மாயோன் -1
சஷ்டியை நோக்க சரவண பவனார் கந்த சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருக்க கல்பனா தேவி மனமுருகி அந்த முருகனை வேண்டினார்.
“முருகா உன்கிட்ட நான் கேட்கறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான் .என் மகன் இருக்கானே , அவன் தான் கார்த்திக் ராஜன்.அவனுக்கு அந்த கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைக்கிற புத்தியைக் கொடுப்பா
உன்மேல நான் கொண்ட பக்தியால் தானே அவனுக்கு உன்னுடைய பெயரை வைத்தேன்” என்று வேண்டிக் கொண்டிருந்தார்.
அதே நேரம் அங்கே உணவு மேஜையில் இருந்த அனைத்துப் பொருட்களும் கீழே உருண்டு உடைந்தது…
அந்த சத்தத்தைக் கேட்ட கல்பனா தேவி,” அச்சோ காலையிலேயே ஆரம்பிச்சிட்டானே?”என்று நினைத்தவர் அவசர அவசரமாக பூஜை அறையில் இருந்து வெளியே வந்தார்.
அங்கே அனைத்து பொருட்களும் சிதறி கிடக்க அதை பார்த்து , மானசீகமாக தன் தலையில் கை வைத்தார் .இவர் யாருக்காக மனமுருகி வேண்டினாரோ அவனின் ஆட்டத்தில் ஒன்றுதான் இதுவுமே. எதிரில் இருப்பவனை பார்க்க அவனோ தன் கைகளை கட்டிக்கொண்டு சாவகாசமாக தன் அம்மாவை முறைத்தான் கார்த்திக் ராஜன்.
‘முருகா இன்னைக்கு என்ன பிரச்சனை தெரியலையே. இவனை எப்படி மலை இருக்கிறது தெரியலையே?’ என்று நினைத்தவர்
“கார்த்திக் என்னப்பா என்ன ஆச்சு ஏன் இப்படி கோபப்படற”
“நான் ஏன் கோபப்படறேன்னு உங்களுக்கு தெரியாது அப்படித்தானே?இங்கே டேபிள் மேல பாருங்க மா. எப்படி இருக்கு கொஞ்சமாவது இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு சுத்தம் னா என்னன்னு தெரியுதா?”
‘அச்சோ முருகா இதெல்லாம் அவனுடைய வேலையா தான் இருக்கும் .ஃநைட் லேட்டா வந்து சாப்பிட்டுட்டு இப்படி போட்டு வெச்சிருக்கானே’என்று நினைத்தவர்
“கார்த்திக் நானே பாவம் பா.எவ்ளோ வேலைதான் தனியே செய்வேன் . சொல்லு பாக்கலாம்”என்று தனது அடுத்த அஸ்திரத்தை எடுத்தார் கல்பனா தேவி.
“அம்மா இதெல்லாம் ஒரு காரணமா சொல்லாதீங்க .வேலைக்கு ஆள் வெச்சுக்கோங்க சொன்னா அதையும் கேட்கிறதில்ல.எங்க அந்த எருமைமாடு அவனை வெளியே கூப்பிடுங்க?”
“கார்த்திக் நீ கோபப்படாதடா அவன் அவன் இன்னும் எந்திரிக்கல அவன் எந்திரிச்சதும், நானே அவனை கிளீன் பண்ண சொல்றேன்”
“பாரேன் உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? நான் இப்படி போனதும் அவனை மடியில் படுக்க வச்சிட்டு
கொஞ்சுவீங்க”என்ற கார்த்திக் வேகவேகமாக மாடியேறினான்.
“அச்சோ முடியலையே இந்த மனுஷன் இந்த நேரம் பார்த்து எங்கே போனாரோ? முருகா என்னைக் காப்பாத்தேன் “என்று புலம்பிய கல்பனா தேவி தன் மகன் பின்னே மாடி ஏறினார் இல்லை இல்லை ஓடினார் என்று தான் சொல்ல வேண்டும்.
கார்த்திக் ராஜன் மாடியில் உள்ள மற்றொரு அறையில் படுத்துக்கொண்டிருந்தவனின் மீது பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினான்.
அவனின் செயலில் சுகமாக துயில் கொண்டவன் தண்ணீர் பட்டதும் சாவகாசமாக எழுந்து அமர்ந்து எதிரில் இருப்பவர்களை பார்த்தவன்
கல்பனா தேவியை அருகே அழைத்து அவரின் முந்தானையை எடுத்து தன் முகத்தை துடைத்தவன் ,”அம்மா உன் பெரிய பிள்ளையை வேற ஏதாவது வித்தியாசமா யோசிச்சிட்டு வந்து என்னை டார்ச்சர் பண்ண சொல்லு, சின்ன பிள்ளை மாதிரி பிகேவ் பண்ண வேணாம் சொல்லு.இன்னும் ஒரு அரைமணி நேரத்தில் எனக்கு சூடா காபி சக்கரை தூக்கலா போட்டு எடுத்துட்டு வாமா என்றவன் …
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு” என பாடிக்கொண்டே அந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி படுத்து தனது தூக்கத்தை தொடர்ந்தான் அபிஷேக் ராஜன் கார்த்திக் ராஜனின் அன்பான, பாசமான உடன்பிறப்பு..
