உயிராக வந்த உறவு அத்தியாயம் – 28

அத்தியாயம் – 28

மூன்று பேருக்கும் அந்த நாள் நடந்த உரையாடல் முடிந்த பிறகுவீட்டில் எல்லாம் வழக்கம் போல நகர,ஆனால் தாரணியின் மனம் மட்டும் அங்கேயே நின்றுவிட்டது.

அக்கா சொன்ன வார்த்தைகள்,

விக்ரம் சொன்ன வார்த்தையில் இருந்த உறுதி,“இது நடக்காது”என சொன்ன

அந்த ஒரு வரி அவளது உள்ளத்தை உடைத்தது.அந்த இரவு

அவள் படுக்கையில் படுத்திருந்தாலும் தூக்கம் வரவில்லை.மேலே சுவரை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“நான் இதை விட்டுட்டு போயிடலாமா…?அக்கா இவ்வளவு கஷ்டப்படுறப்போ நான் அமைதியா இருக்கணுமா…?” என 

அவள் மனதில் இரண்டு குரல்கள்.

ஒரு பக்கம் அக்காவின் வார்த்தை  “உன் வாழ்க்கையை வாழு…”

மறுபக்கம் அவளது இதயம் “அக்காவை காப்பாத்து…”என்றது..

சில நொடிகள் கழித்துஅவள் மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே நின்றாள்.

வெளியில் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.அந்த இருளைப் போலவே அவள் மனமும் குழப்பமாக இருந்தது.

அந்த நேரத்தில் தீரன் முகம் அவள் நினைவுக்கு வந்தது.அவன் சிரிப்பு,

அவன் காதல் இதை நினைத்தவுடன்

அவள் கண்கள் நனைந்தது.நான் அவனை விட்டுட்டேன்,அதற்குப் பிறகும் நான் என் முடிவை மாற்ற முடியுமா…?”

அவள் தன்னைத்தானே பார்த்துக் கொண்டாள்.

“நான் பாதி பாதையில நிக்க முடியாது,நான் ஏற்கனவே எல்லாம் இழந்துட்டேன்…”என நினைத்தஅந்த நொடியில்அவள் மனதில் ஒரு உறுதி பிறந்தது.“நான் இதை கண்டிப்பாக முடிப்பேன்…”

அடுத்த நாள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தாரணி வெளியே சென்றாள்.அவள் நேராக ஒரு மருத்துவமனைக்கு சென்றாள்.

ரிசெப்ஷன் மேசையில் நின்று கொண்டிருந்தாள்.“மாம்… எனக்கு டாக்டரை பார்க்கணும்…” என்று மெதுவாக சொன்னாள்.

“எந்த டிபார்ட்மெண்ட்…?” என்று அங்கு இருக்கும் பெண் கேட்க,

அவள் ஒரு நொடி தயங்கினாள்.

பிறகு மெதுவாக சொன்னாள்,“fertility…”

இங்கே காத்திருங்கள் என்று சொல்லி கொஞ்ச நேரம் கழித்து அவளை உள்ளே அழைத்தார்கள்.

டாக்டர் முன் உட்கார்ந்தவுடன்

அவள் கைகளை ஒன்றாக பிடித்துக் கொண்டாள்.ஏதோ ஒரு தயக்கம் அவளுக்கு,எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிக்கணும் டாக்டர்… என்று ஆரம்பிக்க

“சொல்லுங்க” என டாக்டர் தொடர

“ஒருத்தருக்காக நான் surrogate ஆக முடியுமா…?” என கேட்க

டாக்டர் அவளை கவனமாக பார்த்தார்.

“இது சாதாரண முடிவு இல்லை,உங்க குடும்பத்துக்கு தெரிஞ்சுதா பண்றீங்களா…?”என கேட்கவும்

தாரணி மெதுவாக தலையசைத்தாள்.

