மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1

  • அத்தியாயம்- 1

நிசப்தமான அந்த இரவில், அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்குள் பற்றி எரிந்த காதலின் தீச்சூடு அறையை நிறைத்திருந்தது. அவனுக்கும் அவளுக்கும் இடையிலான அந்தப் பிணைப்பு இன்று தடைகளை உடைத்துக் கொண்டு தவித்தது.

 

​அவளைத் தன் வலிய கரங்களுக்குள் சிறைபிடித்தான்.

 

அவளது சுவாசத்தின் வேகம் அவனது கழுத்தில் மோதி அவனை நிலைதடுமாறச் செய்தது.

 

மெதுவாக அவளது முகத்தை ஏந்தி, அவள் இதழ்களைச் சிறைப்பிடித்தான்.

 

அந்த இதழ் முத்தம் மென்மையாக இல்லமால் பெரும் பசியாகவும் நீண்ட நாள் தாகமுமாக கலந்திருக்க, அவளது இதழ்களின் சுவையை முழுமையாக வேகத்துடன் அருந்திக் கொண்டு இருந்தான்.

 

​பெண்ணவளிள் தேனிதழிலிருந்து விலகிய கரடுமுரடான உதடோ அவளது மென்மையான கழுத்து சரிவுகளில் ஊர்ந்து, சில கணங்கள் அங்கேயே நிலைகொண்டன.

 

காதல் தேரின் முதல் பயணமாக அந்த அழகிய நொடிகள் தெரிய, மெல்லிய தென்றலாய், அவள் அங்க வளைவுகளில் ஆடவனி ரோமங்கள் உரசிய இதழால் கவிதை பொழிந்தான்.  

 

பெண்ணவளின் நாணத்தின் சிவப்பை கண்டவனுக்கு உணர்ச்சிகளை கட்டுக் கொள் கொண்டு வர இதழ்கள் மீண்டும் இணைய, ஆடவனின் வேகம், கடலெனக் பொங்கியது. உணர்வுகளின் உச்சத்தில், இருவரும் கரைந்தனர்.

 

அது தீண்டல்கள் நிறைந்த பரிசத்தின் முத்தம். ஒவ்வொரு முறை அவனது இதழ்கள் அவள் மேனியில் பதியும்போதும், அவளது உடல் ஒரு மின்சார அதிர்வலையை ஏற்படுத்தியது.

 

அவனது கைகளோ அவளது தேகத்தின் ரகசியங்களை அளவிட்டபடி, அவளது இடையின் வளைவுகளில் ஆழமாக அழுந்தின.

அந்த வளைவுகளில் அவன் பதித்த அங்கவளைப்பு முத்தங்கள் அவளை நிலைகுலையச் செய்தன.

 

நங்கையவளின் தேக்கத்தில் மீதம் இருந்த ஆடைக்கும் மேனிக்கும் இடையிலான இடைவெளி குறைந்து, இரு உடல்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தன.

 

அந்தத் தீண்டலில் தன்னையே அவன் இழந்தான். அவளது இதயம் துடிக்கும் வேகம் அவனது மார்பில் எதிரொலித்தது.

 

அது காமத்திற்கும் காதலுக்கும் இடையிலான ஒரு மெல்லிய கோடு… அந்தக் கோட்டை அவர்கள் அன்று கடந்திருந்த வேலையில்,

 

​திடீரென… மூச்சிரைக்கக் கண்களைத் திறந்தான் ஆதித்யன்.

 

படுக்கை விரிப்புகளை இறுக்கமாகப் பிடித்திருந்த அவனது விரல்கள் நடுங்கின.

 

“கனவு! இது ஒரு கனவுதான்” என்று மெல்ல அவன் உதடு முணுமுணுக்க, மெதுவாக தன் உதட்டை தொட்டு பார்த்தான் பெண்ணவளின் உதட்டின் எச்சம் ஏதாவது ஒட்டிக் கொண்டு இருக்கிறதா என்று.  

 

அப்படி எதுவுமில்லை, 
ஆனால், அதன் தாக்கம் அவன் நரம்புகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்க, எழுந்து அமர்ந்தவன் தன் தலையைக் கோதிக்கொண்டான்.

 

அவனது உடல் இன்னும் அந்தக் கனவின் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தது.

