நித்யா நந்தாவைவும் தன்னையும் பிரித்து விடுவார்களோ? என்ற பயத்தில் இருக்க.
தாயைப் பார்க்க வந்திருந்தவன். ஒருவாரம் இருந்துவிட்டு போகும்போது தலையில் கட்டுடன் வர முழுமையாக பயந்துவிட்டாள்.
” என்ன ஆச்சு?”என்று கேட்க.தன் தந்தையின் செயல்தான் என்று உணர்ந்து இருந்தாள்.அத்தோடு ஊரில் உள்ள ஒரு சிலரும் இப்படி வேற மதத்து புள்ளையை கல்யாணம் பண்ணிட்டு ஆயுசுக்கும் பயந்துகிட்டு இருக்கணுமா ?என்று கூறி இருக்க.
மொத்தமாக பயந்தவள். அவனுடன் ஒன்றிய படி இருந்தாள்.அவளது பயத்தை புரிந்து கொண்டவன்.அவளை இங்கு அழைத்துக் கொண்டு வராமல் அவன் மட்டும் வர போக இருந்தான்.
அப்படி இருக்கும் நிலையில் தான் அவள் கருவுற்று இருந்தாள்.அவன் இங்கு வந்து இருந்த நேரத்தில் கருவுற்றிருந்தவள்.அவன் தன்னை தேடி வராமல் சென்று விடுவானோ?என்று பயத்திலே அஞ்சி நடுங்கிட குழந்தை கலைந்திருந்தது. இரண்டாவதாக தங்கிய குழந்தைதான் இப்பொழுது இருக்கும் இனியா.
அவளது பயத்தை புரிந்து கொண்டு,வீட்டிலும் பேசி இருந்தான்.பெற்றவளும்,கூட பிறந்தவள் அவளது பயத்தை உணர்ந்து இருக்க,” அப்பப்போ வா நந்தா.நாதா இங்க இருக்க இல்ல பாத்துக்குறேன்.அவ இங்க வந்தாலும் நம்ம ஊர்க்காரங்க பேசறதுல பயந்துட்டா “என்று கூறி அனுப்பி இருந்தார்கள்.
இவர்கள் இடம் கொடுத்ததால், தான் நம்பிக்கை கொடுத்ததால், தான் அதான் தாயைப் பார்த்துக் கொள்ள அக்காவும்,அக்காவை பார்த்துக்கொள்ள தாயும் என மாற்றி மாற்றி இருக்கிறார்கள். தன்னை நம்பியவளை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இருவரிடமும் ஆயிரம் பத்திரமும் கூறியவன்,நேராக அக்காவின் மாமியார் வீட்டிற்கு சென்று,அங்கும் பேசி விட்டு தான் கிளம்பியிருந்தான்.
ஆரம்பத்தில் அவன் திருமணம் செய்து வந்த புதிதில் சித்ரா தான் “வேற மதத்து புள்ளையா ?”என்று கேட்டிருந்தார்.”வேற மதமா இருந்தா என்ன ?”என்று அவரையும் சரி கட்டியவன். இப்பொழுது பிரச்சனையை கூற.
” இங்கதான் நாங்க இத்தனை பேர் இருக்கோமே உன் அக்காவையும், உன் அம்மாவையும் பார்த்துக்க மாட்டோமா?” என்று கூறி சித்ரா தான் அனுப்பியும் வைத்திருந்தார். ஆனால் ,சுத்தமாக இங்கே அவன் வராமலே இருப்பான் என்று யாருமே எண்ணவில்லை.
முதல் குழந்தை கலைந்தது. அடுத்த குழந்தையின் வரவு,அந்த குழந்தைக்கு அவ்வப்போது வரும் உடல்நல பிரச்சனை,இவளது உடல் வீக்காக இருப்பது என்று ஒவ்வொன்றாக அவன் இங்கு வர முடியாமல் தடுத்துக் கொண்டே இருந்தது.
இப்படியே வருடங்களும் ஓடிவிட்டது.இப்பொழுது தாயைப் பார்க்க ஓடி வந்து விட்டான். காலையில் அவன் கண்விழித்ததே சித்ராவின் போன் அழைப்பில் தான்.இரவு தூங்காமல் அடித்துப் பிடித்து வந்தவன்.தாய் ஓரளவுக்கு நன்றாக தான் இருக்கிறார்.10 மணி அளவில் டாக்டரை பார்த்தால் போதும் என்று வீட்டில் இருந்து கிளம்பும்போது ,தனக்கு தெரிந்த மருத்துவருக்கு அழைத்து டோக்கன் போட்டு இருந்ததால்,10 மணிக்கு சென்றால் போதும் என்று படுத்தவன்.
காலை 8 மணி அளவில் அக்காவின் மாமியார் போன் அழைப்பில் கண்ணை தேய்த்தபடி எரிச்சலுடன் எழுந்து அமர்ந்தான். மனைவியாக இருக்க கூடும் என்றுதான் நினைத்தான். சித்ராவிடம் இருந்து வரவும், யோசனோடு போனை எடுத்து, “சொல்லுங்க ?”என்றான்.
