காதல் -22
ஐயர் மந்திரம் முழங்க கீதாவின் கழுத்தில் மஞ்சள் நிற தாலி கயிற்றை கட்டினான் அருண்.
மென்மையான அவளது பாதத்தில் அழகிய மெட்டியை அணிவித்து தன் விரலில் கீதாவின் விரலை பிடித்து அக்னியை வலம் வந்தவன் தொப்பென்று கட்டிலில் இருந்து விழுந்தான்.
“அய்யோ அம்மா இடுப்பு வலிக்குதே” என்று இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்தவன்.
“இன்னிக்கும் கனவுலகத்துல மிதந்து கட்டிலிருந்து கீழே விழுந்துட்டியாடா. இன்னிக்கும் அதே கல்யாண கனவா? இன்னும் எத்தனை நாளுக்கு தான் கனவு மட்டும் காண்கிறது. கனவை ஏன் உண்மை ஆக கூடாது, காலையில் காண்கிற கனவு பலிக்கும் சொல்லுவாங்க” என்று அருணிண் அப்பா காபியை எடுத்து வந்து வைத்து விட்டு புலம்பிக்கொண்டு சென்றார்.
அருண் தலையை கோதியபடி “எப்போ பாரு கனவுல வந்து இப்படி என்னை இம்சை பண்றடி ஏஞ்சல். இன்னிக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை உன் கிட்ட என் லவ்வை சொல்லாம விடமாட்டேன்டி” என்று மணியை பார்த்தான்.
அதுவோ காலை ஒன்பது என காட்ட. “போச்சுடா இப்பவே லேட். என்ன பண்ணலாம்” என்று யோசனை செய்தவன்,
அலுவலகத்துக்கு போன் செய்து ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு மெதுவாக கிளம்பினான்.
‘தன் காதலை எப்படி ஏஞ்சல் கிட்ட சொல்லலாம்’ என்று யோசித்தன் தந்தையிடம் கூறிவிட்டு அலுவலகம் புறப்பட்டான்.
போகும் வழியில் கீதாவை பார்த்து, அங்கே யாரோ ஒருவரிடம் அவள் கோபமாக பேசிக்கொண்டு இருப்பதை தன் செல்போனில் படம் பிடித்துக்கொண்டு ஆபிசுக்கு சென்றான்.
“பிறந்த நாள் வாழ்த்துகள் கீதாமா” என்று ரவி வாழ்த்து சொல்ல.
“நன்றி மாமா நான் ஆபிசுக்கு கிளம்புறேன் மாமா. இன்னிக்கு நைட் லேட்டா தான் வருவேன்” என்று கீதா வாசலை தாண்டி கிளம்பினாள். பாதி வழியில் அவளை தடுத்து நிறுத்தினான் தினேஷ்.
அவளோ புரியாமல் “என்ன அத்தான் ஆபிசுக்கு போற வழியில் நின்னுட்டு இருக்கீங்க. வேலைக்கு போலையா நீங்க?” என்றாள்.
“நீ இன்னிக்கு வேலைக்கு போகணுமா கீதா? நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்று தயங்கியப்படி கூறினான் தினேஷ்.
கீதாவோ நெற்றியை சுருக்கிக் கொண்டு “என்ன அத்தான் சொல்லுங்க. ஆனால் நான் இன்னிக்கு போய் தான் ஆகணும் அத்தான். கொஞ்சம் ஒர்க் இருக்கு.
பட் ஒரு மணி நேரம் பர்மிஷன் போடுறேன் அத்தான்” என்று அவள் கூறியதை கேட்டவனுக்கும் தன் மனதில் இருப்பதை சொல்ல இந்த ஒரு மணி நேரம் போதுமானது என்று தோன்ற சரி என தலையை ஆட்டினான்.
பிறகு ஆபிசுக்கு போன் செய்து பர்மிஷன் கேட்டாள்.
ப்ரியாவோ “மேடம் இன்னிக்கு அருண் சாரும் ஒன்னவர் பர்மிஷன் போட்டு இருக்காரு மேம். சோ, நீங்க கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்.” என்றாள்.