 

அவளது மேனியின் மணம் இன்னும் அவனது நாசியில் தங்கியிருப்பதைப் போன்ற ஒரு பிரமை.

 

“இது வெறும் கனவு தானா, அல்லது என் அடிமனதின் அடக்கப்பட்ட ஆசையா?” என்று அவன் மனம் அவனிடமே கேள்வி கேட்க, “டேமிட்” என்று தன்னையே திட்டிக் கொண்டுவன் எழுந்து குளியலறைக்கு சென்ற நேரம், அவன் கை பேசியில் பதிவு செய்த அதிகாலை நான்கு மணி அலாரம் அடிக்க தொடங்கி இருந்தது.

 

அதிகாலை கனவு பலிக்கும்மா? பலிக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே.

 

அதிகாலை என்பது மனமும் இயற்கையும் அமைதியாக இருக்கும் ஒரு அற்புதமான நேரம். நம்முடைய ஆழ்மனம் (Subconscious Mind) தேவையற்ற இரைச்சல்கள் இன்றி மிகத் தெளிவாக இருக்கும் தருணம் இது.

 

இந்தத் தூய்மையான நேரத்தில் எழும் எண்ணங்கள் அல்லது கனவுகள், பிரபஞ்சத்தின் அலைவரிசையோடு (Universal Frequency) எளிதில் ஒத்துப்போகின்றன.

 

அதனால் தான், அந்தக் கனவுகள் பெரும்பாலும் நம் எதிர்காலத்தின் நிழலாட்டமாக அமைகின்றன.

 

ஆழ்மனதின் வெளிப்பாடு
ஆதியின் விஷயத்தில், அவன் கண்டது வெறும் கனவல்ல, அது அவனது ஆழ்மனதின் அடியாழத்தில் இருக்கும் தீவிரமான ஆசையாக கூட இருக்கலாம்.

 

நாம் எதை நோக்கி அதிகத் தீவிரத்துடன் இருக்கிறோமோ, அதை நோக்கி நம் ஆன்மா நம்மை இழுத்துச் செல்லும் என்பது ஐதிகம்.

 

அதிகாலைக் கனவு என்பது, நம்முடைய ஆன்மா நமக்குக் கொடுக்கும் ஒரு ‘முன் அறிவிப்பு’ (Preview) போன்றது தான்.

 

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்த ஆதி ஜன்னல் வழி தெரியும் அந்த வெளிர் நீல வானத்தைப் பார்த்தான்.

 

தூக்கத்திலிருந்து எழுந்த பிறகும், அந்தக் கனவின் தீண்டலும், அந்தப் பரிசமும், அவளது மணமும் இன்னும் அப்படியே ஆதிக்குள் தங்கியிருந்தது.

 

நேரம் கட்ட நேரத்தில் 
அவன் பாட்டி அடிக்கடி சொல்வது வேறு அவன் நினைவுக்கு வந்து தொலைத்தது.

 

“ஆதி கண்ணா, அதிகாலையில் காண்கிற கனவு, தேவர்கள் நமக்குச் சொல்லும் ரகசியம்டா…​ அது நிச்சயம் பலிக்கும்,” என்று அவன் மனதிற்குள் பாட்டியின் குரல் உரத்துச் சொன்னது.

அவன் சிரித்துக்கொண்டான். ‘ச்சை அப்படியெல்லாம் இருக்காது. ஏதோ பாட்டி அன்னிக்கு நம்ம சொன்னதை வச்சி சொன்னாங்க. அதுக்குனு எல்லா கனவும் பலிக்குமா என்ன?’ என்று நினைத்தவனுக்குள் இன்னுமும்  அந்தக் கனவில் அவள் தேகம் கொடுத்த வெப்பம் இன்னும் அவனது கைகளில் மிச்சமிருந்தது.

 

இது வெறும் மூளையின் கற்பனை என்றால், ஏன் இதயம் இவ்வளவு வேகமாகத் துடிக்க வேண்டும்?

 

அந்தக் கனவு அவனின் கட்டுக்கடங்காத ஆசையின்  இன்பத்தை அல்லவா வாரி கொடுத்து இருக்கிறது. அப்படி இருக்க எப்படி அவனால் சட்டென்று அந்த பிரமையிலிருந்து வெளியே வர முடியும்.

 

பெருமூச்சி விட்டவன் நேரத்தை பார்த்து விட்டு உடற்பயிற்சி செய்ய போனான்.

