நலம் தானா ஊதாப்பூவே!!🪻-23

“உணவும் உள்ளே செல்ல பிடிக்காமல் என்னை விட்டு வெளியே செல்ல பார்க்கிறது உன்னை போல “
 

 

….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
 

 

பாகம் -23

 

அவள் அடர்ந்த ரோஜா நிற இதழ்களில் இருந்து நிறம் முழுவதும் அவன் சாக்லேட் இதழ்களின் மூலம் அவனிடம் சேர்ந்தது. அவளை தேடி வந்தவன் அவளை பார்த்து விட்ட மகிழ்வை அவளிடமே காண்பித்து விட்டான். அவள் அவன் தீண்டலில் விலக வில்லை அவனை மானசீகமாய் ஏற்றுக் கொண்டாள். மூடிய அவள் விழிகளும் விலகாத அவளும் அவனை ஏற்றுக் கொண்டதை உணர வைத்து விட்டது.
 

 

அவளின் இடையில் பதிந்திருந்த விரல்கள் நகரவும் முடியாமல், அமைதி கொள்ளாமல் தவித்தது. பொது இடம் இதற்கு மேல் தாங்காது என்று கருதியவன் விலக மனமின்றி அவளிடமிருந்து விலகியவன், தங்களையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் பிரியாவிடம் 
 

 

“இவளை கொஞ்சம் பிடிச்சுக்க மா விழுந்துட போறா ” வர்மா சொன்னதும் 
 

 

“ஓகே பாய் ஜி ” வர்மாவை அண்ணனாக ஏற்றுக் கொண்டு, ஆரண்யாவை பிடித்துக் கொண்டாள். கண்கள் மூடி இருந்தவள் ப்ரியா பிடித்துக் கொண்டதும் கண் திறந்து பார்க்க, வர்மா அங்கு இல்லை.
 

 

“எங்க டி அவரை காணோம் ” பிரியாவிடம் கேட்டாள். ஒரு வேளை கனவோ என்று தோன்றியது.
 

 

“இங்க தான்டி இருந்தாரு, பாய்ஜி, இப்போ காணோம். சும்மா சொல்லக்கூடாது, ஆளு செம ஸ்மார்ட் “
 

 

பிரியாவை முறைத்தவள். உதட்டை சுழித்துக் கொண்டாள்.
 

 

ஆரண்யாவின் உதட்டினை தொட்டுப் பார்த்தவள், “வரும் போது டார்க் பிங்க்ல இருந்த லிப்ஸ் இப்போ லைட் பிங்கா மாறிடுச்சு, சும்மா பள பளண்ணு மின்னுது, இதான் உன் அழகான லிப்ஸ்க்கு காரணமா “
 

 

“அய்யோ ப்ரியா ஏன் டி இப்டிலாம் பேசுற, நானே அவர் எப்படி இங்க வந்தாரு, அவர் கொடுத்த அதிர்ச்சில இருந்து வர முடியாம இருக்கேன் இதுல நீ வேற “
 

 

“அவர் உன்னை தேடி தான் வந்துருக்காரு இன்னுமா இது புரியலை உனக்கு “
 

 

இந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்லுவாள், அவனை மீண்டும் பார்க்க தோன்றியது பார்வையை சுற்றிலும் சுழல விட்டாள். அவன் அவள் கண்களுக்குள் அகப்படவில்லை.
 

