தினேஷ், அவன் செய்த ஒவ்வொரு செயலுக்காகவும் நிலாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிட்டான்.
அவன் போனதும் அந்த இடம் சத்தமில்லாமல் நிசப்தமாக மாறினாலும், நிலாவின் மனசுக்குள்ள மட்டும் ஓர் எண்ண அலைகள் மாதிரி நினைவுகள் ஓடிக்கிட்டே இருந்தது.
இவ்வளவு நாளா…
அவள் குரல் நடுங்கியது.
என்னை எல்லாருமே பயங்கரமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க. வேலை வாங்குறதுக்காக… என்னை முட்டாளா பயன்படுத்திக்க… அப்படியே என் வாழ்க்கை முழுக்க ஓடிடுச்சு.
அவள் கண்களில் தேங்கி இருந்த வலி, இத்தனை நாளா அடக்கி வைத்த அவமானம், எல்லாமே ஒரே நேரத்தில் வெளியே வர முயற்சி பண்ணினது. அழுகையை கூட சத்தமா அழுகாதவள் என்று அழுகணும்னு தோன்றியது மற்ற நாட்கள் போல் இல்லை இந்த நொடி இந்த நிமிடம்…
எப்ப பார்த்தாலும் அவமானத்தைத் தவிர இந்த உலகம் எனக்கு வேற எதுவுமே கொடுக்கல. தன்னம்பிக்கையோட நான் எதையும் செய்ததே இல்ல. எப்பவும் பயந்துகிட்டே… என்னோட வாழ்க்கை ஒரு இருட்டு அறை மாதிரி மாறிப் போச்சு.
அவள் சொல்வதை கேட்டுக்கிட்டே இருந்த விக்ரமின் கண்களும் மெதுவாக கலங்க ஆரம்பிச்சது.
தினேஷ் போற வரைக்குமே அவர்களுக்குள்ள ஒரு மிகப்பெரிய அமைதி இருந்தது. பிறகு, அவள் தலையை மெதுவாக உயர்த்தி அவனை பார்த்தாள்.
“ஆனா…
இது எல்லாத்தையும் உடச்சு வெளியில கொண்டு வந்தது நீ மட்டும் தான்.”
அந்த ஒரு வரியிலேயே அவள் மனசுக்குள்ள இருந்த பாரம் கொஞ்சம் கொஞ்சமா லேசானது.“எல்லாரும் என்னை கேலி பொம்மையா பார்த்தப்போ, நீ மட்டும் என்ன அப்படி பார்க்கல. எனக்குள்ளயே மறைஞ்சு கிடந்த அந்த சின்ன தைரியத்தை வெளியில கொண்டு வந்தது நீ தான்…
அவ்வளவு சொன்னதும், இனிமேல் தாங்க முடியாம, அவள் வேகமாக விக்ரமை கட்டி அணைத்துக்கொண்டாள்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி …
ஒரு விரல் கூட அவனை தொடலாமா வேண்டாமா என்று ரொம்ப நேரம் அவளுக்குள் யோசனை. பயம், தயக்கம், பழைய நினைவுகள் எல்லாமே அவளை கட்டிப் போட்டது.
ஆனா தினேஷ் கிட்ட இவ்வளவு தைரியமா பேசினதுக்குப் பிறகு, ஒரே நாள்ல இவ்வளவு மாற்றம் எனக்குள்ள எப்படி வந்தது? ன்னு நினைக்கும்போது, அந்த மாற்றத்துக்கு காரணம் விக்ரம் தான் என்பதைக் கண்டு அவளுக்குள் ஒரு இனிமையான அதிர்வு.
அந்த சந்தோஷமே அவளுக்குள் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
அவன் மீது இருந்த நெருக்கம், பாதுகாப்பு, நம்பிக்கை எல்லாமே ஒரே நேரத்தில் பெருகி, அவளை அறியாமலே அவனை இன்னும் இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டு, குழந்தை மாதிரி கதறி அழுதாள்.
அந்த அழுகையில் வலி மட்டும் இல்லை…
நிம்மதி இருந்தது.
“நான் தனியா இல்ல”ன்னு உணர்ச்சி இருந்தது.