கார்த்திக் ராஜன் இதில் கடும்கோபம் கொண்டவன் அவனின் போர்வையை இழுத்து,” டேய் எருமை மாடு உனக்கு கொஞ்சமாச்சும் சூடு ,சொரணை இருக்கா இல்லையா ?எத்தனை தடவை சொன்னாலும் நீ அடங்கவே மாட்டியா?ஏன்டா ஏன்டா நீ எல்லாம் ஒரு ஜென்மம் னு சுத்திட்டு இருக்கிற”என்று தனது அருமை தம்பியை திட்டிக் கொண்டிருந்தான்.
ஆனால் அபிஷேக் ராஜன் எதையும் காதில் வாங்காமல் மீண்டும் போர்வையை எடுத்தவன் இழுத்து போர்த்தி தூங்க ஆரம்பித்தான்.
கல்பனா தேவி இருவரையும் எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாதவர் தனது பெரிய மகனை கண்டிக்கும் விதமாக கார்த்திக் ,”தூங்கற பிள்ளையை ஏன்டா இப்படி படுத்தறே.உனக்கு தூக்கம் வரலையா விடு.
அதுக்காக அவனை எதுக்கு தொந்தரவு பண்ற.அவன் ஃநைட் இரண்டு மணி வரைக்கும் படிச்சிட்டு தூங்கியிருப்பான்”
“அம்மா சும்மா என்னை கடுப்பேத்தாதீங்க அவன் இரண்டு மணி வரைக்கும் படிச்சான் நீங்க பார்த்தீங்க .அட போங்கம்மா. ஃபோன்ல யார் கூடவாவது கடலை போட்டுட்டு இருந்திருப்பான்.
யாருக்கு தெரியும் அந்த பிசாசு இவன் கூடவே சுத்திட்டு இருக்குமே அது கூட வெட்டி கதை அளந்து இருப்பான்.. அதுக்கும் வேற வேலை இல்ல இவனுக்கும் வேற வேலை இல்ல”
என்றான் கார்த்திக்.
அவ்வளவு நேரம் எது நடந்தாலும் தூக்கமே முக்கியம் என்று படுத்திருந்த அபிஷேக் ராஜன்,”அம்மா என்னை பத்தி என்ன வேணா சொல்ல சொல்லு தேவையில்லாம மத்தவங்கள பத்தி பேச வேண்டாம்.”என்றான்.
கார்த்திக்கு தெரியும் அவன் யாரைப் பற்றிப் பேசினால் கோபப்படுவான் என்று அபிஷேக்கை கோபப்படுத்தி பார்க்க எப்போதும் கார்த்திக் இந்த ஆயுதத்தை தான் கையில் எடுப்பான்.
“ஆமா இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.நீங்க கொடுக்கிற இடத்தால தான் இவன் இவ்வளவு ஆட்டம் போடறான் மா “என்று அதற்கும் கல்பனா தேவியை குறை கூறினான் கார்த்திக் ராஜன்.
சரவண ராஜன் அறை வாசலில் நின்று கொண்டு தனது மனைவி மக்களை பார்த்தவர் தன் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
கார்த்திக் தன் அப்பாவை பார்த்தவன் , ” சிரிங்க நல்லா சிரிங்க . இவன் செய்ற காரியத்துக்கு எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா அனுபவிப்பான். எதையும் முறையா செய்ய மாட்டேங்கறான். இவன் என்ன தான் படிக்கறானோத் தெரியல “என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.
“ஏங்க வந்துட்டீங்களா இவனுங்க இரண்டு பேரும் காலையிலேயே ஆரம்பிச்சுட்டானுங்க .நீங்க மட்டும் கரெக்டா எஸ்கேப் ஆகிடுவீங்க என்னால முடியலைங்க. எனக்கு ஒரே டயர்டா இருக்கு ப்ளீஸ் எனக்கு சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வரீங்களா?”
“விடுடா கல்பனா இவங்களைப்பத்தி உனக்கு தெரியாதா ?சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு தானே இருக்கோம் .சரி உனக்கு நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று நகர,
அபிஷேக் , “அப்பா எனக்கும் காபி நல்லா ஸ்ட்ராங்கா இருக்கனும் சரியா இந்த அம்மாவைக் காபி போட சொன்னா அதுல டேஸ்டே இருக்காது” என்றான்.
“அடேய் என்னடா இப்படி சொல்ற. இனி என்கிட்ட காபி கேளு உனக்கு இருக்கு, போடா போ உங்க அப்பாவே இனி உனக்கு தினமும் காபி போட்டுத் தருவார் நல்லா குடிச்சுக்கோ.”
