வீழ்ந்தேனடி உன் விழியில்
திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம்.
தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன்.
சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள்.
இவர்களில் யார் நினைப்பது நடக்கும்.
பார்க்கலாம்.
