ஜீவன் உன்னைத் தேடுதே
தன்மேல் உயிர் காதல் கொண்ட பாவையவளின் உடலை மட்டும் காதலித்து தன் தேவை நிறைவேறியதும் சொல்லாமல் கொள்ளாமல் அவளை விட்டு நீங்கிட, ஆடவன் தன்னிடம் கூறிய காதல் உண்மையென நம்பி நித்தமும் அவன் வருகைக்காக காத்திருந்த பாவையுடன் சரசமாடியதை முற்றுமுழுதுமாய் மறந்து தன்னுடன் பணி புரியும் நங்கையில் உண்மை நேசம் கொள்கிறான் நாயகன். நங்கையவளின் சம்மதத்துடன் நிச்சயத்திற்கான தேதியும் குறிக்க, பெண் பாவத்தை சுமக்கும் உன்மேல் துளியளவும் காதலில்லை என நிச்சயதார்த்தத்தை நிறுத்தும் நங்கையோ அவன் செய்த தப்பைக் சுட்டிக் காட்டி அவனை விட்டு விலக நினைக்கின்றாள். எதற்காகவும் நங்கையை இழக்க முடியாத நாயகன் தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட நினைத்த நேரம், தன்னில் உயிர் நேசம் கொண்ட பாவையோ தன்னிலை மறந்து அவனையே நினைத்து சித்தம் கலங்கிப் போயிருப்பதை தெரிந்து கொள்கின்றான்.
இறுதியில் நாயகன் கரம் கோர்க்கப்போவது
தன் மனம் கவர்ந்தவளுடனா? தன்னால் மதி மறந்தவளுடனா?
