ஆடி வரும் வண்ண மயிலே-13
அத்தியாயம்:13
புவனா பவதீப்யிடம் எதற்காக இந்த விலகல் என கேட்டாள்…
பவதீப் “ நீங்க சொன்ன நேர் பாதையில் நடப்பதால் தான் இந்த விலகல் மேம்…உங்களுக்கே தெரியும் உங்க குடும்பத்தை தவிர நான் மற்ற யாரிடமும் ரொம்ப குளோஸாக பழக மாட்டேன் என்று…
நீங்க உங்க மருமகளை பற்றி சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கலாம்….
பட் எனக்கு அது எல்லாம் தேவையில்லாத ஒன்று…என் கடமை முடிந்து விட்டது அவ்வளவு தான்…” என்றான்.
இதற்க்கு மேலே இது பற்றி பேசினாலும் அவன் வாய் திறக்க போவது இல்லை…என்பது புவனாவுக்கு நன்றாக தெரியும் சரி மயூவை இவன் இன்னும்… மறக்கவில்லை என்பதே சந்தோஷமான விஷயம்…
இது பற்றி பிறகு பேசலாம் இப்போ…. அப்பா வேறு எழுந்து விடுவார் பிறகு விஷயம் வேறு மாதிரியாக போய் விடும்…என்று நினைத்தவள் அமைதியாக இருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் குருமூர்த்தி வந்ததும் பவன் அவர் கூட பேச ஆரம்பித்தான்…புவனாவுக்கு அதற்க்கு பிறகு பேச முடியாமல் குழந்தைகள்… எழுந்து விட அவள் அவர்களை கவனிக்க போய் விட்டாள்.
கல்யாணி, மயூரி வீட்டுக்கு வந்தவர்கள்….மீனா கொடுத்த சாப்பாட்டை சாப்பிட வாங்க என சக்ரபாணி அசோக் ,வெங்கட்டை சாப்பிட அழைத்தார்…
அவர்கள் மதியம் சாப்பிட்டு விட்டோம்…அதை நைட் வைத்து கொடு என சொல்லி விட்டார்கள்.
மயூரி தன் ரூம்க்கு ரெஸ்ட் எடுக்க போனதும்…கல்யாணி அங்கே நடந்ததை எல்லாம் சொன்னார்…சக்ரபாணி அமைதியாக இருக்க.
வெங்கட் “ இப்படி அவர் பேசியதில் ஆச்சரியம் என்ன மா இருக்கு கல்யாணி..? அந்த நல்ல மனுஷன் பெயர் இல்ல சேர்ந்து கெடுகிறது.
அவரும் ஆசையாக தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தார்…ராகவன் இப்படி நடந்து கொள்வான் என்று நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டான்…
அந்த குற்றணர்வால் தான் அவர் சக்ரா முகத்தை…. பார்க்க முடியாமல் தயங்கி கொண்டு இருக்கிறார் …இதில் வேறு ராகவன் பாண்டி கூட சேர்ந்து இவரை… சி.எம் சீட்டில் இருந்து இறக்க முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறான்.
கொஞ்சம் கூடவா இவனுக்கு அறிவு இல்லை…இவன் சொந்த பெரியப்பா அவர் இவன் உடம்பில் ஓடுவது கூட…அவரின் பாதி ரத்தம் தானே அப்படி என்ன பதவி ஆசை.
இதை ஆசை என்று சொல்ல கூடாது பதவி வெறி என்று தான் சொல்ல வேணும்…நான் நினைக்கிறேன் இவனுக்கு நேரம் சரியில்லை என்று சக்ரா.
இதில் இவனிடம் பாப்பா கல்யாண பொறுப்பை கொடுத்தால்…மூர்த்தி சொன்னது போல தான் நடக்கும்…” என்றார்.