“ஓ” என்று இழுத்தவள் அருண் எதுக்கு பர்மிஷன் போட்டான் என்று ஒரு கணம் யோசித்வள் அழைப்பில் ப்ரியா இருப்பதை உணர்ந்து “ஒகே என்னால எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்” என அழைப்பை துண்டிட்டாள்.
பின் “சொல்லுங்க என்ன விஷயம் அத்தான்” என்று கீதா கேட்டாள்.
அவனோ “இங்க வேண்டாம் என்னோடு வா”என்று அழைத்துச் சென்றான் கீதாவை.
அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து அலுவலகம்
இருவரும் வந்து சேர்ந்து தன் வேலையில் முழ்கினார்கள்.
ஆனால் கீதாவின் முகம் பார்த்த அருண். அவள் முகம் மட்டும் சரியில்லாமல் இருக்க. ‘இப்போதைக்கு வேலையை முடிப்போம். ஈவ்னீங் பார்ட்டியில் என் காதலை வெளிப்படுத்தி விட்டு என்னவென்று கேட்கலாம்’ என்று முடிவு பண்ணி அருண் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
கீதாவுக்கோ ‘தன்னால் இங்கு நிம்மதியாக வேலை செய்ய முடியாது’ என தோன்ற தன்னவனை ஒரு முடிவோடு பார்க்க சென்றாள்.
ஆனால் அங்கு அவன் இல்லாத்ததை பார்த்து ஏமாற்ந்த முகத்தோடு தன் கேபினுக்கு சென்றவள் தன் மொபைலில் இன்பாக்கு அழைப்பு விடுத்தாள்.
அவளின் அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல் போனை அட்டென்ட் செய்தான் ராஜா.
“ஹாய் கீத்து இப்ப தான் என்னை மிஸ் பண்ணியா? இவ்வளவு நேரமா உன் போனுக்காக வைட்டிங் தெரியுமா” என்று ஆவலாக அவன் பேச.
அவளோ “எங்க இருக்கீங்க? டைம் என்ன ஆகுது தெரியுமா? ஏன் இன்னும் ஆபிஸ் வராமல் இருக்கீங்க? நீங்களே இப்படி இருந்தா உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க எப்படி வேலை பார்ப்பாங்க”. என பொறிந்து தள்ளினாள்.
அவள் பேசியதை அனைத்தும் அருகில் இருந்த அருண் கேட்டும் கேட்காமல் அமைதியாக இருந்தான்.
அந்த பக்கம் இன்பா “என்னடி
மறந்துட்டியா? நான் இன்னிக்கு நேரா பார்ட்டி ஹாலுக்கு வந்துடுவேனு சொன்னேன்ல” என அவன் மெதுவாக எடுத்த கூற. அவளுக்கோ அப்போது தான் அது நினைவில் வந்தது.
“ஆமால” என்றவள் “ஓகே நான் போனை வைக்கிறேன்” என்று துண்டிக்க போனவளை தடுத்தான் ராஜா.
கீதாவின் குரலில் தெரிந்த சோர்வை கண்டுக் கொண்டவன் “என்னாச்சும்மா ஏதாவது பிரச்சனையா. ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு”. என்று அக்கறையோடு கேட்டான் ராஜா.
அவளோ “ஒன்னும் இல்லை, நேரில் பார்க்கும் போது சொல்றேன்” என அழைப்பை கட் செய்துவிட்டு பார்ட்டி ஹாலுக்கு விரைந்தாள்.
கீதா போவதை பார்த்துக் கொண்டு இருந்த அருணோ, “இங்கு ஒருத்தன் தன்னுடன் வேலை செய்கிறான் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் சென்று விட்டாளே. என்ன நினைச்சிட்டு இருக்கா இவ மனசுல. இன்னிக்கு ஒரு வார்த்தை கூட என் கிட்ட பேசவே இல்லை. இன்னிக்கு இவளோட முகமே சரியில்லை. காலையில ஆபிசுக்கு வரும் போது இவ யாருக்கிட்ட கோபமா பேசிட்டு இருந்தா. நம்ம ஏதாவது கேட்டா இல்லனு சொல்லுவானு நினைச்சி தான் போட்டோ எடுத்தேன். என்ன பிரச்சனையா இருக்கும். ஏஞ்சல்க்கு அப்படி யாருக்கு போன் பண்ணி பேசினா? இப்ப எங்க போறா” என்று அவள் போகும் திசையை பார்த்து புலம்பிக் கொண்டு இருந்தான்.