“என்னத்தடா சொல்றது?சும்மா சும்மா உன் அக்கா என் அம்மாவ பாக்க போற,ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு தையத் தக்கன்னு குதிச்சுகிட்டு நின்னுட்டு இருக்கா, கேட்டா என்கிட்டயும் சண்டைக்கு வரா,என் மகன்கிட்டயும் சண்டைக்கு போறா ,என்ன நெனச்சிட்டு இருக்கா உன் அக்கா? அப்படியே கையோட வந்து உன் அக்காவையும் கூட்டிட்டு போய் உங்க வீட்ல உட்கார வச்சுக்க, அப்படியே பிரசவம் பார்த்து அனுப்பிவிட்டுடு சரியா? எனக்கு என்ன தலை எழுத்தா?என் பேர புள்ளைங்களையும் பார்த்துகிட்டு இப்படி உன் அக்காவையும் பார்த்துகிட்டு இருக்கனும்னு”
அமைதியாக அவர் கூறுவதை கேட்டவன்.”அவ ஒன்னும் இங்க வரத் தேவல.நான் ஊருக்கு வந்துட்டேன் ,என் அம்மாவை பார்த்துக்க எனக்கு தெரியும், உங்க மருமகளை நீங்க பார்த்துக்குங்க”
“ஏன் எனக்கு என்ன தலை எழுத்தா? இவளை உட்கார வச்சி வடிச்சி கொட்டனும்னு “என்றார் மீண்டும்,
“ஏன் அவ செஞ்சு போடும்போது, அவ வேலை செய்யும்போது, உட்கார்ந்து தின்னிங்களே அப்போ தெரியலையா? அவளுக்கு மட்டும் என்ன தலையெழுத்தா ? உங்களுக்கெல்லாம் வடிச்சு கொட்டணும்னு” என்றான் இவனும் சீற்றத்துடன்,
சிரித்தபடியே பேச ஆரம்பித்தார். சிரிப்பை அடக்கிக் கொண்டு, “வந்து கூட்டிட்டு போவியா மாட்டியா?”
” அதான் அங்க நீங்க,உங்க மக, உங்க வீட்டுக்காரர்,உங்க பையன்னு இத்தன பேர் இருக்கீங்களே? இத்தன பேருக்கும் சேர்ந்து தானே இத்தனை வருஷமா வேலை செஞ்சுட்டு இருந்தா,அவளுக்கு முடியாம இருக்க கொஞ்ச நாள் நீங்க செஞ்சா குறைஞ்சிட மாட்டீங்க, வைங்க,என் அம்மாவை பார்த்துக்க எனக்கு தெரியும்,நான் பாத்துக்குறேன்.உங்க மருமக ஒன்னும் பார்க்க தேவையில்லை, அதையும் சொல்லிடுங்க”
பிடி கொடுக்காமல் பேசுகிறானே! என்று யோசித்தவர்.”அவளே முடியாம தான் படுத்து கிடக்கா. இப்ப என்கிட்ட கத்தும் போதே ரெண்டு முறை வாந்தி எடுத்துட்டா, அப்பயும் அங்க வரணும்னு குதிச்சிட்டு நிக்கிறா,இவலயும் கையோட கூட்டிட்டு போய் உன் வீட்டில் வச்சி பாத்துக்க,அதான் இங்கதான வந்திருக்க, வச்சு பார்த்துட்டு உடம்பு சரி பண்ணிவிட்டு போ,உன் கூட பொறந்தவ தானே!” என்றவுடன் “வைங்க போன” என்று பட்டென்று வைத்து விட்டான்.
அவருக்கு “சப்” என்று இருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது.
பாவமாக பார்த்துக்கொண்டு, முழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது, என்னவோ சுதா தான்.
“என்ன ?”என்ற ஆதியிடம் சுதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க.
நேசன் நேற்று இருந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியிருந்தார்.
சுதாவை பார்த்தான்.அவள் இப்பொழுது வரை இப்படி ஒரு விஷயத்தை கூறவில்லை அவனிடம்.அவளுக்கு சிறு பயம் வேறு, திட்டி விடுவானோ? என்று,
இங்கு,சித்ரா போன் செய்து விட்டு வைக்கவும், நித்யா தன் கணவனுக்கு அழைத்திருந்தாள்.
” சொல்லுடி உனக்கு என்ன பிரச்சனை?”என்றான் எடுத்து எடுப்பில்,
” என்ன ஆச்சு நந்தா.அத்தைக்கு எப்படி இருக்குன்னு கேட்க தான் போட்டேன்.நீங்க போன் போட்டு வீட்டுக்கு போயிட்டனு சொல்லலையா அதான்” என்றாள் சிறிது குரலை குறைத்து,
” அம்மா நல்லா இருக்காங்க. ஹாஸ்பிடலுக்கு போகணும் இனி தான்”
அதன் பிறகு தான் அவன் கத்தியதை உணர்ந்து, “என்னாச்சு ஏதாவது பிரச்சினையை அத்தைக்கு ?”
“இனிமே தாண்டி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்”
” அப்புறம் ஏன் கத்துனீங்க ?”
ஒரு சில நொடி கண்ணை மூடி திறந்தவன்.இப்பொழுது வரை சுதாவின் பிரச்சனையை இவளிடம் சொல்லவில்லை மறைத்து இருந்தான்.அது தனக்கே உறுத்தவும் ,கண்ணை மூடி திறந்து மொத்தத்தையும் கொட்டி இருந்தான்.
” என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? அப்போ என்னை யரோனு தான் நினைச்சு இருக்கீங்க? நான் யாரு உங்களுக்கு ?இப்போ வரைக்கும் ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லவே இல்ல இத பத்தி ?”என எகிறியவள் வைத்துவிட்டாள்.