“இல்ல,ஆனா… இது நான் எடுத்த முடிவு…”என சொல்ல

டாக்டர் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.நீங்க இதை நன்றாக யோசிச்சீங்களா…?இது உங்க வாழ்க்கையை முழுக்க மாற்றும், உங்களுக்கு இன்னும் திருமணம் கூட ஆகலை நினைக்கிறேன் என்று சொல்ல

தாரணி கண்களை மூடி மெதுவாக சொன்னாள்,“என் வாழ்க்கை ஏற்கனவே மாறி போயிடுச்சு டாக்டர்…”

அந்த ஒரு வரிஅவளது மன நிலையை முழுவதும் சொல்லிவிட்டது.

டாக்டர் மெதுவாக தலை அசைத்தார்.

“சரி… சில டெஸ்ட் எடுக்கணும்…”என சொல்ல

அந்த நொடியில் தாரணி ஒரு பாதையை தேர்வு செய்துவிட்டாள்.அது

அவளது அக்காவுக்காக மட்டும் அவளது வாழ்க்கையை மறைத்து செய்யும் தியாகப் பாதை.

ஆனால் அவளுக்குத் தெரியவில்லை…

இந்த முடிவு மீண்டும் தீரனையும் அவளது வாழ்க்கையையும் சந்திக்க வைக்கப் போகிறது என்று 

இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு மாலை நேரத்தில் வீட்டில் ஒரு விசித்திரமான அமைதி நிலவ,அனன்யா ஹாலில் உட்கார்ந்து இருந்தாள்.அவள் கையில் ஒரு காகிதம். அது மருத்துவமனை ரிப்போர்ட்.அந்த ரிப்போர்ட் அவள் கைகளில் நடுங்கிக் கொண்டிருந்தது.

“தாரணி…” என்று அவள் மெதுவாக அழைத்தாள்.

அந்த நேரத்தில் தாரணி உள்ளே வந்தாள்.அவள் முகத்தில் ஒரு சோர்வு தென்பட ஆனால் மனதில் ஒரு உறுதி இருந்தது.

“என்ன அக்கா…?” என்று அவள் சாதாரணமாக கேட்க,

அனன்யா அவளை நேராக பார்த்தாள்.

“இது என்ன…?” என்று அவள் கையில் இருந்த ரிப்போர்ட்டை அவள் முன் வைத்தாள்.தாரணி அதை பார்த்தவுடன்

அவள் முகம் மாறி விட்டது.அவள் கண்கள் ஒரு நொடி கீழே போயிற்று.

அவள் பேசவில்லை.“நான் இது என்னன்னு கேட்டேன் தாரணி…”என கேட்கும் போது அனன்யாவின் குரல் கடுமையாக இருந்தது.

“இது என்ன சொல்லு…?”என கேட்க

சில நொடிகள் அமைதியாக இருந்த 

பிறகு தாரணி மெதுவாக சொன்னாள்.

“அக்கா… நான்…”அது வந்து.. என ஆரம்பிக்க

“போதும்!” என்று அனன்யா சத்தமாக சொன்னாள்.

அந்த சத்தம் அந்த வீட்டில் முழங்கியது.

“நான் என்ன சொன்னேன்…?,இந்த விஷயம் இங்கேயே முடிஞ்சு போகணும்னு சொன்னேன்ல…?”என்று 

அவள் குரல் கோபத்தில் நடுங்கியது.

அப்புறம் நீ என்ன பண்ணிருக்கே,

எங்களுக்குத் தெரியாம மருத்துவமனைக்குப் போய் இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கே…?” என சொல்ல

தாரணி கண்ணீர் அடக்கிக் கொண்டு நின்றாள்.“அக்கா… நான் உனக்காக…”என்று ஆரம்பித்தாள்

“எனக்காகவா…? என அனன்யா விரக்தியாக சிரித்தாள். அந்த சிரிப்பில் ஒரு வேதனை இருந்தது..

இது அன்பு இல்ல தாரணி,இது… என்னை தண்டிக்குற மாதிரி இருக்கு…” என்று சொல்ல

அந்த வார்த்தை தாரணியை அதிரச்செய்தது.

“நான் உன்னிடம் என்ன கேட்டேன்…?”