பின் நேரங்கள் செல்ல. அங்கே பார்ட்டி ஹாலில்.
“பார்ட்டி வருகை தந்து இருக்கும் அனைவருக்கும் மாலை வணக்கம். இங்க வந்து இருக்கும் அனைவருக்கும் எதுக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறோம் என்று தெரிந்து இருக்கும்னு நினைக்குறேன். இன்றைய நாயகன் நம்ம இன்பராஜா சார் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்.அதுவரை அனைவரும் ஆட்டம் பாட்டம் பாடிக் கொண்டாடுங்கள்” என்று தன் உரையை முடித்தாள் பிரியா.
“ஏஞ்சல் வரியா நம்ம டான்ஸ் ஆடலாம். எனக்கு உன்கூட டான்ஸ் பண்ணனும்னு ஆசையா இருக்கு” என அருண் தயங்கிக்கொண்டு கேட்க,
“இல்லை அருண், நான் வரல நீ வேணும்னா பிரியாவ கூப்பிட்டு போ”. என்றாள்.
அருண் “வேண்டாம்” என கூறிவிட்டு அங்கு இருந்து நகர்ந்து சென்றான்.
கீதாவிற்கோ சங்கடமாகியது பின் “சாரி பிரியா உங்கக்கிட்ட கேட்காமலே அவன் கிட்ட” என்று தயங்கினாள்.
“பரவாயில்லை கீதா, இட்ஸ் ஒகே” என்று தன் வருத்ததை வெளிக்காட்டி கொள்ளாமல் சிரித்துக்கொண்டு நின்றாள் ப்ரியா.
சட்டென்று பாடல் கேட்ட திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கு அருண் பாடினான்.
‘நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்’ என்ற பாடலை ஆரம்பித்து.
‘நாம் காதல் காற்றில் பட்டிரும்
அது வானில் காற்றில் எட்டும்.
நாம் கையில் மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்’ என்ற பாடலை பாடி முடித்து கீதாவை பார்க்க,
அதே சமயம் அங்கு ஜொலித்துக் கொண்டு இருந்த அனைத்து மின் விளக்குகளும் ஆஃப் ஆக சரியாக இருந்தது.
“ச்சை” என்று அலுத்துக்கொண்டு கீதாவின் அருகில் வந்தவன் “சாங் உனக்கு பிடிச்சி இருக்கா ஏஞ்சல்?” என்று கேட்டான்.
அவளோ மென்புன்னகையோடு “ம்ம்ம் நல்ல இருக்கு அருண். நீ இவ்வளவு அழகா பாடுற” என்றாள்.
அருணும் கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக் கொண்டு “அந்த பாட்டு யாருக்காக பாடினேன் தெரியுமா?” என்றான் ஆவலாக.
கீதாவோ யோசித்து “ம் யாரையோ லவ் பண்றணு நினைக்கிறேன். யாரு அந்த லக்கி கேர்ள் அருண்” என்று கேட்டாள்.
‘இது தான் நல்ல சந்தர்ப்பம்’ என தன் காதலை வெளிப்படுத்த நினைத்தான்.
“அது.. அந்த பொண்ணு வேற யாரும் இல்லை ஏஞ்சல் அது” என்று அவளின் பெயரை சொல்ல துணிந்த போது,
திடீரென்று லைட்ஸ் அனைத்தும் ஆன் ஆக, அங்கு அனைவருக்கும் நடுவில் இன்பராஜா நின்றுக்கொண்டு இருந்தான்.