‘ இப்பொழுது இவளை வேறு சமாளிக்க வேண்டுமா? ‘என்று யோசித்தவன் .தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு வந்து, இவளை பார்த்துக் கொள்ளலாம் என்று தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தான்.
அனைத்தும் சரியாக இருக்கிறது, பெட்டில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை,நேரத்திற்கு சத்து மாத்திரை போட்டால் போதும் என்று கூறி அனுப்பி இருக்க.
எப்படி என்றாலும் தாயுடன் இருந்து விட்டு செல்வதாக தான் வந்திருந்தான்.அதுவும் தாய் கேட்ட கேள்வியில், இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு கூட செல்லலாம் என்று யோசனையில் ஆழ்ந்த படி வீட்டிற்கு வந்திருந்தான்.
டெஸ்ட் எடுத்து அனைத்தும் முடிந்து அவன் வீட்டிற்கு வருவதற்கே 3 மணி ஆகியிருக்க. அவர்கள் வரும் நேரம் வீட்டு வாசலில் மகளை வைத்துக்கொண்டு கன்னத்தில் கை வைத்து தாங்கிபடி உட்கார்ந்திருந்த மனைவியைத்தான் கண்டான்.
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.மருமகளை பார்த்த கமலா தான் வேகமாக கீழே இறங்கி ,”வா நித்யா எப்ப வந்த? வரன்னு சொல்லவே இல்ல?, இவன் கூட சொல்லவே இல்லையே? “என்று மகனை திரும்பிப் பார்க்க.
அவனே அதிர்ச்சியில் இருப்பதை உணர்ந்தவர்.அவன் தோளில் தட்டி விட்டு,வேக வேகமாக வீட்டு கதவை திறந்து விட்டு, பேர பிள்ளையை வாங்க கை நீட்ட அவளும் கொடுத்து இருந்தாள்.
அவனோ, இன்னும் முழித்துக் கொண்டு நின்றான்.”கிளம்புங்க நம்ம ஒரு இடத்துக்கு போகணும்” என்றாள்.
ஒன்றும் புரியாமல் முழித்தார் கமலா.’ அவ்வளவுதான்! மகனை அழைத்துக் கொண்டு செல்ல போகிறாளோ மருமகள்’ என்று சிறு அச்சம் கமலாவிற்கு,
“நீங்களும் தான் வாங்க” என்றாள்.
” எங்கம்மா?”
” வாங்க சொல்றேன்”என தான் எடுத்துக் கொண்டு வந்த பையை மட்டும் வீட்டின் உள் வாசப்படியில் வைத்துவிட்டு ,வீட்டை பூட்டியவள் .மாமியாரிடமே மகளை கொடுத்துவிட்டு ,கணவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு, தான் வந்த கார் அங்கு ஒரு மூலையில் இருக்க .அதிலேயே அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள் சுதா வீட்டை நோக்கி.
போகும் வழியெங்கும் “என்ன? எங்க ?”என்று கேட்டதற்கு பதில் கூறாமல் ,சுதா வீட்டில் வந்து இறங்கவும்,
” எதுக்குடி? இங்க?” என்றான்.
” அமைதியா வாங்க..” என்றவள்,”சித்ரா மா சித்ரா மா” என்று கூச்சல் இட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தாள்.
“எவடி அவ என் வீட்டுக்குள்ளேயே வந்து என் பேர சொல்லி ஏலம் போட்டுட்டு வர்றது?” என்று முந்தானையை இழுத்து சொருகிய படி வந்தார்.
“உங்க வீட்ல உங்க பேரை சொல்லாம ?பக்கத்து வீட்டுக்காரங்க பேரா சொல்ல முடியும்”
“வாடியம்மா ஊர் பக்கம் வராத மருமகளே! என் மருமகளுக்கு கிடைச்சிருக்க தம்பி பொண்டாட்டி. சட்டமா சவடால் விடுறா ?”
“எங்கு இருக்காங்க அண்ணி”?”
“இத்தனை வருஷமா எங்க போனா?”
“அது இருக்கட்டும்.அது தனி பஞ்சாயத்து ,அதை நான் பாத்துக்குறேன் .அது அவங்களுக்கும் எனக்குமானது. என்னவோ அண்ணியை தகாத வார்த்தை எல்லாம் பேசி கோர்ட் வரைக்கும் இழுத்து அடிச்சீங்களாமே?”
“என் மருமகளை நான் என்னத்தையோ பேசுற? மாமியார்னு ஒருத்தி இருக்கிறது தெரியாம ஊரு விட்டு போய் வாழ்ற நீ எல்லாம் பேசக்கூடாதுடி”
அவர் வார்த்தையில் உள்ளுக்குள் ஒரு நிமிடம் வலித்தாலும், அமைதியாக அவரை முறைத்து பார்த்தவள்.” அண்ணி! அண்ணி!” என்று குரல் கொடுக்க,
தூக்கத்தில் அசதியில் இருந்தவள். அடித்து பிடித்து எழுந்து வர,அங்கு தம்பி மனைவியை குடும்பத்துடன் பார்த்தவள்.பேந்த பேந்த முழித்தபடி வந்து நிற்க.
” என்ன அண்ணி எப்படி இருக்கீங்க? உடம்பு பரவாயில்லையா? என்ன பண்ணுது உங்களுக்கு ?”என்று அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்தபடி கேட்க.
ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு,நந்தாவும் அமைதியாக தான் பார்த்தான்.
” உங்கள தான் அண்ணி”என்று கேட்டுக் கொண்டே வந்து உட்கார வைத்தாள்.
“எப்படி நீங்க அண்ணியை பேசக்கூடாது வார்த்தை எல்லாம் பேசி,கோர்ட்டுக்கு இழுத்து அடிப்பீங்க ?”
“பேசுனது தான் நானு,கோர்ட்டுக்கு இழுத்துட்டு போனது உன் மாமியா, பேசணும்னா நீ உன் மாமியார் கிட்ட போய் சண்டை போடுடி .என் மருமகளை நான் என்னத்தையோ பேசுறேன், உனக்கு என்ன வந்துச்சு ?இவ்வளவு நாளா எங்க போனா இந்த அண்ணி ,இப்பதான் அண்ணி நொண்ணின்னு கிட்டு வர”
“முன்னாடியே தெரிஞ்சி இருந்தா முன்னாடியே வந்து இருப்பேன். எனக்கு விஷயம் தெரியாதே! இப்போ தான தெரியும்,என் அண்ணிக்கு ஒன்னொன்னா கேட்க ஆள் இல்லனு நினைச்சீங்களா? நான் இருக்கேன். இன்னொரு முறை ஏதாவது பேசிப் பாருங்க? அதுக்கப்புறம் நீங்க என்ன அண்ணியை கூட்டிட்டு போக சொல்றது,உங்கள குடும்பத்தோட நான் ஜெயில்ல உட்கார வைக்க வேண்டி வந்துரும்!இப்பயும் நீங்க பேசின வார்த்தை எல்லாம் போய் சொன்னா வைலன்ஸ் கேஸ்ல புடிச்சு உக்கார வச்சுருவாங்க பாக்குறீங்களா ?”என்று விரல் நீட்டி எச்சரிக்கை விட,
லேசாக வந்த சிரிப்பையும் அடக்கியவர்.”வந்துட்டா இம்புட்டு நாளா இல்லாம,அம்புட்டு அக்கறை இருக்கவளா இருந்தா,என்னால முடியலடி ஆத்தா உன் அண்ணிக்கிட்ட ,காலம் போன காலத்துல, ஒரு நாளைக்கு ஒன்பது தரம் வாந்தி எடுத்துட்டு இருக்கா,இவளுக்கு ஜூஸ் போட்டு கொடுக்க, அப்பப்ப பழம் அறிஞ்சு கொடுக்க எனக்கு இடுப்பு ஒடியது, கூட்டிட்டு போய் பாத்துக்க, இரண்டாவது புள்ள பெத்த பிறகு கொண்டு வந்து விடு,புகுந்து வீட்டுல தான் ரெண்டாவது பிள்ளையை பாக்கணும்னு அவசியம் இல்ல ,பொறந்த வீட்டுலயும் பார்க்கலாம்,காசு கூட தந்திடுறோம்”
“ஒன்னும் வேணாம்.எங்களுக்கு தெரியும் எங்க வீட்டு பொண்ணை பாத்துக்க,அது ஒன்னும் நீங்க சொல்லத் தேவையில்லை,எங்க உங்க பையன் ?”
“அவன் ஏண்டி இந்த நேரத்துல வூட்டுல இருப்பான்.வேலை வெட்டி இல்லாம,மாமியாக்காரி மொத கொண்டு பாக்கணுமாச்சே! அவன் வேலைக்கு போனா தானே பார்க்க முடியும்.ஒன்னுக்கு மூணு புள்ளை வேற ஆக போது இல்ல”
அவரை மேலும் கீழும் பார்த்தவள். எதுவும் பேசாமல்,” நீங்க வாங்க அண்ணி, நம்ம வீட்டுக்கு போகலாம்”
” கூட்டிட்டு போ”
” கூட்டிட்டு போறேன் தான். அப்படியே மொத்தமா கூட்டிட்டு போயிடுவேன்னு கனவு கண்டுட்டு இருக்காதீங்க,எங்க வீட்டு பொண்ண மாசமா இருக்க நேரத்துல வச்சு பாத்துக்க தான் கூட்டிட்டு போறோம்.இது தான் சாக்குனு தள்ளிவிட்டு நிம்மதியா இருக்கலாம் நினைக்காதீங்க, பசங்க வந்தா அனுப்பிவிடுங்க அண்ணன் கையில, அண்ணனையும் வர சொல்லுங்க”என்றவள் கையோடு தன் நாத்தனாரையும் அழைத்துக் கொண்டு புகுந்து வீட்டிற்கு சென்றிருந்தாள்.
அங்கு நந்தா ,கமலா ஒரு வார்த்தை பேசவில்லை. இருவருக்கும் அதிர்ச்சி,நித்யா இங்கு வந்ததே அதிர்ச்சி! கையோடு சுதா வீட்டிற்கு அழைத்துச் சென்றது அதைவிட அதிர்ச்சி! இவை அனைத்தையும் விட பெரியவர் என்று எதையும் யோசிக்காமல்,தப்பு என்றால் தப்புதான் என்று தவறை சுட்டிக்காட்டி நாத்தனாருக்காக வாதாடி சித்ராவிடம் பேசிவிட்டு வந்தது அதிர்ச்சி!கையோடு சுதாவை அழைத்துக் கொண்டு வந்ததும் அதிர்ச்சி! அதிர்ச்சியிலே வீடுவரை வந்திருக்க.