“உன் வாழ்க்கையை வாழு என்று தான் கேட்டேன்,ஆனா நீ என்ன பண்ணிருக்கே?” என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

நீ உன் வாழ்க்கையை நான் மறைமுகமா அழிக்கறே என சொல்லவும் உடனே தாரணி அழுதாள்.

“அக்கா, நான் உன்னை இப்படி கஷ்டப்படுறது பார்க்க முடியல…”என சொல்ல

அனன்யா உடனே “அதனால தானா நீ என்னை இன்னும் பெரிய குற்ற உணர்ச்சியில் தள்ளுறே?”நீ இந்த முடிவு எடுத்தா,நான் என்ன மாதிரி பெண்ணா இருப்பேன்…?”

“என் தங்கச்சி வாழ்க்கையை பயன்படுத்திக்கிட்டு குழந்தை பெறுறவளா நான்…?” என்று சொல்லும் போதே அவள் குரல் உடைந்து போனது.

“எனக்கு அந்த குழந்தை வேணாம் தாரணி” என்று சொல்ல அந்த வார்த்தை தாரணியின் இதயத்தை கிழித்தது.

அவள் மெதுவாக சொன்னாள்.

“நான் உன்ன விட மாட்டேன் அக்கா,நான் எப்பவும் உன்னோட இருப்பேன்”என்று சொல்ல

அனன்யா தலையசைத்தாள்.

“இல்ல,இந்த முடிவு உன்னை என்னிடமிருந்து பிரிக்கும்” என சொல்ல

அந்த நேரத்தில் விக்ரம் உள்ளே வந்தான்.அவன் இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தான்.“இது என்ன நடக்குது…?” என்று அவன் கடுமையாக கேட்டான்.அவன் ரிப்போர்ட்டை பார்த்ததும்,அவனது முகம் கடினமாக மாறியது.

“தாரணி…”அவன் குரல் அமைதியாக இருந்தாலும் அதில் ஒரு எச்சரிக்கை இருந்தது.

“நான் தெளிவா சொன்னேன்ல…?”

தாரணி தலை குனிந்தாள்.

விக்ரம் மெதுவாக சொன்னான்.

“இது உன் அக்கா மேல இருக்குற அன்பு இல்ல,இது தவறு…” என்று அவன் நேராக அவளை பார்த்தான்.

“நீ இந்த முடிவை இப்போவே நிறுத்தணும்” என சொன்னதும் அந்த அறையில் மூச்சு வாங்க முடியாத அளவுக்கு பதட்டம்.தாரணி மெதுவாக தலையை உயர்த்த அவள் கண்களில் கண்ணீர் இருந்தாலும்அதில் ஒரு பிடிவாதம்.

“நான் இதை நிறுத்த மாட்டேன்…”

அவள் மெதுவாக சொன்னாள்.

அந்த ஒரு வரி அனன்யாவையும் விக்ரமையும் உறைய வைத்தது.

அந்த நொடியில்அந்த குடும்பத்தில் ஒரு பெரிய பிளவு உருவாகி விட்டது.

அனன்யா மெதுவாக பின்னோக்கி நடந்தாள்.அவள் கண்களில் ஒரு பயம்.

“நான் உன்னை இழக்கிறேன்னு தோணுது தாரணி…” என்று சொல்லும் போது அவள் குரல் நடுங்கியது.

ஆனால் தாரணி அமைதியாக நின்றாள்.

அவள் மனதில் ஒரே ஒரு முடிவு தான்.

“நான் இதை முடிப்பேன்,ஆனால்…

அவளுக்குத் தெரியவில்லை…

இந்த முடிவுஅவளது குடும்பத்தையும்

அவளது காதலையும் முழுவதும் மாற்றப் போகிறது என்று 

அந்த நாள் நடந்த சண்டைக்குப் பிறகு

அந்த வீடு மாறிப் போயிருந்தது.