அசோக் “ அப்பா அது மட்டுமா…? ராகவன் மாமா தான்…பரத் மாமாவை போட்டு தள்ளியதாக ஒரு கதை இருக்கு…காரணம் சில நேரம் குரு சார் அவரை அடுத்த சி.எம்மாக எலக்சனில் நிற்க வைத்து விடுவார்…
என்ற பயம் சொந்த தங்கச்சி வாழ்க்கையை அழித்தவர்…. எப்படி நம்ம பாப்பாவுக்கு நல்லது செய்வார்…? என கேட்டான்.
கல்யாணி “ இல்ல அசோக் அது சும்மா கட்டு கதையாக இருக்கும்…இந்த அரசியலில் உள்ளவங்க தங்களுக்கு எதிரான ஆளுங்களை…அழிக்க இப்படிப்பட்ட கட்டு கதைகளை கட்டி விடுவாங்க.
குரு அண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிரிவை ஏற்படுத்த இந்த வேலையை…எதிர்கட்சி ஆளுங்க செய்து இருப்பாங்க சொந்த தங்கச்சி மாங்கல்யத்தை… எந்த அண்ணும் பறிக்க நினைக்க மாட்டான் பா…” என்றார்.
சக்ரபாணி “ இவன் பறிக்க நினைப்பான் கல்யாணி…உனக்கு மறந்து போய் விட்டது என நினைக்கிறேன்…நம்ம பெண்ணு இறந்த துக்கம் கூட மறையவில்லை .
நம்ம பேத்தி பால்குடி மறக்காத வயசு…இவன் அடுத்த மாதமே அந்த பாண்டி தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொண்டு வந்து நிற்கிறான்…மூர்த்தி இவனை செருப்பால் அடிக்காத குறையாக திட்டி தீர்த்தான்.
இப்படிப்பட்ட ஒருவன் நிச்சயமாக பதவிக்காக…எதுவுமே செய்வான் மூர்த்தி சொன்னது தான் சரி…பாப்பா கல்யாண விஷயத்தை நாங்க பார்த்து கொள்கிறோம்…நான் கால் பண்ணி அவன் கிட்ட பேசுகிறேன்…” என்றார்.
இன்னும் இரு வாரங்களில் தஞ்சையில் பெரிய நடன நிகழ்ச்சி ஒன்று வர இருக்கிறது …இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை…
கூடவே தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சேர்ந்து…இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி இருந்தது….தஞ்சை பெரிய கோவிலில் தான் இந்த நிகழ்வை ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.
கலையை மட்டுமல்ல கலாச்சாரத்தையும் ஊக்குவிக்க தான்…இந்த ஏற்பாடு செய்யப்பட்டது தமிழ் நாட்டு கலைஞர்கள் மட்டுமல்ல வேறு மாநில கலைஞர்களும்…இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கபட்டு இருந்தது.
இந்த நிகழ்வில் சி.எம் என்ற முறையில் குரு மூர்த்தி கலந்து கொள்கிறார்…அதனால் பாதுகாப்பு ஏற்பாட்டை எல்லாம் போலீஸ் துறையோடு சேர்ந்து…பவதீப் தான் கவனித்து கொள்கிறான்.
இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு…பதங்களும், பாராட்டு பத்திரம், பண பரிசு தொகை உண்டு என்று …கவர்மெண்ட் அறிவித்து இருந்தது .
எல்லா வகை கலைஞர்களும் இதில் பங்கேற்க வேணும் என்பது தான் அரசாங்கத்தின் விருப்பம்…அழிந்து போகும் கலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை தான் இந்த நாட்டிய நிகழ்ச்சி.