“குட் ஈவ்னீங் ஆல், பர்ஸ்ட் உங்க எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன் இங்கே வருகை தந்ததிற்கு. அண்ட் நீங்க இங்க வந்த காரணம் காதலர்தினம், அப்புறம் என் பிறந்த நாள் அதற்காக தான் இங்கே வந்து இருப்பீங்க. ஆனா அதையெல்லாம் விட இன்னிக்கு இன்னொருத்தவங்களுக்கும் பிறந்த நாள்” என அவன் சந்தோஷமாக சொல்ல,
அனைவரும் யாராக இருக்கும் என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இன்பாவே அதற்கு பதில் கூறினான். “இன்னிக்கு நம்ம ஆபிசில் ஒர்க் பண்ற கீதாவுக்கு தான்” என சொல்ல அனைவரும் அதிர்ந்தாலும் கைகளை தட்டி கீதாவிற்கு வாழ்த்துகளை கூறினார்கள்.
ஷாக்கில் இருந்து மீளாதவன் அருண் ஒருவன் தான். ‘இன்னிக்கு கீ்தாவுக்கு பிறந்தநாளா அதை ஏன், என் கிட்ட முன்னாடியே சொல்லவில்லை. எப்படி ராஜா சாருக்கு மட்டும் தெரிஞ்சிது. அன்னிக்கும் இதே தானே அவளும் சொன்னா சாருக்கு பிறந்தநாள்னு. இங்க நடக்குறது எதுவும் சரியா படல’ என கோபமானவன்,
கீதாவின் அருகில் சென்று “உனக்கும் இன்னிக்கு தான் பிறந்த நாளா ஏஞ்சல். ஏன் என் கிட்ட சொல்லல” என்று வருத்ததுடனும் கேட்டான்.
“ம் ஆமா அருண், இதெல்லாம் எல்லாருக்கிட்டயும் டமாரம் அடிச்சி சொல்லுவாங்களா?. அப்புறம் நான் பிறந்த நாள் கொண்டாடுறது இல்லை. அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது அருண்.
நானே ஏற்கனவே ரொம்ப டென்ஷனா இருக்கேன். அமைதியா இங்க இருந்து போ” என்று சற்று படப்படப்புடன் பேசினாள்.
“ஓ என் கிட்ட, ஏன் முன்னாடியே சொல்லலனு கேட்டா பிறந்தநாள் பிடிக்காது சொல்லுவ. ஆனா ராஜா சார் கிட்ட மட்டும் சொல்லுவ இல்லையா?. உனக்கு அவர் பிறந்தநாளும் அவருக்கு உன் பிறந்தநாளும் தெரியுது. இதை நான் கேட்க கூடாதா? என்னை இங்கு இருந்து போக சொல்லிட்டு நீ என்ன பண்ண போற” என்று அவளிடம் உரிமையாக கேட்டவனை பார்த்தவளுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
அதை கட்டுபடுத்திக் கொண்டு மெதுவாக “நான் யாருக்கிட்டயும் சொல்லல அருண். அப்புறம் என்னை கேள்விக் கேட்குற உரிமை உனக்கு இல்லை. அண்ட் நான் அந்த உரிமைய உனக்கு கொடுக்கவும் இல்லை. நீ என் ப்ரெண்ட் மட்டும் தான் அந்த லிமிட்டுக்குள்ள இரு, அதான் உனக்கு நல்லது. என் விஷயத்துல தேவையில்லாமல் தலையிடாத” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக கூறினாள்.
அவள் சொன்னதை கேட்ட அருணுக்கோ ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே போனது.
பின் அவளிடம், “என்ன! நான் உனக்கு ப்ரெண்ட் மட்டும் தானா? எனக்கு உரிமை இல்லையா?. நான் ஏன் உன் விஷயத்துல தலையிட கூடாது. உன்னை நான்” என்று அவன் ஆவேசமாக ஆரம்பிக்கும் முன்,
இன்பா கீதாவின் அருகில் வந்து அவளது கையை பிடித்துக் கொண்டு அனைவருக்கும் நடுவில் நிறுத்தி கீதாவின் வலது கையை தன் இடது கையால் பிடித்து தன் வலது கையை கீதாவின் இடையில் வைத்து நடனம் ஆட ஆரம்பித்தான்.