அனன்யா,தாரணி இருவருக்கும் நடுவில் ஒரு கண்ணுக்கு தெரியாத தூரம்.பேச்சுகள் குறைந்ததுசிரிப்புகள் மங்கியது.ஒரே வீட்டில் இருந்தாலும் மனங்கள் பிரிந்து நின்றது.

இரண்டு மாதங்கள் கழிந்தது.

அந்த இரண்டு மாதங்கள் தாரணிக்கு மிகவும் கஷ்டமானது.அக்காவுடன் பேசவே முடியவில்லை.அவள் அருகில் இருந்தாலும் தூரத்தில் இருப்பது போல.

பலமுறை பேச முயன்றாள்.

ஆனால் அனன்யாவின் ஒரு வரி பதில் அல்லது அமைதிஅவளை மீண்டும் பின் வாங்க வைத்தது.

“நான் தான் தவறாஅவளுக்காக தான் எல்லாம் நினைச்சேன்…” என்று 

அவள் மனதில் ஆயிரம் கேள்விகள்.

ஆனால் அவள் எடுத்த முடிவு மட்டும் மாறவில்லை.அவள் அமைதியாக இருந்தாள்.

ஒரு காலை வேளையில்

வீட்டில் வழக்கமான அமைதி.

தாரணி சமையலறையில் இருந்தாள்.

அந்த நேரத்தில்“தாரணி…” என்று அனன்யா மெதுவாக அழைத்தாள்.

அந்த குரலில் ஏதோ மாற்றம் இருந்தது.

தாரணி திரும்பிப் பார்த்தாள்.

அனன்யா கதவின் அருகில் நின்றிருந்தாள்.அவள் முகத்தில் ஒரு கலக்கம்,ஒரு தயக்கம்… அதே நேரத்தில் ஒரு மெல்லிய மகிழ்ச்சி.

“என்ன அக்கா…?” என்று தாரணி மெதுவாக கேட்டாள்.

அனன்யா மெதுவாக அவள் அருகில் வந்தாள்.அவள் கையை பிடித்தாள்.

அந்த தொடுதலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு பாசம்.

“நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்…” என்று அவள் குரல் நடுங்கியது.

தாரணி சற்றே பதட்டமானாள்.

“என்ன அக்கா…?”

அனன்யா கண்களை கீழே குனிந்தாள்.

பிறகு மெதுவாக “நான்… கர்ப்பமாக இருக்கேன்…” என்று சொல்ல

அந்த ஒரு வரி அந்த வீட்டின் காற்றையே நிறுத்தியது போல இருந்தது.

தாரணி சில நொடிகள் அப்படியே நின்றாள்.அவள் கேள்வியாக பார்த்தாள்.

“அக்கா… நீ என்ன சொல்றே…?”

அனன்யா கண்ணீருடன் சிரித்தாள்.

“ஆமா தாரணி…”

“டாக்டர் கிட்ட கான்ஃபார்ம் ஆயிடுச்சு…”

அந்த நொடி தாரணியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.அவள் நம்ப முடியாமல் தலையசைத்தாள்.

“இது… எப்படி…?”

அனன்யா மெதுவாக சொன்னாள்.எனக்கும் தெரியல,ஆனா… இது நடந்துடுச்சு…” என்று 

அந்த வார்த்தை கேட்டவுடன்தாரணி உடைந்து அவளை கட்டிப்பிடித்தாள்.

“அக்கா…!”அவள் குரலில் மகிழ்ச்சி கலந்த அழுகை.

நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,

உனக்கு இதை கிடைக்கணும் அக்கா என அவள் அழுதபடி சொன்னாள்.

அந்த நேரத்தில் விக்ரம் உள்ளே வந்தான்.அவனை பார்த்ததும் அனன்யா சிரித்தாள்.“அவளுக்கு சொல்லிட்டேன்…” என்று மெதுவாக சொன்னாள்.

விக்ரம் முகத்தில் ஒரு பெரிய சிரிப்பு.

அவன் தாரணியை பார்த்தான்.

“இது நமக்கு எல்லாருக்கும் ஒரு புதிய ஆரம்பம்…” என்று சொன்னான்.