 

ஒரு வேளை இவன் கனவும் பலித்தால்? அவன் கனவில் அவனோடு இணைந்திருந்த பெண்ணின் நிலை என்னவாக இருக்கும். கனவுகளிலே அத்தனை முரட்டு தனத்தை காட்டுகிறனே. அப்போ நிஜத்தில்?

 

அவளை நேரில் சந்திக்கும் போகும் காலமும் வெகுதொலைவில் இல்லையே. அவளை நேரில் சந்திக்கும் தருணம் எப்படி அவளை எதிர்கொள்ளப் போகிறான்.  

 

அவளை காணும் கணம் அவளைத் தன் வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீவிரமான வேட்கையும் அவனுள் ஒரு சூறாவளியைக் கிளப்பதா?

இது காதலா? இல்ல காமமா? அவளை சந்திக்கும் கணத்தில் அவன் உணரும் கணம் எப்படி இருக்கும்?  

 

ஒரு வேளை காதலாக இருந்தால் அது அவனது ஒவ்வொரு அணுவிலும் ஒரு பித்தனாக அல்லவா அவனை மாற்றி இருக்கும்.

 

சென்னையின் காலை நேரத்து நெரிசல் எப்போதும் போல அந்த சாலைகள் இரைச்சலாக இருந்தன.

 

ஆனால், அந்தப் பெரிய அலுவலகத்தின் பதினெட்டாவது மாடியில் இருந்த தாமரையின் கேபின் மட்டும் அமைதியாக இருந்தது.

 

மேஜை மீது இருந்த டிசைன் பேப்பர்களை மிக நேர்த்தியாக அடுக்கிக் கொண்டிருந்தாள் தாமரை.

அவளது கைவிரல்கள் ஒவ்வொன்றையும் தொடும்போது ஒரு மிக நிதானம் கையாண்டுக் கொண்டு இருந்தாள். எதையும் தேடித் தவிக்காமல், எது எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தாள் தாமரை.

 

​”தாமரை மேனேஜர் ரூம்ல ஒரு மீட்டிங். இன்னைக்கு புது கிளைண்ட் வர்றானு பேசிட்டு இருந்தோம்ல அவர் வந்து இருக்காரு. கொஞ்சம் சீக்கிரமா வா,” என்று ரம்யா குரல் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

தாமரை எழுந்து தன் சுடிதாரைச் சரிசெய்து கொண்டு தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு மேனேஜர் அறையை நோக்கி நடந்தாள்.

 

​மேனேஜர் ராகவனின் அறைக்குள் நுழைந்த போது, அங்கே அட்டகாசமாக ஒரு புதிய மனிதன் அமர்ந்திருந்தான்.

 

கறுப்பு நிற கோட்-சூட் அணிந்து, கையில் ஒரு டேப்லெட்டை வைத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்  ஆதித்யன்.

“வாங்க தாமரை.. இவர்தான் மிஸ்டர் ஆதித்யன். இவரோட ‘ஆதி குரூப்ஸ்’ புது ஹெட் ஆபீஸ் இன்டீரியர் புராஜெக்ட் நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த மொத்த புராஜெக்ட்டையும் நீங்கதான் லீட் பண்ணப்போறீங்க,” என்றார் ராகவன் உற்சாகமாக.

 

மேனேஜர் குரல் கேட்டதும் ​ஆதித்யன் நிமிர்ந்து பார்த்தான்.

 

அவனது பார்வையில் ஒருவிதமான ஆதிக்கமும் கர்வமும் கலந்திருக்க,  தாமரையின் கண்களை அவன் நேருக்கு நேராகச் சில நொடிகள் பார்த்தான்.

 

பின் ​”மிஸ் தாமரை.. நான் ரொம்ப பெர்ஃபெக்‌ஷன் எதிர்பார்க்கிற ஆளு. எனக்கு ஆபீஸ் வெறும் கட்டடமா இருக்கக் கூடாது. அங்க வேலை செய்றவங்களுக்கு ஒரு உயிரோட்டம் இருக்கணும். புரியுதா?” ஆதித்யனின் குரல் அதிகாரமாக ஒலித்தது.

