வலியை சூடிய காதலே – 5

நாம் பேசும் ஆயிரம் 

வார்த்தைகள் 

புரியாதவர்களுக்கு, 

நம் மௌனம் ஒருபோதும் புரியப்போவதில்லை…!

வலியை சூடிய காதலே – 5

நிஷாலினியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது, தன் கழுத்தில் இருக்கும் தாலியை இதழு பார்த்துவிட்டாளோ என்று பயந்து, தன் துப்பட்டாவை இன்னும் இழுத்துப் போர்த்திக் கொண்டாள்,

​”இதழு என்ன பேச்சு பேசுற, வாயைக் கொஞ்சம் அடக்கிப் பேசு” என்று ராமநாதன் கடிந்து கொண்டார்,

​”நான் என்ன தப்பா சொல்லிட்டேன், இவ்வளவு பெருசா வளந்தவங்களுக்கு ஒரு நிதானம் வேண்டாமா, ஆரி ஆரி அப்படின்னு அவர் பேரைச் சொல்லிட்டு இருந்தா ஊர் உலகம் தப்பா பேசாதா, 

அவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்ல, ஒன்னுன்னா ஒன்பதுன்னு திரிச்சு பேசுற ஊர்ல, பார்க்கிறவங்க எல்லாம் தப்பா பேச மாட்டாங்களா” என்று இதழு சொல்லும் போது,  

அவளது குரல் தழுதழுத்தது, தன் உரிமையை வேறொருத்தி பறித்துக் கொள்வதைப் பார்க்கும் வலியே அந்த வார்த்தைகளாக வந்தன,

​நிஷாலினி மெல்ல எழுந்து நின்றாள்,

அவளது கால்கள் நடுங்கின, இதழுவின் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குப் பயத்தையும், ஒருவித குற்ற உணர்வையும் தந்தது,

“சாரி நான் தெரியாம” என்று இழுத்தாள்,

​”எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம், முதல்ல உள்ள போங்க” என்று இதழு கையை நீட்டி வழி காட்ட, வேறு வழியின்றி நிஷாலினி தலைகுனிந்தபடி ரஞ்சிதத்துடன் உள்ளே சென்றாள்,

​நிஷாலினி உள்ளே சென்ற பிறகும், இதழு அங்கேயே நின்று மறைந்து போன அந்தப் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தாள்,

நிஷாலினியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது, தன் கழுத்தில் இருக்கும் தாலியை இதழு பார்த்துவிட்டாளோ என்று பயந்து, தன் துப்பட்டாவை இன்னும் இழுத்துப் போர்த்திக் கொண்டாள்,

​”இதழு என்ன பேச்சு பேசுற, வாயைக் கொஞ்சம் அடக்கிப் பேசு” என்று ராமநாதன் கடிந்து கொண்டார்,

​”நான் என்ன தப்பா சொல்லிட்டேன், இவ்வளவு பெருசா வளந்தவங்களுக்கு ஒரு நிதானம் வேண்டாமா, ஆரி ஆரி அப்படின்னு அவர் பேரைச் சொல்லிட்டு இருந்தா ஊர் உலகம் தப்பா பேசாதா, 

அவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்ல, ஒன்னுன்னா ஒன்பதுன்னு திரிச்சு பேசுற ஊர்ல, பார்க்கிறவங்க எல்லாம் தப்பா பேச மாட்டாங்களா” என்று இதழு சொல்லும் போது,  

அவளது குரல் தழுதழுத்தது, தன் உரிமையை வேறொருத்தி பறித்துக் கொள்வதைப் பார்க்கும் வலியே அந்த வார்த்தைகளாக வந்தன,

​நிஷாலினி மெல்ல எழுந்து நின்றாள்,

அவளது கால்கள் நடுங்கின, இதழுவின் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குப் பயத்தையும், ஒருவித குற்ற உணர்வையும் தந்தது,

“சாரி நான் தெரியாம” என்று இழுத்தாள்,

​”எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம், முதல்ல உள்ள போங்க” என்று இதழு கையை நீட்டி வழி காட்ட, வேறு வழியின்றி நிஷாலினி தலைகுனிந்தபடி ரஞ்சிதத்துடன் உள்ளே சென்றாள்,

​நிஷாலினி உள்ளே சென்ற பிறகும், இதழு அங்கேயே நின்று மறைந்து போன அந்தப் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தாள்,