தாரணி கண்ணீருடன் சிரித்தாள்.

அவள் மனதில் ஒரு சுமை இறங்கியது.

நான் எடுத்த அந்த முடிவு,அது தேவையில்லாம போயிடுச்சு என்று 

அவள் அமைதியாக நினைத்தாள்.

அந்த வீட்டில் மீண்டும் சிரிப்பு திரும்பியது.பாசம் திரும்பியது.

ஆனால்…தாரணி மனதில் இன்னும் ஒரு விஷயம் மட்டும்.தீரன்.

“அவனுக்கும் இந்த மகிழ்ச்சி தெரிஞ்சா,அவன் என்ன நினைப்பான்…?”என்றுஅவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.

வாழ்க்கை ஒரு நொடியில் எல்லாத்தையும் மாற்றி விடும்.

ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்தாள் தாரணி.

வெளியில் மழை நின்றுவிட்டது.ஆனால் அவள் மனத்தில் இன்னும் ஒரு சிறிய குழப்பம்.அக்காவின் மகிழ்ச்சி, வீட்டில் சந்தோஷம் நிரம்பிய சிரிப்பு அவை எல்லாம் அவளுக்கு ஒரு நிம்மதி கொடுத்திருந்தது.ஆனால்

ஒரு கேள்வி மட்டும் அவளை விடவில்லை.

“அவனுக்கும் இது தெரிஞ்சா  அவன் என்ன நினைப்பான்…?”தீரன் முகம் அவள் மனதில் தெளிவாக தோன்றியது.

அவன் அந்த நாளில் கேட்ட கேள்வி

“இதுக்காகத்தான் என்னை விட்டுட்டே…?”என அவன் சொன்ன வார்த்தை நினைத்து அவள் கண்களை மூட இப்போ அவனுக்கு தெரிஞ்சா,நான் செய்தது எல்லாம் தேவையில்லாம போயிடுச்சுன்னு…”

“நான் அவனை விட்டு போனது அவனுக்கு ஒரு காரணம் இருந்துச்சு,ஆனா இப்போ அந்த காரணமே இல்லன்னா…?”

அவள் மெதுவாக சுவரை சாய்ந்து நின்றாள்.

“அவன் என்னை மன்னிப்பானா…?”

“இல்ல… என்னை வெறுப்பானா…?”

அந்த கேள்வி அவளது இதயத்தை 

இறுக்கமாக பிடித்தது.

அவள் நினைவுக்கு வந்தது.

அவன் கோபம்,அவன் வலி,

அவன் உடைந்த குரல் “இனி என்னிடம் வராதே…” என்று சொன்ன வார்த்தை..

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“நான் தான் அவனை காயப்படுத்தினேன்,அவன் இப்போ சந்தோஷமா இருக்கணும்…” என்று நினைத்தாள்..

அந்த இரவு வீட்டில் எல்லாம் அமைதியாக இருந்தது.அனன்யா ஓய்வாக படுத்திருந்தாள்.அவள் முகத்தில் ஒரு மென்மையான மகிழ்ச்சி.

அவள் கையை தன் வயிற்றில் வைத்து மெதுவாக சிரித்தாள்.அந்த சிரிப்பை பார்த்த விக்ரம் மனதில் ஒரு நிம்மதி.

“இவளுக்கு இது தான் வேணும்,ஆனால்

அந்த நிம்மதிக்குள் இன்னும் ஒரு கவலை இருந்தது.தாரணி.

அவன் மெதுவாக ஜன்னல் அருகே நின்றான்.அவனது நினைவில் தாரணி முகம்.அவள் தீரனைப் பற்றி பேசும்போது அவள் கண்களில் தெரிந்த அந்த காதல்…அவள் அவனை விட்டு விலகிய நாள்,அவள் மனம் உடைந்ததை அவன் தெளிவாக பார்த்திருந்தான்.

“அவள் இன்னும் அவனை மறக்கல,அவள் வாழ்க்கை இங்கே நின்று போயிடக்கூடாது…” என்று 

அவன் மெதுவாக திரும்பி அனன்யாவை பார்த்தான்.

