ஏகா காதலன் – 3

அத்தியாயம் 3

 

“யார்க்கிட்டையும் சொல்லமாட்டேன்..” என்றாள் இளங்கிளி.. 

 

“ஷப்பாஆஆ.. இந்த அறுந்தவாலை வச்சிக்கிட்டு..” என சம்யுவின் காதைப் பிடித்து திருகினாள் ஆர்த்தி.. 

 

சம்யு, ஆர்த்தியின் தலைமுடியைப் பற்றிக் கொள்ள.. இருவரும் அங்கேயே சண்டை போட ஆரம்பித்தனர். 

 

இருவரின் சண்டையைப் பார்த்த இளங்கிளியின் உதட்டில் சிறு புன்னகை..

 

அவளும் இப்படி கலகலவென பேசி சிரிப்பவள் தானே.. அதனாலேயே ஆர்த்தியுடன் எளிதாக ஒட்டிக் கொள்ள முடிந்தது.. 

 

“நான் வேணும்னா தும்பியைப் பிடிச்சித் தரவா?..” என கேட்டாள் இளங்கிளி..

 

சட்டென்று சம்யுக்தாவின் கைகள் ஆர்த்தியின் தலைமுடியை விட்டது..

 

“பிடிச்சித் தர்றீங்களா?..” என்றாள் ஆவலுடன்.. 

 

“ம்ம்.. தர்றேன்..” என்றவள், செடிகளுக்கு நடுவே ஆங்காங்கே பறந்துக் கொண்டிருந்த தும்பியில் ஒன்றை பிடிப்பதற்காக அருகே சென்றாள்.. 

 

அதுவும் அவள் வரும் அரவம் கேட்டு, சட்டென்று பறந்து பக்கத்தில் இருந்த அழகுச்செடியின் மேல் அமர்ந்தது தும்பி.. 

 

“இங்கே இருக்கீயா நீ?..” என முணுமுணுத்தபடி, மெதுவாக அன்னநடையிட்டு சென்றவள், வேகமாக அதைப் பிடிக்கப் போக, அப்பொழுதும் தும்பி பறந்து சென்று.. வளர்ந்து வந்துக் கொண்டிருந்த கொய்யா மரத்தின் மேல் அமர்ந்தது.. 

 

“எனக்கே ஆட்டம் காட்டுறீயா நீ?.. இன்னைக்கு உன்னைப் பிடிக்காம விடமாட்டேன்.. இளா ன்னா கொக்கா உனக்கு?..” என்றவள், சப்தமில்லாமல் தன் மூச்சை தம் பிடித்தபடி, மெதுவாக கொய்யா மரத்தின் அருகில் நெருங்கியவள், வேகமாக அதைப் பிடிக்கச் சென்றாள்.. 

 

வழியில் இருந்து வாளியைப் பார்க்காமல், வேகமாக கீழே தரையில் விழுப்போன சமயம், அவளின் மென் இடையைப் பற்றிக் கொண்டது ஓர் வலிய கரம்.. 

 

ஒரு கணம் அதிர்ந்து திரும்பினாள் இளங்கிளி.. 

 

அவளையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் வளன்.. 

 

அவனின் சிவந்த விழிகளைக் கண்டதுமே உள்ளுக்குள் ஒரு வித அச்சம்.. 

 

“இவ ஏன் நம்மளை முறைக்கிறான்?..” என நினைத்தவளுக்கு, தன் இடையைப் பற்றியிருந்த அவனின் கரம் ஞாபகத்திற்க வந்தது.. 

 

சட்டென்று தன் இடையோடு உராய்ந்த அவன் கரத்தை தள்ளிவிட்டாள்.. 

 

அவள் தன் கையை தள்ளிவிட்டதில் கோபத்தின் உச்சிக்கு சென்றவன், “நான் உன்னைக் காப்பாத்த வந்தா, என்னையே நீ தள்ளி விடுறீயா?..” என உறுமினான் அவன்..  