‘என்னிடம் நீடிக்கும் உன் மௌனம் இவளுக்கு இவ்வளவு தைரியத்தைத் தந்திருக்கா, உன்னை அணு அணுவாக நேசிக்கும் என்னை விட, உன்னை இவள் அதிகமாகத் தேடுறது ஏன்னு எனக்கு தெரியல மச்சா’ என்று மனதிற்குள் கதறினாள்,

அப்போது சொக்கன் என்கின்ற தென்றலூர்காரன், ஊர் பெரியதனக்காரர் உத்தரவில் மூச்சிரைக்க ஓடி வந்து ராமநாதன் வீட்டு வாசலில் நின்றான்,

முற்றத்தில் நிஷாலினியைச் சுற்றி அமர்ந்திருந்த ரஞ்சிதம், ஜகதாம்பாள் மற்றும் தங்கமணி அவனது பதற்றத்தைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தனர்,

​”என்னடா சொக்கா ஏன் இப்படி முனி விரட்டுறவனாட்டம் ஓடி வர்ற, என்னாச்சு?” என்று ரஞ்சிதம் படபடப்புடன் கேட்டாள், மூச்ச வாங்கிக் கொண்டு பேசமுடியாமல் இருந்தவனைக் கண்டு,

​ “இந்த சொக்கா முதல்ல தண்ணியக் குடிச்சுப்புட்டு, போறவு வந்த சேதிய சொல்லு” என்று தண்ணீரைக் கொடுத்தாள் சிவகாமி

சிவாகமி கொடுத்த தண்ணீரை குடித்து தொண்டையை நனைத்துக் கொண்ட சிக்கன், 

“அம்மா பெரிய ஐயாவும், ராஜதுரை ஐயாவும் பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்க, அவங்க வீட்டு புள்ள இங்க இருக்கக் கூடாது, அவங்க பரம்பரையோட குலவிளக்க அவங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கணும்னு பஞ்சாயத்துல பிராது சொல்லிட்டாங்கம்மா” என்றான்,

​அந்த வார்த்தையைக் கேட்டதும், அதுவரை அமைதியாக இருந்த ஜகதாம்பாள் பாட்டி ஆவேசத்தில் கையில் இருந்த வெற்றிலைச் செல்லத்தைத் தூக்கி எறிந்தார்,

​”என்னது என் பேத்தியை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறாங்களா, எவன்டா அவன் எங்க மேல பிராது சொல்லுறவன், ஏன் பேத்தி வீடு வந்து முழுசா ஒருநாளு கூட ஆவல அதுக்குள்ள அவ வந்த சேதிய மோப்பம் புடிச்சு உடனே பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டானுங்களா, 

இத்தனை வருஷமா இல்லாத உரிமை இப்ப மட்டும் எங்கன இருந்து வந்துச்சா” என்று பாட்டியின் குரல் ஆவேசத்தில் நடுங்கியது.

​ரஞ்சிதம் அப்படியே நிலைகுலைந்து அமர்ந்தாள், 

“நம்ம பொண்ணு வீடு வந்த விசயம் தெரிஞ்சா, அவங்க பிரச்சனை பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரம் பஞ்சாயத்த கூட்டுவாங்கன்னு நினைக்கலக்கா” என்று தங்கமணியின் சொல்ல,

நடப்பது ஒன்றுமே ​நிஷாலினிக்கு புரியவில்லை, அவர்கள் பேசுவது ஒவ்வொன்றும் அவளுக்குள் அச்சத்தை ஏற்றியது, அவள் மீண்டும் தன் கழுத்தில் மறைந்திருந்த தாலியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். 