இப்போ தான் சரியான நேரம்…” என்று அவன் மனதில் நினைத்தான்.

“அனன்யா…”அவன் மெதுவாக அழைத்தான்.

அவள் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன விக்ரம்…?”

அவன் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான்.சில நொடிகள் அமைதியாக இருந்தான்.“நான் உன்னிடம் ஒரு விஷயம் பேசணும்” என ஆரம்பிக்க அவன் குரல் சீரியஸாக இருந்தது.

அனன்யா சற்று கவனமாக பார்த்தாள்.

“என்ன…?”

விக்ரம் மெதுவாக ஆரம்பித்தான்.

“தாரணி பற்றி…”

அந்த பெயர் வந்தவுடன் அனன்யா அமைதியானாள்.

“அவள் இங்கே இருக்குறது,அவளுக்கு நல்லதா இருக்கு என்று எனக்கு தோணல…” என்று சொல்லும் போது 

அனன்யா புரியாமல் பார்த்தாள்.

“ஏன்…?”

விக்ரம் ஆழமாக மூச்சு விட்டான்.

அவள் இன்னும் கடந்த காலத்துல இருந்து வெளியே வரல…”

“தீரன்,அந்த பெயர் வந்தவுடன் அனன்யா சற்று அதிர்ந்தாள்.

நீ கவனிச்சியா…?அவள் அவனை மறக்கவே முடியல என்று சொல்ல அனன்யா மெதுவாக தலையசைத்தாள்.

“எனக்கும் தெரியும்…”

விக்ரம் தொடர்ந்தான்.

“அதனால தான் அவள் அந்த surrogate முடிவு எடுத்தாள்,அவளுக்கு வாழ்க்கை வேண்டாம் என்று நினைச்சுட்டா…”

அந்த வார்த்தை கேட்டவுடன் அனன்யாவை நொந்துபோனாள்.

அவள் இங்கேயே இருந்தா,தினமும் அதே நினைவுகளோட வாழ்வா,அது அவளை மெதுவா உடைக்குது என்று 

அவன் அவளை நேராக பார்த்தான்.

நம்ம அவளை இங்கிருந்து கொஞ்ச நாள் தள்ளி அனுப்பணும் என்று சொன்னதும்

அனன்யா உடனே கேட்டாள்.

“எங்கே…?”

அம்மா வீடு,அவள் சூழ்நிலை மாறணும்,அவள் மனசு மாறணும்…”

அனன்யா சற்று தயங்கினாள்.

“அவள் ஒத்துக்குவாளா…?”

விக்ரம் மெதுவாக சிரித்தான்.

“நாம சொல்லணும்,அது அவளுக்கு நல்லதுன்னு புரிய வைக்கணும்…”

அவன் மெதுவாக சொன்னான்:

இது அவளை தள்ளுவது இல்ல அவளை காப்பாத்துறது என்று சொல்ல

அனன்யா கண்களில் கண்ணீர்.

அவள் இல்லாம நான் இருக்க முடியுமா…?விக்ரம் அவள் கையை பிடித்தான்.

இது சில நாட்கள் மட்டும் தான்.

அவள் திரும்பி வரும் போதுஅவள் வேற மாதிரி இருப்பா என்று சொல்ல

அனன்யா மெதுவாக தலையசைத்தாள்.

அவள் மனதில் ஒரு வலி இருந்தாலும்

அவள் புரிந்தாள்.

“அவளுக்கும் அவளை தன் அருகில் வைத்துக் கொள்ளாமல் அம்மா வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று தான் நினைத்தால்..சரி நாளைக்கு அவளிடம் பேசலாம்…” என்றாள் 

அந்த இரவு இருவரும் ஒரு முடிவு எடுத்தார்கள்.அவர்களுக்கு தெரியாமல்

அந்த முடிவு தாரணியின் வாழ்க்கையை ஒரு புதிய பாதைக்கு கொண்டு செல்லப் போகிறது.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page