விக்ரமும், கண்கள் முழுக்க நீர் நிரம்பியபடி,
நான் இருக்கேன்… எப்பவும் இருக்கேன் ன்னு சொல்லாமலேயே சொல்ற மாதிரி, அவளை இன்னும் இறுக்கமாக தன் நெஞ்சுக்குள் சேர்த்துக்கொண்டான்.
அந்த அணைப்பில் எந்த வாக்குறுதியும் பேசப்படல.
ஆனா அவங்க இருவருக்கும் தெரிந்தது ஒன்று தான்
அந்த நொடியில், நிலா முதல் முறையா தன்னையே பாதுகாப்பா உணர்ந்திருந்தாள்.
ஆனா அந்த நிமிஷமே…
வெளியில கேட்டுக்கு பக்கத்துல, நிழல் மாதிரி ஒரு உருவம் நின்னுக்கிட்டு, அங்க நடக்குற எல்லாத்தையும் அசையாம பார்த்துக்கிட்டே இருந்தது.
நிலாவும் விக்ரமும் ஒருத்தருக்கொருத்தர் காற்று புகாதபடி உயிரை பிடிச்சுக்கிற மாதிரி கட்டி அணைத்து நின்னு இருந்ததை பார்த்த அந்த நிழலின் உள்ளுக்குள்ள, ஒரு கணத்துல பயங்கரமான கோபம் பொங்க ஆரம்பிச்சது.
அந்த உருவம் வேற யாரும் இல்லை…
நிலாவுடைய அப்பா.
நம்ம கையாலையே மகளை வீட்டை விட்டு துரத்திட்டோமே…
என்ன நிலையில இருக்காளோ…
சாப்பிட்டாளோ இல்லையோ…
பயந்துக்கிட்டே இருக்காளோ…
உலகம் தெரியாத அந்த பொண்ணு இப்போ என்ன செய்றாளோ…
இந்த பயம் தான் அவரை இத்தனை தூரம் வர வச்சது.
ஊர் உலகம் பேசின வார்த்தைகள் அவருக்கு முன்னாடியே வந்துச்சு.
உங்க மகளுக்கும் அந்த பையனுக்கும் ஏதோ ஒன்னு இருக்குன்னு சொன்னதை அவர் நம்பல.
ஆனா இப்போ…
கண்ணு முன்னாடி அதையே பார்த்ததும்,
அவருக்குள்ள இருந்த சந்தேகம் எல்லாமே கோபமா மாறிப் போச்சு.
இவ்வளவு தூரம் வர தேவையில்லை…
உண்மை இதுதான்னு இப்போ கண்ணாலேயே பார்த்துட்டேன்ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே,
கோபத்தோட, விறுவிறுன்னு அங்கிருந்து நடக்க ஆரம்பிச்சார்.
ஆனா இதுக்கெல்லாம் காரணமே…
அவர்தான்.
ஒருத்தருக்கு ஒருத்தர் சரியா தெரியாம, ஒழுங்கா பேசிக்கிட்டதும் இல்லை.
சின்ன உதவி பண்ண போன விஷயம்,
அந்த பிளாட்டுல இருக்குற எல்லாரும் வாய்க்கு வந்த மாதிரி பேச ஆரம்பிச்சதுனால,
மக மேல கோபப்பட்டு,
விசாரிக்க கூட இல்லாம,
நம்பிக்கை கொடுக்காம,
ஒரே வார்த்தையில வீட்டை விட்டு துரத்திட்டார்.
ஆனா அந்த நேரத்துல…
அவள் ஒரு தப்பும் பண்ணல.
போக வழி இல்லாம, உடைந்து நின்ன அந்தப் பொண்ணை,
ஒரு வார்த்தையும் கேள்வியும் இல்லாம,
அரவணைச்சது விக்ரம்.
ஆனா இப்போ,
தன் மகள் இப்படியொரு கேடுகெட்ட விஷயம் பண்ணுற மாதிரி தோன்றியதும்,
அந்த கோபம் எல்லாத்தையும் தாண்டி,
இனிமேல் இவ என் மகளே இல்லன்னு மனசுக்குள்ள தீர்மானம் பண்ணிக்கிட்டு,
ஒரு வார்த்தை கூட பேசாம அங்கிருந்து கிளம்பிட்டார்.
அவர் இப்படி இங்கு வந்து இவங்க ரெண்டு பேரையும் பார்த்தது இது எதுவுமே அவங்க ரெண்டு பேரும் பார்க்கவே இல்லை.