சுதாவை அழைத்துக் கொண்டு வந்து ஹாலில் உட்கார வைத்தவள்.தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து,” இப்போ உங்களுக்கு பரவாயில்லையா ?என்ன சாப்பிடுறீங்க ?ஏதாவது சாப்பிட்டீங்களா?” என்று விசாரிக்க.
ஒரு சில நொடிக்கு பிறகு , அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.
“இந்த நேரத்தில் எதுக்கு அழுவுறீங்க?”
” இல்ல நித்யா அது” என்றவள் தடுமாற,
“என்ன ஆச்சு அண்ணி?”
“என்கிட்ட உன் புருஷன் பேசியே மாச கணக்காவுது என்ன வெறுத்துட்டான்னு நினைச்சிட்டேன்,அப்படி என்ன நான் பாவம் பண்ண?பிரச்சனை வந்து இங்க உட்கார்ந்திருந்ததால் என்ன வீட்டுக்கு போக சொன்னான்.இல்லனு நான் இங்க இருந்ததுக்கு மொத்தமாக என்ன மறந்துட்டான் தானே!”என அழுதாள்.
கணவனை கேள்வியாக பார்த்தாள்.இத்தனை நாட்களில் கேட்க, நல்லா தான் இருக்கா என்று கூறி இருந்தானே!ஆனால் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதையே இன்று தானே கூறுகிறான்.அதுவும் இன்று தானே! என்று யோசித்தவள் சுதாவின் புறம் திரும்பி,” அண்ணி அவரும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருந்தா? ஒருவேளை நீங்க திரும்ப ஆதி அண்ணா கூட போய் சேராமல் இருப்பீங்களோ? என்று பயந்து திட்டி இருந்திருப்பாரு.மத்தபடி உங்க மேல பாசம் இல்லாமல் எல்லாம் கிடையாது.அவருக்கு நீங்கனா எவ்வளவு உசுருனு உங்களுக்கே தெரியும் நான் சொல்ல வேண்டியது இல்ல,நான் இப்போ வந்தவ.அவரு என்னதான் எனக்காக அங்க இருந்தாலும் கூட, அவரோட மொத்த உலகமும் நீங்களும்,அத்தையும் தான். உங்களை சுத்தி தான் வரும் அவரு நினைப்பு எப்பவும்”
” உனக்கு உடம்பு பரவாயில்லையா நித்யா ?”என்று மாமியாரும் அருகில் வர ,
“ஏத்த உங்களுக்கு கூட அண்ணிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு சொல்ல தோணலையா என்கிட்ட?”
“இல்லம்மா அது” என்றவர் தடுமாற,
“ஒரு வேலை ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் சொல்ற போல உங்க பையன உங்க கிட்ட இருந்து பிரிச்சுருவேன்னு நினைச்சிட்டீங்களா?”
“ஐயோ! அப்படியெல்லாம் இல்ல நித்யா” என்று நாத்தனார், மாமியார் இருவரும் அவள் கையை பிடிக்க,
“எனக்கு பயம் தான்.மத்தபடி உங்க கிட்ட இருந்து அவரை பிரிக்கணும் என்று நினைக்கல.ஆனா ,இப்போ அவரே என்ன அங்க தனியா விட்டுட்டு வர யோசிக்கிறாரு, எனக்கு அவரு அங்க வந்துருவாருன்னு நினைப்பிருந்தாலும்,அப்பப்ப என்ன மீறி வர பயத்தை என்னால தடுக்க முடியல.மத்தபடி அவர் உங்க கிட்ட பேசறதோ, பார்க்கிறதுளையோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லத்தை” என்றாள் மாமியாரை கட்டிக் கொண்டு அழுத்தபடி,
“இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க? ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்க வீட்டுக்கு இப்படி என்னத்துக்கு அழுத்துட்டு இருக்க?” என்ற சுதா தம்பிக்கு கண்ணை காட்ட.
அவனும் நித்யாவை அமைதி படுத்தியவன்,அக்காவின் அருகில் வந்து உட்காந்து அவள் கையை பிடிக்க,
” போடா அங்கிட்டு, உனக்கு நான் யாரோ தானே?”
சிரித்தாள் நித்யா.
“என்கிட்ட கூட ஒரு வார்த்தை நீயும் சரி,அவனும் சரி சொல்லல தானடி? அவன் பேசவே இல்லன்னு என்கிட்ட ஒத்த வார்த்தை சொல்லவே இல்ல?”
” சொல்லி மட்டும் என்ன ஆகிட போது, அதுக்கும் சேர்ந்து நீதான் விசன பட்டுட்டு இருப்ப ?அதான் சொல்லல ” என்றாள் சுதா.
” என்ன பேசிட்டு இருக்கீங்க குடும்பமா உட்கார்ந்து?” என்றபடி ஆதி குழந்தைகளுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
” வாடா மச்சினனே! எத்தன வருஷம் கழிச்சு இந்த வீட்டு வாசப்படி மிதிச்சிருக்க?”
“என்ன மாமா நக்கலா?”
“ரொம்ப தாண்டா.இப்போ என்ன உன் அக்காவை கொஞ்சி கொலவுற. இத்தனை மாசமா அவ கிட்ட பேசாம தான டகால்டி காட்டிட்டு இருந்த?”