முதலில் திகைத்தவள் பிறகு இருக்கும் இடம் கருதி இன்பராஜாவை அனைவரின் முன்பும் விட்டுக் கொடுக்க மனமின்றி தன்னவனுடன் அதற்கு ஏற்றார் போல் அவளும் ஆட ஆரம்பித்தாள்.
‘சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமை ஆகவா,
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா,
லாளி லாளி நீ என் தூளி தூளி
லாளி லாளி நீ என் தூளி தூளி.
இன்பாவின் கைகள் அவள் மேனியில் நடனம் ஆட, தன் உணர்வுகளை கட்டுபடுத்த மிகவும் சிரமப்பட்டாள் கீதா.
தான் எங்கு இருக்கிறோம் என்ன செய்கிறோம், என்ற எண்ணம் தோன்றாமல் இன்பா தன் கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்மாக இழந்து அடுத்த கட்டத்துக்கு போக, தன்னவளை இன்னும் அவன் பக்கத்தில் அணைத்து அவள் இதழில் தன் இதழ் பதிக்க நெருங்கினான்.
அனைவருக்கும் ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க அருணுக்கோ கோபம் தலைக்கேறியது.
கீதாவோ சுற்றி இருப்பவர்களை சங்கடத்துடன் பார்த்து ‘இதற்கு மேல் நான் சும்மா இருந்தால் நிலைமை மோசமாகிவிடும்’ என்று உணர்ந்தவள் தன்னவனை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டாள்.
இதை எதிர் பார்க்காத இன்பா, சற்று கோபத்துடன் தன்னவளை பார்க்க. அவளின் கண்ணசைவை பார்த்தவன், பிறகு தான் சுற்றிமுற்றி பார்த்து எங்கு இருக்கிறோம் என்று சுயநினைவுக்கு வந்தான்.
கீதாவை பார்க்க முடியாமல் அங்கே இருந்து நகர்ந்து வெளியே செல்ல, அங்கே இந்து வந்து இருப்பதை பார்த்தான்.
‘இவளை இங்க வர கூடாதுனு தானே சொல்லிட்டு வந்தோம். இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கா ஏதோ ஒன்று தப்பா இருக்கு. இங்க ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போவதாக ஏன் என் உள்மனசு உணர்த்தது. கீத்துக்கு ஏதாவது பிரச்சனை வர போகுதா’ என்ற நினைப்பு வர மீண்டும் உள்ளே சென்றான்.
அங்கு அனைவரும் கை தட்டி கீதாவை ஒரு பாட்டு பாட சொல்ல அதற்கு அவள் மறக்க, அனைவரும் மீண்டும் கேட்க வேறு வழி இன்றி பாட ஒப்புக் கொண்டாள்.
தன்னவனை தள்ளிவிட்டதில் அவன் மனம் உடைந்து போயிருக்கும் என்பதை அறிந்து, இன்பாவை சமாதானம் செய்ய இதுவும் ஒரு நல்ல வழி தான் என்று தோன்ற பாட ஆரம்பித்தாள்.
‘ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ! போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா… மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…’
அருணுக்கும் இந்த பாடல் வரிகள் யாருக்கு என்று புரிய, தன் பொறுமையை முழுதாக இழந்தான்.
‘அப்போ என் காதல்? நான் தினமும் காண்கிற கனவு எல்லாம், கனவு தானா?’ என்று கோபம் அவன் புத்தியை மங்க செய்து கண்ணை மறைக்க அருகிலிருந்த பழத்தில் சொறுகிய கத்தியை எடுத்துக்கொண்டு, ‘எனக்கு கிடைக்காத என் கீதா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது’ என்று தன் சுயபுத்தியை மறந்து கீதாவின் அருகில் போக,
சரியாக பாடலை முடிக்கும் சமயம் கீதாவின் அருகில் கத்தி வருவதை கவனித்த இன்பா கீதாவிடம் நெருங்கி….
இன்பா, “கீதா”….என்று கத்த, கீதாவும் காதை மூடிக்கொண்டு “இன்பா”……என கத்தினாள்.
அங்கு சட்டென்று பெரும் அமைதி நிலவ ரத்தம் மட்டும் வழிந்துக்கொண்டு இருந்தது.