அந்த நேரத்துல நிலாவின் மனசுக்குள்ள இருந்த வலி,
அவளுக்கே புரியாத அளவுக்கு ஆழமா இருந்தது.
சொந்த வீட்டிலேயே,
அவளை ஒரு பாரமா பார்த்தாங்க.
வெறுக்க ஆரம்பிச்சாங்க.
சிறு வயதில் இருந்தே அந்த ஒரு வாழ்க்கை ஒரு நரகமா மாறிப் போச்சு.
ஆனா அதே வாழ்க்கையில…
இந்த இருட்டுக்குள்ள,
“உனக்குன்னு நான் இருக்கேன்”ன்னு சொல்லாமலேயே சொல்ற மாதிரி,
ஒருத்தன் வந்ததை நினைச்சதும்,
அவள் மனசுக்குள்ள இருந்த அந்த பாரம் எல்லாமே,
சுக்கு நூறாக உடைந்து போயிடுச்சு.
இப்போ…
அவள் முழுக்க சந்தோஷமா தான் இருந்தாள்.
ஆனா…
அப்பா…
அம்மா…
தங்கச்சி…
யாரையும் நினைச்சு கூட யோசிக்க முடியாத அளவுக்கு,
மனசு ரொம்ப தூரம் போயிடுச்சு.
“இவன் ஒருத்தன்…
என்கூட இருந்தா போதும்…”
அந்த அளவுக்கு அவள் மனசு பேச ஆரம்பிச்சது.
இதற்குக் காரணம் காதல் மட்டும் இல்ல…
அவளை எல்லாரும் ஒரு பாரமா பார்த்தாங்க.
ஆனா அவன்…
அவளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தான் அசிங்கமானவள் என்று தெரிந்தும் கூட என் கைகளை பிடித்து என்னோடு இப்போது வரையிலும் என்னை ஒரு ராணியாக அவன் கண்களால் பார்த்தான்.
அவளோட வேதனை அவனுக்குள்ளேயும் வலியாய் இறங்கியது.
அவளோட சந்தோஷம் அவன் மனசுக்குள்ள ஒரு சின்ன ஒளியாய் மாறியது.
அவள் முகம் குனிந்து இருந்ததைப் பார்த்ததும்,
விக்ரம் மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தி,
தன்னோட கைகளால் அவள் கண்ணோரம் தேங்கி இருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
அவளுடைய நெற்றியில் அவன் வைத்த அந்த முத்தம்,
வார்த்தை இல்லாமலேயே அவனுடைய அக்கறையை சொல்லிச்சு.
அவள் அவனை பார்த்தபடி,
“உன் கண்ணு ஏன் கலங்குது?”ன்னு கேட்டதும்,
அவன் கண்களில் இருந்த ஈரம் இன்னும் ஆழமாயிற்று.
“உன் கண்ணீரை என்னால பார்க்க முடியல…
நீ எனக்கு அவ்வளவு முக்கியம்,”ன்னு சொன்னான்.
“உன்னை சந்தோஷப்படுத்த
நான் எந்த எல்லைக்கும் போவேன்…”
அந்த வார்த்தைகள் அவள் மனசை கலக்க,
அவளுக்குள்ள ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது.
“நம்ம பார்த்ததும் பழகியதும்
ஒரு நாள் கூட முடியல.
முன்ன பின்ன தூரத்துல பார்த்திருக்கோம்,
ஆனா நம்ம பேசுனது
முழுசா 24 மணி நேரமும் இல்ல.
அதுக்குள்ள
எப்படி என் மேல உனக்கு
இந்த அளவுக்கு அன்பு வந்தது?
என்னை பார்த்து
நீ இரக்கப்படுறையா?
இந்த முத்தம்…
இந்த அணைப்பு…
இதெல்லாம்
என் மேல படுற பாவமா?
இல்ல
வேற ஏதாவது உணர்வா?
எனக்குள்ள இருக்குற உணர்வைப் பற்றி
நான் சொல்றேன்.
கண்டதும் காதல் கிடையாது என்னோடது.
என் வாழ்க்கையில
நான் ஏங்கியது
ஒரே ஒரு விஷயத்துக்காக தான்.
எனக்காக ஒருத்தன்…
என்னை மட்டுமே உலகமா நினைக்குற ஒருத்தன்.
என்னோட அழுகை
அவனுடைய அழுகையா இருக்கணும்.