“அப்போ அவன் என்கிட்ட பேசலனு உங்களுக்கு தெரியுமா ஆதி?”
” போச்சு! நம்மளே வாயைத் திறந்து போட்டு கொடுத்துட்டமோ?”என அவன் தலையை சொரிய.
“நீங்களே வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டீங்க மாமா ?”என்றான்
சிரித்து நந்தா,
” அடிங்! உன்னால தாண்டா” என்று அங்கிருந்த பொருளை தூக்கி எறிய,
மாமனும் ,மச்சானும் ஓடிப் பிடித்து வெளியே வந்தார்கள்.
இப்பொழுது வரை ஆதியிடம் தினமும் இல்லை என்றாலும், இரு நாட்களுக்கு ஒரு முறை பேசிக்கொண்டு தான் இருக்கிறான் நந்தா.அக்கா பிரச்சினையை பற்றி பேசியவன். எப்படினாலும் ,அவளை கூட்டிட்டு வர்றது உங்க பொறுப்பு என்று கூறினான்.
அவள் பிரச்சனை முடிந்து அவனுடன் வந்த பிறகு நந்தாவிடம் பேசாமல் இருப்பதையும் கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகே உணர்ந்து இருந்தான்.
” ஏண்டா நந்தா?” என்று கேட்க.
” ஏன்னா?அவளுக்கு எப்படினாலும் ஏதாவதுனா வந்து நிப்பாங்க என்ற தைரியத்துல தான் வந்து நின்னுட்டா? உங்க மேல தப்பு இருந்தா கூட பரவாயில்லை”
“அப்போ என் மேல தப்பு இல்லன்றியா ?”
“இருக்கு மாமா.இல்லன்னு சொல்லல.ஆனா, அதுக்காக” என்றவன் தடுமாற,
” சரி விடுடா.ஆனா, குடும்பத்தோட என்ன விட்டுக் கொடுக்காம இருக்கீங்க டா,அப்படி இருக்க உன் அக்காவை தான் நான்” என்றவனும் அமைதியாக,
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல மாமா. நீங்க கண்டதையும் யோசிக்காதீங்க “
அப்படித்தான் சந்தோஷமாக அவர்களின் பேச்சுவார்த்தை தினமும் செல்லும்.
அவனும் இவனிடம் பேசும் போது, “உன் அக்கா கிட்ட பேசுடா”என்று கூறும் போதெல்லாம்,” பேசிக்கலாம் பேசிக்கலாம். இப்ப என்ன அவசரம் ?அவளுக்கு திரும்ப என்ன கூப்பிட்டு பேசணும்னு தோணல, அப்பறம் என்ன ?”என்று அமைதியாகி விட்டான்.
‘என்னதான் தம்பி திட்டி விட்டிருந்தாலும்,அதன் பிறகு தனக்கு என்றால் தம்பி ஓடி வருவான் என்று எண்ணி தனக்கு அழைத்து கூற வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது வரை வரவில்லையே’ என்ற வலி தான் அவனுக்கு அப்படியே விட்டுவிடுவேன் என்று நினைத்துவிட்டார்கள் போல, அம்மாவும், மகளும் என்று தாயையும் சேர்த்து வறுத்து எடுத்தான்.
இப்போது,சித்ரா அழைக்கவும், ஓடோடி வந்து விட்டான். குடும்பமாக உட்கார்ந்து சிரித்து பேசியபடி இருந்தனர்.
அதன் பிறகு,அங்கு ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்க முடியாமல், கணவனுக்கு கண் காட்டிவிட்டு ரூமுக்கு சென்று இருந்தாள் ஆதியின் சரிப்பாதி.
“மாமா ஓடுங்க.அக்கா கூப்பிடுறா” என்று கூச்சல் போட,
“எல்லாம் உன்னால தான்”என்று அவன் தொடையில் கிள்ளிவிட்டு சிரித்தபடி ரூமுக்குள் நுழைந்தான்.
அவளோ,ரூமில் பத்திரகாளி அவதாரத்தில் இருந்தாள்.அவன் சென்றவுடன்,மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்ள,
“சுதா அம்மு!” என்று அவளிடம் போக,
“நீங்க ஒன்னும் என்கிட்ட பேச வேணாம்.அப்போ உங்க கிட்ட பேசுறான்.என்கிட்ட தான் பேசல? அவன் என்கிட்ட பேசலனு தெரிஞ்சு இருந்தும் நீங்க அமைதியா தான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?அவனுக்கு அப்போ நான் முக்கியம் இல்ல, நீங்க தான் முக்கியமா போயிட்டீங்க இல்ல?”
” இந்த சண்டையை நீ உன் தம்பி கிட்ட போடணும்டி, என்கிட்ட போட்டுட்டு இருக்க ?”