தாமரை தயங்காமல் பதிலளித்தாள். “நிச்சயமா சார். உங்களோட எதிர்பார்ப்பு என்னன்னு எனக்குப் புரியுது. நான் கொடுக்கிற டிசைன் வெறும் கலர்ஸா மட்டும் இல்லாம, ஒரு உணர்வா இருக்கும்.” என்று சொன்னதை கேட்டு,

 

​”உணர்வு..?” என்று ஆதித்யன் நக்கலாகச் சிரித்தான்.

 

“டிசைன்ல என்ன உணர்வு இருக்க முடியும்?” என்றவன் அவளை பதில் பேச விடாமல்,  

 

“சரி, நாளைக்கு காலையில அஞ்சு மணிக்கு என்னோட சைட்ல மீட் பண்ணலாம்.  அந்த நேரத்துல வர்ற வெளிச்சம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.” என்றவனை புரியாமல் நோக்கியபடி,

“சாயங்காலம் அஞ்சு மணிக்கா சார்?” என்றவளை நோக்கி இல்லை என்று தலையை ஆட்ட,

 

“அதிகாலையா” என்று சந்தேகமாக கேட்டவளை நோக்கி,

 

​”ஆமா. ஏன்.. வர முடியாதுன்னு சொல்லப் போறீங்களா?” என்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்ட விதத்தில் அவளுக்கு அவள் கௌரவம் தலை தூக்க,

 

​”கண்டிப்பா வர்றேன் சார். நான் லேட்டா வரமாட்டேன்,” என்று உறுதியாகச் சொன்னாள் தாமரை.

 

அவள் பதிலை கேட்டதுமே ஆதி அங்கே இருந்து எழுந்து 
விறுவிறுவென வெளியேறினான்.
அவனை தொடர்ந்து அவன் பி.ஏ வும் பின் சென்றவன் ஒரு நிமிடம் நின்று அவர்கள் புதியதாக கட்டிக் கொண்டு இருந்த சைட்டின் முகவரியை தாமரையிடம் கொடுத்து விட்டு ஓட்டமாக ஆதியை நோக்கி விரைந்தான்.

 

​தாமரை அவன் போன திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஆதித்யனின் அந்தப் பேச்சு அவளுக்குள் ஒரு இனம் புரியாத நடுக்கத்தை ஏற்படுத்தியது. ‘யார் இவன்? இவ்வளவு அதிகாரமாகப் பேசுகிறான்?’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

பின் அவளும் அந்த அறையிலிருந்து வெளியேற, இப்பொழுது மேனேஜர் தான் திருதிருவென விழித்தபடி அமர்ந்து இருந்தார் அந்த பெரிய அறையில் தன்னதனியாக.

 

“வந்தாய்ங்க, பேசினாங்க, போயிட்டான்ங்க” என்று புரியாத புதிர் போல் அவன் மனநிலை மாறி போனது.

 

​மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய தாமரைக்கு எதிலும் மனம் ஓடவில்லை.

 

ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியே தெரிந்த விளக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இருட்டு மெல்லக் கவியத் தொடங்கியது.

 

அந்தச் சூழல் அவளுக்கு ஒரு பழைய நினைவைத் தட்டி செல்ல,
​அவளது மனத்திரையில் ஒரு உருவம் மெல்ல வந்து போக, மெல்ல முணுமுணுத்தாள்,  “சந்திரன்” என்று.

“தாமரை.. நீ எப்போவும் தைரியமா இருக்கணும்டி. இந்த உலகத்துல எதையும் உன்னால சாதிக்க முடியும்,” என்று அவன் அன்று சொன்னது இப்போதும் காதுக்குள் ஒலிப்பது போல இருந்தது அவளுக்கு.

 

​”சந்திரன்.. இன்னைக்கு நான் இவ்வளவு பெரிய பொறுப்புல இருக்கேன். ஆனா, நீதான் கூட இல்லையே,” என்று தனக்குள் புலம்பிக் கொண்டவளுக்கு ஏக்கங்கள் அதிகமாகவே இருந்தது.

அன்று இரவு தாமரைக்குச் சரியாகத் தூக்கம் வரவில்லை. ஆதித்யனின் அந்த அதிகாரப் பார்வை அவளை மீண்டும் மீண்டும் அச்சுறுத்துவது போலவும், சவால் விடுவது போலவும் இருக்க, வெகுநேரம் கழித்தே உறங்க ஆரம்பித்தாள்.

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page