 

“என்ன உளறுகிறான் இவன்?..” என்பதை போல் அவள் புரியாமல் விழிக்க.. 

 

“கீழே பாருடி..” என்றான் உறுமலாக.. 

 

இளங்கிளி மெதுவாக கீழே பார்வையை செலுத்த, சட்டென்று கண்கள் விரிந்துக் கொண்டது.. 

 

அதில் மண்வெட்டி இருந்தது.. அதுவும் வான்நோக்கி பார்ப்பதை போன்று இருந்தது.. 

 

இளங்கிளி மட்டும் கீழே விழுந்திருந்தாள், அவளின் மண்டையை இரண்டாக பிளந்திருக்கும் அந்த மண்வெட்டி.. 

 

“ஹக்..” என ஒரு வித அதிர்வுடன் எதிரில் இருந்தவனைப் பார்த்தாள்.. 

 

“சாகப் போறவ, எங்கேயாவது போய் சாவு.. என் வீட்டுல எதையும் பண்ணித் தொலைச்சிடாதே.. அப்புறம் என் தாத்தாவுக்குத் தான் கெட்ட பேரு.. பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையை பாக்குற மாதிரி, பராக்கு பதார்த்துட்டு வராதே..” என கடின முகத்துடன் சொல்லிவிட்டு, அங்கிருந்து அகன்றான்.. 

 

அவன் சென்ற பின்பும், அவன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தை காதில் மோதிக் கொண்டேயிருந்தது.. 

 

“அவள் என்ன சாகவா இங்கு வந்தாள்?.. தன் வலியை மறக்க இங்கு வந்தாள்?.. அது தவறா?..” என நினைத்தவளுக்கு கண்ணீர் தான் வந்தது.. 

 

வேகமாக திரும்பிப் பார்த்தாள்.. அங்கு அவளைத் தவிர வேற யாருமில்லை..

 

“எங்கே சென்றார்கள் இருவரும்?.” என தேடிச் சென்றாள்.. 

 

தோட்டத்தின் அந்தப் புறம் இருக்கும் சிறு நீர்வீழ்ச்சியை நோக்கிச் சென்றாள்.. 

 

அங்கு தான் ஆர்த்தியும், சம்யுக்தாவும் விளையாடிக் கொண்டிருந்தனர்.  

 

இளங்கிளிக்கு அவர்களின் தனிமையில் தலையிட விருப்பமில்லை.. 

 

வேகமாக தன்னறைக்குச் சென்று விட்டாள்.. 

 

வளன் ஜாக்கிங் சென்று விட்டு, தன் அறைக்கு வந்தான்.. 

 

அவன் அறைக்கதவை மூடியதும் தான் தாமதம், அவனை முதுகோடு கட்டிக் கொண்டது ஓர் கரம்.. 

 

அதைப் பார்த்தவனின் இதழோரம் சிறு விஷமப் புன்னகை.. 

 

“என்னடி என்னைப் பார்க்காம இருக்க முடியலைப் போல..” என்றவன் பேசிக் கொண்டே, பின்புறம் இருந்தவளை வேகமாக இழுத்து தன் முன்னே கொண்டு வந்தான்.. 

 

அவனைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இதயா.. 

 

அவனின் இதயம் திருடியவள்.. 

 

“சொல்லுடி என்னைப் பார்க்காம இருக்க முடியலையா?..” என்றான் தாபத்துடன், 

 

“நீதான் வளன்.. என்னை விட்டு 3 நாள் தனியா இருந்துட்ட?.. ஆனா எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் நரகம் தெரியுமா?..” என்றவள் தாபத்துடன் அவனை நெருங்கினாள்.. 

 

அவளுக்கு குறையாத மோக விழிகளுடன் அவளை கண்களால் களவாடிக் கொண்டிருந்தான் வளன்.. 

 

இருவரின் உதடுகளும் எப்பொழுது இணைந்தோ, முத்தத்தில் முத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.. 

 

கொவ்வைப் பழ இதழ்கள் அவனின் தடித்த இதழ்களுடன் அழுத்தமாக பொருந்திக் கொண்டது.. 