“ஓ! அவன் கிட்ட போடணுமாமே? அதான் நான் வேணாம்னு சொன்னானே?இங்க எதுக்கு வந்து உக்காந்திருக்க ?உன் சம்பளத்திலே சாப்பிட்டாலும் இது என் வீடுன்னு சொல்லாம சொல்லிட்டான்”
” லூசு மாதிரி பேசாத சுதா! அவனே இருந்திருந்து ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்கான், காதுல விழுந்தா தப்பா போயிரும், கஷ்டமாயிடும் “
“அவனுக்கு மட்டும் தான் கஷ்டமா இருக்கும்? எனக்கெல்லாம் கஷ்டமா இருக்காது.இப்போ வரை ஒரு போன் போட்டு என்ன ஆச்சு? ஏதாச்சும் கேட்டானா ?அதைக்கூட விடுங்க மாசமா இருக்கேன்னு தெரிஞ்சும் எப்படி இருக்கு? ஸ்கேன் பண்ண போனியா? புள்ள எப்படி இருக்குன்னு கேட்டு இருப்பானா ?உங்க மூலமா ,அம்மா மூலமா கேட்டா போதும்,அப்ப நான் வேணா தானே! வேண்டாதவ தானே நான்.கெளம்புங்க இங்க இருந்து நம்ம என்ன பண்ண போறோம் ?சொன்னாலும் சொல்லாட்டியும் இது அவன் வீடு தானே! என்னதான் அம்மா வீடா இருந்தாலும்,அம்மாக்கு அப்புறம் அவனுக்கு சேர வேண்டியது தானே! இனியும் அவன் வீட்டுல இருந்து நான் என்ன பண்ண போற ?” என எழுந்து கொள்ள முயற்சிக்க,
” லூசு மாதிரி பேசாத சுதா நீ கோவத்துல பேசுறதெல்லாம் கூட அவன் காதுல விழுந்துச்சுனா ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கும்,தங்கச்சி வேற கூட வந்து இருக்குது”
” அப்போ அவங்களுக்காக எல்லாம் பாப்பிங்க? என்ன பத்தி யோசிக்க மாட்டீங்க?”
வேகமாக அவளை கட்டி அணைத்து முத்தமிட்டு,” நான் இப்ப இல்லடி எப்பயும் உன்னை பார்ப்பேன் டி. விட்ற மாட்டேன்டி! ஒவ்வொரு முறையும் என்ன சோதிக்காத சுதா! உன்ன பாக்காம எங்க போய்ட போற? நீ சொல்றதுல உண்மையாவே உன்ன விட்டு கொடுத்துட்ட போல தோணுதடி எனக்கே” என்றான் கண் கலங்க,
“அச்சோ ஆதி! நான் சும்மா சொன்னேன். நீங்க வேற ஏன் அதையே திரும்ப திரும்ப யோசிக்கிறீங்க ?நானே அதை மறந்து,அதுல இருந்து வெளியே வந்துட்டேன்.நீங்க இன்னும் விடாம அதை இழுத்து பிடிச்சிட்டு நிக்கிறீங்க?ஏன்னே தெரியல?”
“எனக்கு தான் கஷ்டமா இருக்கு?
இப்படி எனக்காகவும்,என் குடும்பத்துக்காகவும் தாங்குறவ இல்ல “
“போதும்!”என்று கை அமர்த்தி அவன் இதழோடு இதழ் பொருத்தி அவனை மேற்கொண்டு பேசிவிடாமல் தடுத்திருந்தாள்.
அவள் ஆரம்பித்த வேலையை இவன் இப்பொழுது தொடங்க ஆரம்பித்திருந்தான்.
அவனது கையும் அவளது உடலில் அங்காங்கே அங்கங்களை தடவி கொடுத்தபடி இருந்தது. அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்க.
இருவரும் விலகி இருந்தனர் நொடியில், “சிவ பூஜையில கரடி மாறி வந்தது யாருன்னு தெரியல?” என்று தலையை உலுக்கி கொண்டு, மனைவியை திரும்பி பார்த்து, சிரித்து விட்டு நகர்ந்தான்.
அவளும் புடவையை சரி செய்தபடி இருக்க,
ஆதி கதவைத் திறக்க.நந்தாவின் சிறு மொட்டு இனியா நின்று கொண்டிருந்தாள்.
“அச்சோ தங்கம் நீங்களா? என்ன வேணும் தங்கத்துக்கு?”என்று அவளை அள்ளிக் கொஞ்ச.
“அத்தை!”என்க.
அவளும் வேகமாக வந்து குழந்தையை வாங்கியவள். “சொல்லுடா தங்கம் ?”
“சாப்பிடலாம் வாங்க?”என்றாள். தம்பியைத்தான் திரும்பி முறைத்தாள்.
“அதுக்கு கூட அவனே கூப்பிட மாட்டானா உன் அப்பன்காரன்?”என்று அவனை இடித்துக் கொண்டே வந்து உட்கார,
அக்காவின் தோளில் கை போட்டு அணைத்தபடி தோளில் சாய்ந்தான் “சாரி சுதா”என்றான்.
“போடா அங்குட்டு, பேச எத்தனை மாசம் ஆயிடுச்சு இல்ல?”
” சாரிடி”என்று இருக்காதையும் பிடித்துக் கொண்டு கெஞ்ச.
ஆதியின் பெற்றவர்களும் வந்திருந்தார்கள்.”வாங்க மா” என்று இன்முகத்துடன் வரவேற்றாள் நித்யா.
“என்னடி மா என் வீட்டுக்கு வரும்போது அம்புட்டு சத்தம் போட்டுட்டு வந்த? உன் வீடு தேடி வந்த உடனே வாங்கனு வாய் நிறைய கூப்பிடுற?”