மயூரிக்கு அழைப்பு வந்து இருந்தது….அவள் மறுக்காது இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து தருமாறு…
அவளும் சரியென சொன்னவள் சாரதாவிடம் இன்னும் சிறப்பாக பயிற்ச்சி எடுத்து கொண்டாள்…
நாட்டியத்தில் அவள் இறங்கி விட்டாள்…அதன் பிறகு அவளுக்கு வேறு எந்த ஞாபகமும் வராது…இன்னும் இரண்டு நாளில் தஞ்சை கிளம்ப வேணும்…
மற்ற மாநில கலைஞர்களின் போக்குவரத்து தொடக்கம்…அவர்கள் தங்குவதற்கான இடம், சாப்பாடு எல்லாம் அரசாங்கமே ஏற்று கொண்டது.
உள்ளுர் கலைஞர்களுக்கு தங்குவதற்கான இடம் பிரச்சனை இல்லை…சாப்பாடு மட்டும் தான் ஏற்பாடு செய்து இருந்தது அது போல அவர்கள் ஒப்பனை செய்ய…மற்ற தேவைகளுக்கு கூட எல்லாம் ஏற்பாடு செய்து இருந்தது.
பெண்கள் அதிகளவில் கலந்து கொள்வதால் அதிக ஏற்பாடுகள், பாதுகாப்பு எல்லாம்…குரு மூர்த்தி பார்த்து கொள்ள சொல்லி கலை, கலாசார துறைக்கு சொன்னார்.
மயூரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவது சக்ரபாணிக்கு தெரியும்…அவருக்கும் பேத்தி நடனம் புரிவதை நேரில் பார்க்க ஆசை தான்…அதை விட தன் இறந்த போன மகளின் ஞாபகம் தான் அவரை வந்து தொல்லை செய்தது.
நாளை மறு நாள் நிகழ்ச்சி நாளை காலையில் கிளம்ப வேணும்…வழமை போல மயூரி, கல்யாணி, சாரதா, கண்மணி, யசோதா கூடவே மயூரின் நடன பள்ளியில்..உள்ள சில பெண்ணுங்க குழு நடனத்திற்காக வருகிறார்கள்.
தஞ்சாவூரில் தங்குவதற்கான ஏற்பாட்டை எல்லாம்…. அசோக் தான் பார்த்து கொண்டான் சக்ரபாணியின் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று தஞ்சையில் இருந்தது…
சியாமளா வருடத்தில் இரண்டு தடவை.. தன் நடனத்தால் சிவனை மகிழ்விக்க தஞ்சை வருவாள்.
அவளுக்கு சிவன் என்றால் ரொம்ப பிடிக்கும்…நடனத்தின் இறைவன் இல்லையா..? மகள் செளகரியமாக தங்குவதற்காக சக்ரபாணி இந்த கெஸ்ட் ஹவுஸை வாங்கி போட்டு…அதை பராமரிக்க தம்பதிகளுக்கு நிரந்தரமாக வேலை போட்டு கொடுத்தார்.
அன்று மாலை சக்ரபாணி கம்பெனியில் இருந்து வீட்டுக்கு வந்தவர்…குளித்து விட்டு அவரும் வெங்கட்டுக்கு காபி, டிபன் பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது… தாத்தா என்று அழைத்து கொண்டே மயூரி வந்தாள்.
அவர் அருகில் சோபாவில் வந்து அமர்ந்தவள்…அவள் தோளில் தலை வைத்தவள் அவர் சட்டை பட்டனை திருக்க ஆரம்பித்தாள்…இந்த பழக்கம் அப்படியே சியாமளாவின் பழக்கம்.
அவளும் இப்படி தான் ஏதும் கேட்க வேணும் என்றால்…மயூரி போல நடந்து கொள்வாள் மகள் அச்சாக இருக்கும்… பேத்தியின் தலையை தடவி விட்டவர்.
சக்ரபாணி “ என்ன பாப்பா காபி, டிபன் சாப்பிட்டு விட்டாயா..? சரி தாத்தா கிட்ட என்ன கேட்க வேணும் கேளு..?
தாத்தா உனக்கு நல்லது என்று பட்டால்… நிச்சயமாக அதை உனக்கு வாங்கி தருவேன்…இல்ல நீ கேட்பதை நிறைவேற்றுவேன்…” என்றார்.
