக்யு அழுது கொண்டிருந்தாள். “கவி! நான் தான்சொன்னேன்ல… அவளை அங்க அனுப்பாதீங்கன்னு. இப்போ பாருங்க என்ன ஆகிடுச்சுன்னு,” என்று தேம்பினாள்.
கவிவர்ஷன்அவளை அணைத்துக் கொண்டான். “பிரக்யு… அவ நம்ம பொண்ணு. அவளுக்குத் தன்னை எப்படித் தற்காத்துக்கணும்னு தெரியும். பாரு… அவளே அந்த ரவுடிகளைப்பிடிச்சு கொடுத்துட்டா. அவ ஒரு கவிஞனோடமகளா மட்டும் இல்ல, ஒரு தைரியமான பெண்ணோடமகளா அங்க நிக்குறா,” என்றான்பெருமையுடன்.
சிறிதுநேரத்தில் ராகவி வீடியோ காலில் வந்தாள். “அம்மா! பயப்படாதீங்க. நான் ஓகே. அந்தரவுடிகளுக்கு நான் ஒரு கவிதைசொல்லிட்டு வந்திருக்கேன். ‘மௌனம் என்பது பலவீனம் அல்ல, அது புயலுக்கு முன்னால்இருக்கும் அமைதி’ன்னு புரிய வச்சிட்டேன்,” என்று சிரித்தாள்.
ராகவி லண்டனில் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் கவின் ஒரு புதிய மைல்கல்லைஎட்டினான். அவன் தனது ‘அக்ரி-பாட்’ ரோபோக்களை இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்குக் குறைந்தவாடகையில் வழங்கும் ஒரு புதிய அமைப்பைத்தொடங்கினான்.
”பெரியப்பா! அக்காலண்டன்ல ஒரு புரட்சி செய்றாங்க, நான் இங்க நம்ம நாட்டுவிவசாயத்துல ஒரு மாற்றத்தைக் கொண்டுவரணும்னு நினைக்கிறேன்,” என்றான் கவின்.
கவிவர்ஷன்அவனது முதுகில் தட்டிக் கொடுத்தான். “கவின்… அறிவுங்கிறது பிறருக்குப் பயன்படும்போதுதான் அது முழுமையடையும். நீயும்மௌனிகாவும் இந்த உலகத்தை இன்னும்அழகா மாத்துவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்றான். ரூபன் பெரும் பாலும் சசிதரனுடனேயே இருப்பார் அவர் வீட்டுக்குப் போரதேசந்தேகம் மகளும் பேத்தியும் இங்கிருக்க முதுமையின் பிடியில் அவர்களும்; என்ன தான் செய்வர்சசிதானுக்கும் ரூபனுக்கும்டையில் கூட நல்ல பினைப்பு
அன்றுஇரவு, சசிதரன் மற்றும் ரூபன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
”ரூபன் சார்… நம்ம காலத்துல பகைங்கிறது நேருக்கு நேர் இருந்தது. ஆனாஇப்போ டெக்னாலஜி வளர வளரப் பகைவன்யாருன்னே தெரியாம இருக்கே,” என்றார் சசிதரன் கவலையுடன்.
ரூபன்அமைதியாகச் சொன்னார், “உண்மைதான் சசிதரன் சார். ஆனா கவிவர்ஷன் இதையெல்லாம்தாண்டி ஒரு அழகான உலகத்தைஉருவாக்குவான். அவன் ஒரு மௌனமானபுரட்சியாளன்,” என்றார்.
மேனகாவும்மீனாவும் ராகாவிற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அந்த வீட்டில் இருந்தஒவ்வொரு கல்லும் இப்போது அன்பின் மொழியைப் பேசிக் கொண்டிருந்தன.