என்னோட சந்தோஷம்
அவனுடைய சந்தோஷமா இருக்கணும்.
இந்த எல்லாத்தையும்
நான் உன்கிட்ட பார்த்தேன்.
ஆனா ஏன்?
ஒரே நாள்ல
இந்த உறவு
இந்த அளவுக்கு மாறியது
எனக்கு புரியல…
நான் உன்னை பார்க்கும்போது
உனக்கு என்ன மாதிரியான
ஃபீலிங்ஸ் வருது?
அதை நான் தெரிஞ்சுக்கலாமா?..”
கேள்விக்கு மேல் கேள்வியாக
அவள் அவனைப் பார்த்துக்கிட்டே கேட்டாள்.
பதில் வருவதற்கு முன்பே,
அந்த மௌனமே
அந்த நெருக்கத்தை
இன்னும் ஆழமா செய்தது.
ஆனால் அவன் எந்த பதிலும் சொல்லல.
அவளுடைய கேள்விகள் அவன் மௌனத்துக்குள்ள மெதுவா கரைய ஆரம்பிச்சது.
“உனக்கு என்ன தோணுது?..
இதுக்கு பேர் இரக்கமா தோணுதா?
இல்ல காதலா தோணுதா?..”
“என் கண்ண பாரு…
என் கண்ணுல என்ன தெரியுதோ,
உனக்கு எது புரியுதோ…
அதைத்தான் நான் பீல் பண்ணி பேசுறேன்.”
அந்த நொடியில் விக்ரம் மெதுவா மூச்சு விட்டான்.
அவள் கைகளுக்குள் இருந்த அவன் கைகளில்,
ஒரு உறுதியான பிடிப்பு வந்தது.
நான் கடந்து வந்த பாதை ரொம்ப மோசமானதுன்னு அவன் சொன்னபோது,
அவள் கண்ணுக்குள்ள ஒரு வலி தெரிஞ்சது.
“எல்லாரும் எனக்கும் இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டாலும்,
உண்மையில…
யாரும் இல்லாத மாதிரி ஒரு தனிமை
எப்பவும் என்கிட்ட இருந்துகிட்டே தான் இருக்கு.”
அவன் சொல்லிக்கிட்டே இருக்க,
அவளுடைய கண்கள் அவன் முகத்தை விட்டு விலகவில்லை.
“அதனால தான் என்னவோ தெரியல…
உன்னோட உணர்வோடு
என்னோட உணர்வுகள்
தானா கலந்துட்டு போயிடுச்சு.”
அவன் ஒரு நிமிஷம் நின்று,
அவள் நெற்றியை மெதுவா அவன் இதழ்களால் தொடுந்தான்.
“இதுக்கு பேர் வெறும் சிம்பதி கிடையாது, நிலா.
இது…
ஒருத்தருக்குள்ள இன்னொருத்தர்
தன்னையே அறியாம இடம் பிடிச்சுக்குற உணர்வு.
நம்ம உள் மனசு,
நம்மளை மீறியே
ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு,
சேர ஆரம்பிச்சுடுச்சு.
அது காதலா இல்லையா
எனக்கு பேர் தெரியாது.
ஆனா ஒன்று மட்டும் தெரியும்…”
அவன் அவள் கண்களையே பார்த்து சொன்னான்
“உன்னை பார்த்தப்போ
என் தனிமை குறைஞ்சது.
உன் சிரிப்புல
என் வாழ்க்கை கொஞ்சம் வெளிச்சம் கண்டது.
அது இரக்கம் இல்ல.
அது பயம் இல்லாத
ஒரு உண்மை.”
அந்த வார்த்தைகள் அவள் மனசை முழுசா நிரப்பிய அதே நேரத்துல,
திடீர்னு கைதட்டுற சத்தம்.
திரும்பிப் பார்த்ததும்,
ஐம்பது வயசுக்கு மேல இருக்கிற ஒரு அம்மா,
அவங்க ரெண்டு பேரையும் பார்த்தபடியே,
புன்னகையோட கைதட்டி கிட்டே
அங்க வந்து கொண்டிருந்தாங்க.
அவங்களை பார்த்ததும்,
நிலா அதிர்ச்சி ஆகி நின்னாள்.
“யார் அவங்க?..”
அடுத்த எபிசோட் ல பாக்கலாம்