மயூரி அவர் தோளில் இருந்து தலை உயர்த்தி பார்த்தவள்…
“ எனக்கு தானே நான் கேட்காமல் எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கிறீங்க…இது வேறு தாத்தா வந்து நீங்க எப்பவுமே என் புரோகிராம் பார்க்க வர மாட்டீங்க…பாட்டி அதற்காக காரணத்தையும் சொன்னாங்க…
ஆனால் இந்த முறை நான் சிவன் முன்னாடி டான்ஸ் பண்ண போகிறேன்…அது மட்டுமல்ல அங்கே அம்மாவின் கால்கள் பதிந்து உள்ளது… நிச்சயமாக என் டான்ஸை பார்க்க …அம்மாவின் ஆன்மா வரும் தாத்தா.
இந்த முறை நீங்க என் டான்ஸை பார்க்க வர வேணும்…நீங்க வரவில்ல என்றால் என்னை விட என் அம்மா ஆன்மா தான் ரொம்ப வருத்தப்படும்…
நீங்க தான் அவங்களை கஷ்டப்பட விட மாட்டீங்களே…நீங்க என் கூட இந்த முறை தஞ்சாவூருக்கு வருவீங்க தானே…? என ஆவலாக கேட்டாள்.
அவள் கேட்டதும் அங்கே கடும் அமைதி நிலவியது…வெங்கட் சக்ரபாணியின் முகத்தை பார்த்தவர் ஏதும் பேசாது இருக்க…இதை கேட்டு கொண்டே சமையலறையில் இருந்து வந்த கல்யாணி.
“ பாப்பா இப்போ தானே தாத்தா கம்பெனியில் இருந்து வந்தார்…இது பற்றி பிறகு பேசலாம் தங்கம் நீ போய் டிவி பாரு நைட் டின்னர்…சீக்கிரமாக சாப்பிட வேணும் காலையில் நம்ம கிளம்ப வேணாமா..? என கேட்டார்.
மயூரி “ போ பாட்டி தாத்தா கிட்ட இப்போ கேட்காமல் பிறகு எப்போ கேட்பது…? அவர் இது வரைக்கும் நான் ஆடும் எந்த புரோகிராமுக்கும் வந்தது இல்லை…
இந்த கோவிலை அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் என நீ ஒரு தடவை சொல்லி இருக்க…சாரதா ஆன்ட்டி கூட அம்மா சிவபக்தை அவருக்கு முன்னே… தன் நடனத்தை சமர்ப்பிப்பது…
அவளுக்கு ரொம்ப பிடிக்கும் உனக்கு உன் அம்மாவின் ஆசி… பரிபூரணமாக இருந்தால் தான் இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கு என சொன்னாங்க…
அப்போ தாத்தா வருவது தானே சரி நான் அவரை பாரினுக்கு வர சொல்லவே இல்லையே…இங்கே பக்கத்தில் உள்ள தஞ்சாவூருக்கு தானே வர சொல்லி கேட்டேன்.
நம்ம காரில் போய் காரில் தானே திரும்ப வர போகிறோம்…அங்கே தங்க நம்ம பங்களா இருக்கு பிறகு என்ன..?
தாத்தா இங்கே பாரு என் மேலே உனக்கு அன்பு இருந்தால்…நாளை என் கூட நீ கிளம்புகிற.
சும்மா கம்பெனி, வேலை என காரணம் காட்டாதே…அசோக் அண்ணா அதை எல்லாம் பார்த்து கொள்ளும்…
இந்த தடவை என் கூட நீ வரவில்லை என்றால் நான் உன் கூட எப்பவுமே பேச மாட்டேன்…” என அழு குரலில் சொல்லி விட்டு…. போகும் பேத்தியை மன வலியோடு சக்ரபாணி பார்த்தார்.
மயில் ஆடி வரும்…