 

“இதி..” என அழைத்தவன், அவளின் இதழை பருகி, எச்சில் மதுரசம் பருகிக் கொண்டிருந்தான்.. 

 

இதி அவனின் ஆடையில் கை வைக்க, சட்டென்று அவளை விட்டு விலகி நின்றான் வளன்.. 

 

“நோ இதி.. நாம கிஸ் பண்றது வேற.. ஆனா இது வேண்டாம்..” 

 

“ஏன் வளன்.. நான் வேண்டாமா?.. ” என்றவளின் தோளோடு கைப் போட்டு இறுக்கியவன், 

 

“நீ எனக்கு வேணும்.. என்னைக்கும் வேணும்.. ஆனா நம்ம இன்டிமேட்டா இருக்கிறதுக்கான நேரம் இது இல்ல இதி.. பெரியவங்க ஆசீர்வாதத்தோட கல்யாணம் முடிக்கணும்.. அப்புறம் தான் இதெல்லாம்” என்றவனைக் கண்டு முகம் சுருங்கிப் போனது இதயாவிற்கு.. 

 

“ஏன் மாமா, இப்படிச் சொல்லுற?.. நாம எவ்வளவு கிஸ் பண்ணியிருப்போம்..” 

 

“கிஸ் வேற.. இன்டிமேட் வேற.. ரெண்டுக்கும் டிபரண்ட் இருக்கு இதி.. நம்ம கல்யாணத்துக்கப்புறம் தான் நெருங்கணும்னு நான் நினைக்கிறேன்.. இன்னும் கொஞ்சம் நாள் தான் பொறுத்துக்கோ..” என்றான் அவளின் கன்னத்தில் முத்தமிட்டபடி,  

 

“இன்னும் எவ்வளவு நாள் தான் பொறுத்துக்கிறது வளன்..” என முகத்தை சுழித்தாள்.. 

 

“கொஞ்ச நாளைக்கு டி.. ஆர்த்திக்கு கல்யாணம் முடிஞ்சதும், அடுத்த முகூர்த்தத்துலையே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. இப்போ நீ ரூமை விட்டு வெளியே போ.. இல்லை நான், நானா இருக்க மாட்டேன் டி” என சிரித்துக் கொண்டே, அவளை நைச்சியமாக பேசி, ரூமை விட்டு வெளியேற்றினான்.. 

 

“லவ் யூ வளன்.” என்றாள் சிரித்துக் கொண்டே இதயா.. 

 

“லவ் யூ டூ டி..” என்றவன், சிரித்துக் கொண்டே பாத்ரூமிற்குள் நுழைந்தான்.. 

 

குளித்து முடித்து வெளியே வந்த கணம்.. டைனிங் டேபிளில் தான் அவனின் ஒட்டுமொத்த குடும்பமும் இருந்தது.. 

 

“குட்மார்னிங் கைஸ்..” என்றபடி வந்து அமர்ந்தான் வளன்.. 

 

“குட்மார்னிங்..” என்றவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்தான்.. 

 

இதயா தான் அவனின் பக்கத்தில் அமர்ந்தாள்.. 

 

“வளன்.. இன்னைக்கு உங்களோட பேவரட் தான்.. பூரி, கிழங்கு..” என்றவள், அவனே பரிமாறினாள்.. 

 

இருவரின் உள்ளமும் அங்கிருக்கிற அனைவருக்கும் தெரியும் என்பதால், யாரும் எதுவும் சொல்லவில்லை.. 

 

ஆர்த்தி கல்யாணம் முடிந்ததும், அவர்களே இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவில் தான் இருக்கின்றார்கள்.. 

 

“வளன்.. நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன்..” என்றார் விஸ்வநாதன். 

 

“உங்களுக்கும் என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க தாத்தா.. வானவில்லை வளைச்சு உங்க கையில கொடுக்கட்டுமா தாத்தா?..” என சிரித்தபடி கேட்டவனைக் கண்டு களுக்கென்று சிரித்தாள் ஆரத்தி.. 