‘ஆரி எங்கே, அவர் இருந்தால்தானே இவர்களுக்குப் பதில் சொல்ல முடியும்’ என்று மனதுக்குள் தவித்தாள்,

​தங்கமணி இடுப்பில் கை வைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார், 

“ஏய் சொக்கா போய்ச் சொல்லு அந்தப் பஞ்சாயத்துல இருக்கிறவங்களுக்கு ராஜதுரைக்குத் தன் தங்கச்சி மேல பாசம் இருந்திருந்தா, அவளை விஸ்வநாதன் கிட்ட விட்டுட்டு ஒதுங்கியிருப்பாரா, இப்போ என்னவோ புதுசா உரிமை கொண்டாட வந்துட்டாரு, 

இத்தன வருஷமா இல்லா சொந்தம் இப்போ எங்க கண்ணுத்தங்கம் எங்க வீட்டுக்குத் தேடி வந்திருக்குன்னு பொறமையில  வாராங்களா, இவ எங்க வீட்டு குலசாமி அவள யாராலயும் எங்ககிட்ட இருந்து பிரிச்சு கொண்டு போக முடியாது” என்றாள்

“நீங்க எது சொல்றதா இருந்தாலும் பஞ்சாயத்துல வந்து சொல்றது தானுங்க முறை, நீங்க வராம இருந்தா பஞ்சாயத்தையும் ஊர் பெரிய மனுஷங்கள அவமதிச்ச மாதிரி ஆகிடுமுங்க” என்றான் சொக்கன், ​அந்நேரம் ராமநாதன் உள்ளிருந்து வந்தார்,

“சொக்கன் சொன்னது சரிதான்  பஞ்சாயத்து கூடிடுச்சுன்னா அதை மதிச்சு நாம போய் நின்னுதான் ஆகணும், சொக்கன் ராஜதுரை விடுற ஆள் இல்ல, ஊர் பெரியவங்களுக்கு கட்டுப்பட்டு நாம போலாம்” என்றார், 

​”நானா, அந்தப் பஞ்சாயத்துக்கா, இம்புட்டு வருஷம் கழிச்சு நான் போய் அந்த மனுஷன் முன்னாடி நான் போய் நிக்கணுமா,” என்று ரஞ்சிதம் மிரட்சியுடன் கேட்டாள்,

​”நிக்கணும் ரஞ்சதா இன்னக்கி நீ தலை குனியக் கூடாது, நம்ம வீட்டு பொண்ணுக்காக, உன் அண்ணன் ரத்தத்துக்காக நீ நிமிர்ந்து நெஞ்ச நிமித்தி நிக்கணும், 

வா அந்தச் செல்லதுரைக்கும், ராஜதுரைக்கும் நாம யாருன்னு காட்டலாம், என் பேத்தியைத் தொட ஒருத்தனுக்கும் சொந்தமில்ல” என்று ஜகதாம்பாள் பாட்டி கம்பை ஊன்றி எழ, 

அந்த இடமே ஒரு யுத்தக் களத்திற்குத் தயாரானது போலிருந்தது, ​நிஷாலினியின் கையைப் பற்றிக் கொண்ட ரஞ்சிதம், 

“பயப்படாதம்மா உன் அத்தை நான் இருக்கேன், உன்னை யாருமே இங்கிருந்து கொண்டு போக முடியாது” என்றாள், ஆனால் நிஷாலினியின் மனமும் கண்களும்  ஆரியனை மட்டும் தேடிக்கொண்டே இருந்தது,

தென்றலூரின் பழமையான பெரிய அரசமரத்து மேடை இன்று வழக்கத்தை விட அதிகக் கூட்டத்தால் நிறைந்திருந்தது, ஊர் பெரியவர்கள் அனைவரும் அங்கே கூடி நடுநயமாக அமர்ந்திருக்க, மொத்த கூட்டமும் ராமநாத சக்கரவர்த்தி குடும்பத்தாரின் வரவை எதிர்பார்த்து ஊரே திரண்டிருந்தது,

அங்கே ஒருபுறம் ஆரியனின் தாத்தா செல்லதுரை கம்பீரமாக அமர்ந்திருந்தார், அவருக்கு இருபுறமும் பெரியப்பா பாண்டிதுரையும், தந்தை ராஜதுரையும் மீசையை தடவிக் கொண்டு அமர்ந்திருக்க, ஊர் மக்களின் முணுமுணுப்பு காற்றில் கலந்து கேட்டது,

அப்போது அந்த சலசலப்பைக் கிழித்துக் கொண்டு ஜகதாம்பாள் பாட்டியின் ஊன்றுகோல் சத்தம் கேட்டது, முன்னால் பாட்டி கம்பீரமாக வர, 

பின்னால் ரஞ்சிதம் நிஷாலினியின் கையை இறுகப் பற்றியபடி வந்தாள், ராமநாதனும் தங்கமணியும் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருபுறமும் வந்தனர்,