“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே! இது என் வீடுனு அப்புறம் என்ன? வாங்க”
சந்தோஷமாகவே அவளை உச்சி முகர்ந்து நெற்றி முறித்தவர். “அவ்வளவுதான் நித்யா! வாழ்க்கை. எங்கேயும் யாரும் போயிட மாட்டாங்க,முடிஞ்ச அளவுக்கு இங்கேயே குடும்பமா இருக்க பாரு, நீயும் தனியா இருந்து என்ன சந்தோஷத்தை கண்ட சொல்லு ?உன்கிட்ட இருந்து நந்தாவ பிரிக்க வேண்டியது எங்க நோக்கமில்லை.ஊர்க்காரங்க ஆயிரம் பேசட்டும்,நாங்க உன்கிட்ட இருந்து பிரிக்க யாரும் விரும்பல இல்ல,இத்தனை வருஷம் ஆயிடுச்சு,இனி உன் பெத்தவங்க மட்டும் என்ன பண்ணிட போறாங்க ?” என்றார் சித்ரா.
” உண்மைதான் மா. என்னோட பயம்தான் மொத்தமா அவரையும் பெத்தவங்க கிட்ட இருந்து ,கூட பிறந்தவங்க கிட்ட இருந்து பிரிக்கவும் காரணமாயிடுச்சு, என்ன பத்தி யோசிச்சு தானே அத்தையும் ,அண்ணியும் கூட அமைதியா விட்டுட்டாங்க.ஆனா, அவங்களுக்காக நான் யோசிக்காம விட்டுட்டு இருந்துட்டேன்”என்று அவள் வருந்த,
“அப்படி யோசிக்காதவளா? நாத்தனாருக்காக அங்கிருந்து அடிச்சு புடிச்சு புருஷன் கிட்ட கூட சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?”
அதன் பிறகு அனைவரும் அங்கு சந்தோஷமாக இருக்க. நித்யாவையும் இனி இங்கே இருக்க சொல்ல.
“நானும் அப்படித்தானே யோசிச்சு இருக்கேன்”
“என்னடி பட்டுனு இங்க தான் இருக்க போறேன்னு சொல்ற?நான் அங்க இப்போ தானே தொழிலையே தொடங்கினேன்”
“அதுக்கு என்ன இப்போ?பத்து நாளைக்கு ஒரு டைம் இங்கு வந்துட்டு போங்க,நான் இங்கே என் அத்தை,அண்ணியை பாத்துட்டு அவங்க கூட இருக்கேன்” என்றாள் தடாளடியாக,
“அடிப்பாவி!”என்று அவன் வாயில் கை வைக்க,மற்றவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.
“அண்ணி வேற மாசமா இருக்காங்க,அவங்களை பாத்துக்குறதும் நம்ப கடமை தானே!மொத பிரசவம் மட்டுமல்ல எத்தனை பிரசவமா இருந்தாலும், தாய் வீட்டில் பார்க்கிற போல் வராது,நீங்க வேணா அங்க போயிட்டு வேலையை பாத்துட்டு வாங்க,ஒரு ஆறு மாசம் கழிச்சு மொத்தமா இங்க மாத்திக்கிற போல பாத்துக்குங்க.அதுக்கு நடுவுல வர போக இருந்தா மட்டும் போதும்,நான் இங்கிருந்து அண்ணியை பார்த்துக்கிறேன், அத்தைக்கும் அப்பப்ப உடம்பு முடியல தானே!”என்றாள் இவ்வீட்டின் மருமகளாக,
நந்தா சித்ராவைத்தான் பார்த்தான்.அவரும் அவன் அருகில் வந்து தட்டிக் கொடுக்க. “எல்லாம் உங்களால மட்டும் தான் அத்தை.அம்மா சொன்னாங்க”
“போடா”
“போடவா! இதை முன்னவே பண்ணி இருந்திருக்கலாம்”
“என்ன பண்ண எனக்கும் இப்பதானே தோணுது.நானும் அப்ப அப்ப உன் அம்மாவையும், உன் அக்காவையும் திட்டினாலும் உன் அம்மாவுக்கு துணைக்கு இருப்பவளையும் ஏன் பிரிச்சு வைப்பானனு உன் அக்காவை இங்கு வரவிடாம இப்படி இழுத்து பிடிக்காம விட்டுபுட்ட.இப்போதான இந்த யோசனை வந்துச்சு. முன்னவே பண்ணி இருந்தா இம்புட்டு நாளா நீயும் அங்க தனியா இருந்திருக்க வேண்டாம்”
“எல்லாமே உங்களால் மட்டும் தான் அத்தை”என்று சுதா மாமியாரின் தோளில் வந்து சாய்ந்து கொள்ள.
“இப்படிப்பட்ட நல்ல மருமகளை நான் அந்த வார்த்தை பேசி இருக்க கூடாது இல்ல” என்றவர் கண்கலங்க.
“அச்சோ அத்தை மொத இருந்தா” என்று வருந்தினாள்.
அதன் பிறகு குடும்பமாக உட்கார்ந்து பேசி சிரித்து சாப்பாட்டை நித்யாவின் கையிலே பரிமாற,உடன் எழுந்த மாமியாரையும் உட்கார வைத்து பரிமாறி இருந்தாள்.
இதில் மூன்றாயிரம் வார்த்தைகளுக்கு மேல் பதிவிட முடியவில்லை ஆகையால் அடுத்த அத்தியாயமாக பதிவிடுகிறேன் மீதமுள்ள வார்த்தைகளை.