“அச்சோ என் செல்ல மம்மி ,என் செல்ல குட்டிக்கு இவ்ளோ கோபம் வருது, நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.நான் பாவம் தானே அம்மா இப்போதான் அந்த ஸ்டிரிக்ட் ஆபிஸர் ஆடிட்டுப் போறான்.இப்போ நீயும் இப்படி சொன்னா நான் எங்கே போவேன்னு சொல்லு பார்ப்போம்” என்று தன் அம்மாவை கொஞ்சி, கெஞ்சி சமாதானப்படுத்தியவன்
சரிமா நீங்க இரண்டு பேரும் உட்காருங்க. உங்க இரண்டு பேருக்கும் நான் காபி கொண்டு வரேன்” என்றவன் வேகமாக கீழே இறங்கி சமையல் அறைக்குள் புகுந்தான் அபிஷேக் ராஜன்.
“ஏங்க இவனுங்க இரண்டு பேரும் சின்ன வயதிலிருந்தே இப்படித்தான் இருக்கானுங்க எனக்கு இவனுங்கள நெனச்சாலே கஷ்டமா இருக்குங்க.”
“விடுடா எல்லாம் போகப் போக சரியாயிடும் நீ உன் மனசை போட்டு குழப்பிக்காத” என்று சரவணன் தன் மனைவியை தன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறினார்.
“சரிங்க நீங்க சொல்றீங்க நானும் நம்பறேன்.சரி வாங்க சின்னவன் கீழே போய் இருக்கான்.இரண்டும் மறுபடியும் முட்டிக்கப்போகுது…”எனவும் சரவணராஜன் சிரித்தார்.
“ஆமா நல்லா சிரிங்க என் நிலைமையை பார்த்தா உங்களுக்கு அவ்ளோ சிரிப்பா இருக்கா?”
“என்னமா இப்படி சொல்லிட்ட என்னுடைய ஹோம் மினிஸ்டர் நீதானே .அப்போ நீ தான் இதையெல்லாம் பார்க்கனும் .உன்னை கஷ்டப்பட்ட விட்டுட்டு நான் சும்மா இருப்பேனா? இந்த சரவணன் இருக்க பயம் ஏன்?”
“ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல சரி வாங்க கீழே போகலாம்.”என்று இருவரும் கீழே இறங்கினர்.
சமையலறையில் அபிஷேக் ராஜன் தன் பெற்றோருக்கும், தனக்கும் சேர்த்து காபி போட்டவன் தன் அண்ணனுக்கு மிகவும் பிடித்த கிரீன் டீயை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றான்.
“ கார்த்திக் கிரீன் டீ குடிச்சிட்டு கிளம்பு டா”
“சரி சரி குடிக்கறேன் .போ போய் சீக்கிரமா குளிச்சிட்டு கிளம்பற வழியை பாரு.இன்னைக்கு உன் மேல எந்த கம்ப்ளைய்ன்ட்டும் வரக்கூடாது புரியுதா?”
“சரிடா சரி எப்போ பாரு கடப்பாறையை முழிங்கின மாதிரி முறைச்சிக்கிட்டு சுத்தாத”என்றவன் கார்த்திக் அடுத்த வார்த்தை சொல்வதற்குள் வெளியே ஓடினான்.
அங்கே நின்னா என்ன நடக்கும் அவனுக்கு தெரியாதா என்ன?
அடுத்த இரண்டாவது நிமிடம் கார்த்திக் ராஜன் வீடே அதிரும் படி அம்மா என்று கத்தினான்.
இந்த சின்னவன் என்ன செய்தானோ? பார்க்கலாம்.
இரவு நேரம் மனதில் எந்த பயமும் இல்லாமல் தனியாக பயணம் செய்கிறாள் மங்கையவள் .
காரின் எதிரில் திடீரென்று வந்தவரை பார்த்து வண்டியை நிறுத்துகிறாள்.அவர் இவளிடம் நெருங்கி அவளை கீழே இறங்க சொல்ல இவளோ அவரின்
பார்வைக்கு கட்டுபட்டவளாய் கீழே இறங்கினாள்.இறங்கியவளை கைபிடித்து இழுத்தவன் ,”வா வா சீக்கிரம் வா”என்று அவளை அழைத்துச் செல்கிறான்
“ப்ளீஸ் என்னை விடுங்க இப்போ எங்கே கூப்படறீங்க ”
“ஏய் நான் சொல்றத கேளு .இது நீ இருக்க வேண்டிய இடம் இல்ல என் கூட வந்துடு”
“என்ன சொல்றீங்க நீங்க நான் ஏன் உங்க கூட வரனும் .நான் எங்க அம்மா, அப்பா கூட தான் இருப்பேன் .உங்களுக்கு அடிக்கடி இதே வேலையா போச்சு .இனி நீங்க என் வாழ்க்கையில் வராதீங்க நீங்க வந்ததில் இருந்து என்னுடைய தூக்கமே போச்சு போங்க’
“ஏய் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? “என்று திரும்பிப் பார்த்த அந்த உருவத்தைப் பார்த்த இனியா பயந்து நடுங்கியவளாக அம்மா அம்மா என்று கத்தியவள் மயங்கி சரிந்தாள் .