​ரஞ்சிதம் மேடைக்கு அருகே வந்ததும், கணவன் ராஜதுரைக்கு எதிர் புறமாக நிஷாலினியுடன் நின்று கொண்டாள், அவளுக்கு முன்புறமாக போடப்பட்டிருந்த நாற்காலிகள் இரண்டில் ஜகதாம்பாள் பாட்டியும்,ராமநாதனும் அமர்ந்து கொண்டனர்,

அவர்களுக்கு முன்பாகவே வந்திருந்த ஆரியன் தன் தாயிடமும் இல்லாமல், தந்தையிடமும் இல்லாமல், ஒரு தனித் தீவாக பஞ்சாயத்து மேடைக்கு நேர் எதிராக தலை நிமிர்ந்து நின்றிருந்தான், 

அவனது கண்கள் எதற்கும் அஞ்சவில்லை, எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டு தைரியத்தோடு நின்று கொண்டிருந்தான்,

“துரையய்யா குடும்பம் உங்க மேல என்ன பிராது குடுத்திருக்காங்கன்னு சொக்கன் சொல்லி இருப்பான்” என்று பஞ்சாயத்து தலைமையில் இருந்து ஒருவர் சொல்ல,

“சொக்கன் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டான், ஆனா நான் சொல்ல வேண்டியதை நறுக்கித் தறிச்சாப்புல சொல்லத்தான் நான் இங்க வந்திருக்கேன், 

எதை வச்சு என் பேத்தியை இவங்க உரிமை கொண்டாடுறாங்க, இத்தன வருஷ காலமா அந்தப் புள்ளை எங்கே, எப்படி இருக்குன்னு ஒரு நாளாவது எட்டிப்  பார்த்திருப்பீங்களா” என்று ஜகதாம்பாள் பாட்டி கேட்க, 

“அதே கேள்வியத்தான் நாங்களும் கேக்கறோம், இத்தன வருஷமா இல்லாம இப்ப எப்படி இந்த திடீர் ஆத்தா பேத்தி உறவெல்லாம் முழச்சுச்சோ, 

அதே மாதிரி தான் எங்களுக்கும் வந்துச்சுன்னு சொல்லுங்க மிராசு” என்று ஊர் மிராசுதார் மூலமாக சொல்வது போல் சுற்றி வளைத்துப் பேசினார் பாண்டிதுரை,

“நாங்க எதா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா பேசித்தான் பழக்கம், அங்கே இருக்கிறவங்களுக்கு எதையுமே நேருக்கு நேரா சொல்லுற தைரியம் இல்ல போலயே” என்றாள் தங்கமணி,

“ஏய் இந்தாம்மா தங்கமணி, தங்கமணின்னு பேர் வச்சிருந்தா, உனக்கு என்ன மணி மணியா பேசுறதா நினைப்பா, தேவையில்லாத பேச்செல்லாம் பேசாத, உங்கள விட எங்களுக்கு தைரியம் ஜாஸ்தியாவே இருக்கு நீ கொஞ்சம் வாயை அடக்கிட்டு நில்லு” என்று பாண்டிதுரை கடுகடுக்க,

தங்கமணியை அடக்கிப் பேசவும் ராமநாதனுக்கு சட்டென கோபம் வந்தது, அமைதியாக இருந்த ராமநாதனின் கண்கள் சிவந்தது, தனது குடும்பப் பெண்ணை ஊர் அறியும் மேடையில் ஒருவன் இழிவாகப் பேசுவதை அவரால் சகிக்க முடியவில்லை,

​”ஏய் பாண்டிதுரை, கொஞ்சம் நாவை அடக்கி மரியாதையா பேசு, இது உன் வீட்டுத் திண்ணை இல்ல, ஊர் பஞ்சாயத்து, கட்டினவள வச்சு வாழ வக்கில்லாத குடும்பத்துக்கு வாயிக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல” என்று ராமநாதன் ஆவேசமாக பேச, 

ராஜதுரைக்கு சுருக்கென்று குத்த பதிலுக்கு அவரும் எகிறிக் கொண்டு வர பஞ்சாத்து கட்டுப்பாடு ஒரு நிமிடத்தில் குலைந்தது, சண்டையும் சச்சரவுமாக மாறியது அதைக் கண்டு மிரண்டு போனாள் நிஷாலினி 

 

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page