 

“அண்ணா, உருட்டுலேயே.. நல்லா செக்கு எண்ணெய்யில ஆட்டுன உருட்டு இது தான்.. தாத்தா கேட்டா, வானவில்ல பிடிச்சுக் கொடுப்பீங்களா?..” என அடக்க முடியாமல் கலகலவென சிரித்தாள் ஆர்த்தி

 

“இளங்கிளிக்கு வேலை வேணும்..” என்றவரைக் கண்டு கண்கள் இடுங்கின.. 

 

“யாரு இளங்கிளி?..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தார் விஸ்வநாதன்.. 

 

“என்னடா பேசுற?.. இளங்கிளி.. இதோ இருக்காளே..” என்றார் தன்னருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை நோக்கிக் கைக்காட்டியபடி. 

 

அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தான் வளன்.. 

 

நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டவன், “ சரி.. என்ன படிச்சிருக்கா?..” என்றதும், விஸ்வநாதன் திரும்பி இளங்கிளியைப் பார்க்க.. 

 

“பி.காம்..” என்றாள் யாரையும் பார்க்காமல், 

 

“ஓகே..” என்றவன், “சிஸ்டம் வொர்க் ஏதாவது தெரியுமா?..” என்றான்.. 

 

“தெரியும்..” 

 

“ஏய்ய்ய்..” என்றான் கர்ஜனையாக, 

 

திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள் இளங்கிளி.. 

 

“நான் என்ன அந்த தட்டுக்குள்ளேயா இருக்கேன்?.. நான் கேள்விக் கேட்டா, என் கண்ணை பார்த்து பதில் சொல்லு.. அதை விட்டுட்டு, மேலே.. கீழே.. வானம்.. பூமின்னு பார்த்துட்டு இருந்த.. தொலைச்சிக் கட்டிருவேன்.. ஓகே..” என்றான் காட்டமாக, 

 

“ஓகே..” என்றாள் நடுங்கிய குரலில, 

 

“ம்ம்.. இப்போ சொல்லு, சிஸ்டம் வொர்க் தெரியுமா?..” என்றான் கடுமையாக, 

 

அவனின் விழிகளை விட்டு எங்கும் பார்க்காதவள், “தெரியும்.. Tally படிச்சிருக்கேன்.” 

 

“ஃபைன்.. தாத்தா, பில் செக்ஷன் ஆள் தேவைப்படுது.. அங்கேயே சேர்த்துக்கலாம்.. சேலரி 20000 ரூபா.. காலையில 9 மணியில இருந்து, 6 மணி வரைக்கும் வேலை இருக்கும்.. வரச்சொல்லுங்க..” என்றான், தட்டில் கைகளை கழுவியபடி, 

 

அவளை வருகிறாயா? என்றுக் கூட அவன் கேட்கவில்லை.. 

 

“நீ போ ம்மா..” என்ற விஸ்வநாதனை பயப்பார்வை பார்த்தாள் இளங்கிளி.. 

 

அவளுக்கு வளனுடன் செல்லவே பயமாக இருந்தது.. 

 

இதில் தனியாக அவள் மட்டும் செல்ல வேண்டுமா?.. என அச்சத்தில் உறைந்து நிற்க, 

 

“வர்றீயா?.. இல்லையா?..” என எரிந்து விழுந்தான்.. 

 

“போ ம்மா.. அங்கே நிறைய பேர் வேலை செய்றாங்க.. பயப்படாம போ ம்மா..” என்ற விஸ்வநாதனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் அவனின் பின்னே சென்றாள்.. 

 

காரில் ஏறியமர்ந்தவன், ஆங்கிலப் பாடல் ஒன்றை அலற விட்டான்.. 

 

காது ரெண்டையும் பொத்திக் கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு.. 

 

“எப்போடா இறக்கி விடுவ?.” என மனதுக்குள், இத்தோடு நூறு முறை நினைத்திருப்பாள்.. 

