வெந்து தணிந்த இதயம்
கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.
ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.
அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?
தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?
விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?
காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?
அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.