 

அரை மணி நேர பயணத்தில் ஜனசந்தடியான இடத்தில் நுழைந்து, ஒரு பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தினான்.. 

 

அதில் இருந்து இறங்கியவன், பின்னால் வருபவளை பற்றி சிறிதும் கவலைப்படாமல், விறுவிறுவென முன்னால் சென்றான்.. 

 

செல்பவனை பார்த்து திக்கென இருந்தது அவளுக்கு.. 

 

ஏற்கனவே அதிக கூட்டம்.. இதில் எங்கேயாவது தொலைந்து விட்டால், என்ன செய்வது என பயத்துடன் வேகமாக அவனின் அருகில் ஓடி வந்தாள்.. 

 

அவளுக்கு சென்னையே புதிது தான்.. 

 

அவளின் செருப்பு சத்தத்தில் சட்டென்று நின்ற வளனின் முதுகிலேயே இடித்து நின்றாள் இளங்கிளி.. 

 

தன் முதுகை இடித்துக் கொண்டு நின்றவளைக் கண்டு பல்லைக் கடித்தான்.. 

 

“ஒழுங்கா வர தெரியாதா?..” என அதற்கும் கடிந்தான்.. 

 

“இல்லை.. தெரியாம..” என சொல்ல வந்தவளை எரிக்கும் பார்வையில் முறைத்தவன், 

 

“பசங்களை இடிக்கிறதுக்குன்னே அலைவ போல..” சொல்லி முடித்த அடுத்த கணமே பெண்ணவளின் தன்மானமும் சற்று சீண்டப்பட்டு விட்டதோ.. 

 

“பார்த்துப் பேசுங்க..” என்றாள் இளங்கிளி தன்னையும் மீறி.. 

 

நிதானமாக அவளை ஏற இறங்கப் பார்த்தவன், “நல்லா பார்த்துட்டேன்.. 34 28 38 கரெக்டா..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தாள்.. 

 

ஹான் என்றவளுக்கு உடல் கூசிப் போனது.. 

 

அவள் எதைப் பார்க்கச் சொன்னால், இவன் எதைப் பார்க்கிறான், என நினைக்கும் போதே உள்ளம் வெகுண்டழுந்தது.. 

 

“பொறுக்கி..” என இதழ்கள் முணுமுணுக்க அவனை விட்டு இரண்டெட்டு பின்னெடுத்து வைத்தாள்.. 

 

அவளின் கையை அழுத்தமாக பற்றி சுவரில் சாய்த்தவன், “யாரை டி பொறுக்கின்னு சொல்லுற?.. நான் பொறுக்கியா?.. இல்லை என்னைப் பாருங்கன்னு சொன்ன நீ பொறுக்கியா?..” 

 

“நீங்க தான் பொறுக்கி.. நான் வார்த்தையை பார்த்துப் பேசுங்கன்னு சொன்னேன்.. ஆனா நீங்க என் ஸ்ட்டச்சரை பார்த்து பேசுறீங்க?.. இப்போ சொல்லுங்க. நான் பொறுக்கியா?.. நீங்க பொறுக்கியான்னு..” என்றவளின் கழுத்தை அழுத்தமாக பற்றியிருந்தான்.. 

 

“பொறுக்கி என்ன செய்வான்னு தெரியுமா?..” என்றவள், அவளின் கலங்காத விழிகளைப் பார்த்து, சட்டென்று கையை கீழே இறக்கினான்.. 

 

“பொறுக்கி செய்றதை செஞ்சுக் காட்ட எனக்கு ஒரு நிமிஷம் ஆகாதுடி.. போனா போகுதுன்னு விடுறேன். மரியாதையா உன் ஊரைப் பார்த்து ஓடிடு..” என்றவன், விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான்.. 

 

எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்ற அவளின் விழிகள் அவனை வெகுவாக அசைத்துப் பார்த்தது.. 

 

அவன் தன்னை விட்டு சென்றதுமே, இளங்கிளியின் உடலோ கிடுகிடுவென பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.. 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஏகா காதலன்
277 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page