 

“பாய் ஜி இங்க தான் இருப்பாரு, வா தேடி பார்ப்போம் “
 

 

ப்ரியா கூப்பிட்டதும் இருவரும் நுழைவு வாயிலில் பார்க்கில் தனக்கு தெரிந்த வேலை செய்யும் ஒருவரிடம் வர்மா புகைப்படம் காட்டி கேட்க, 
 

 

“நல்லா தெரியுமே புதுசா கல்யாணம் ஆனவங்க இங்க சுத்தி பார்த்துட்டு, நைட் டெசேர்ட்ல தங்குறதுக்கு விசாரிச்சிட்டு போனாங்க ” அவர் சொன்னதைக் கேட்டதும் ஆரண்யாவுக்கு தாங்க முடியவில்லை. ‘ஏன் இன்னமும் என்னை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறான். அவருக்கு நிதிஷாவுடன் திருமணம் ஆகி விட்டதா ‘ நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை அவளால்,
 

 

தோழியின் மன நிலை உணர்ந்த ப்ரியா “அவர் வேற யாரையோ பார்த்துட்டு கூட சொல்லி இருக்கலாம், வா நாம டெசேர்ட்ல டெண்ட் அடிக்கிற ராணா அங்கிள் கிட்ட கேட்கலாம் ” ஆரண்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவள் காரில் அமர்ந்து கொண்டு ராணா அங்கிள்க்கு அழைத்து பேசினாள்.
 

 

வெளியில் இருப்பதாகவும் இன்று ஸ்பெஷலாக 2 திருமண  ஜோடிகளுக்கு கூடாரம் அமைக்க வேண்டும் பெயர் விவரம் தெரியாது கேட்டு சொல்கிறேன் என்று சொல்லவும், ஆரண்யாவுக்கு அங்கு செல்ல வேண்டும் என்று உள் மனம் சொல்லிக் கொண்டிருக்க,
 

 

“ப்ரியா ப்ளீஸ் டி நான் டெசேர்ட் போய் பார்க்கணும், உன் கூட இருக்கேன்னு சொல்லிடு “
 

 

இது வரைக்கும் ஆரண்யா எதுவும் கேட்டதில்லை. முதல் முறை கேட்கிறாள் அதுவும் அவளின் பாப்புவிற்க்காக, அவளின் தூய்மையான காதலுக்காக, ப்ரியா சரி என்று சொன்னதும் பிரியாவின் கன்னத்தில் முத்தமிட்டவள் அவளை டெசேர்ட் முன்னே விட்டு செல்ல கேட்டாள். சிரிப்புடன் பிரியாவும் ஆரண்யாவை விட்டு சென்று விட்டாள்.
 

 

ஜெய்சல்மாரில் பாலைவன இரவு கூடாரத் தங்குதல் (Desert Camping) ஒரு மறக்க முடியாத அனுபவம். சாம் (Sam) அல்லது கூரி (Khuri) மணல் குன்றுகளில் ஆடம்பர மற்றும் பட்ஜெட் கூடாரங்கள், ஒட்டக சவாரி, ஜீப் சவாரி, ராஜஸ்தானி நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் இரவு உணவோடு கூடிய கலாச்சார நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது.
 

 

சம்தா மணல் குன்றுகள் (அதிக வணிகமயமானது, பரபரப்பானது) மற்றும் கூரி மணல் குன்றுகள் (அமைதியானது, இயற்கையானது).

 

வசதிகள்: ஸ்விஸ் கூடாரங்கள், இணைக்கப்பட்ட குளியலறைகள், படுக்கைகள், மற்றும் சூடான உணவு.

 

செயல்பாடுகள்: மணல் திட்டுக்கள் மீது ஒட்டகச் சவாரி,  ஜீப் சவாரி, பாலைவனத்தில் நட்சத்திரங்களுக்கு அடியில் தங்குவது, ராஜஸ்தானி கலாச்சாரத்தை அனுபவிக்க உதவும். 

 

ஆடம்பரமான கூடார வசதியை விரும்புகிறவர்களுக்கு , அல்லது இயற்கை சார்ந்த அமைதியான சூழலை விரும்புகிறவர்கள் என சுற்றுலா வருபவர்களின் வசதி, விருப்பதிற்கு ஏற்ப செய்து தரப்படுகிறது.

 

ஜெய்சல்மாரில் பாலைவன இரவு கூடாரத் தங்குதல் (Desert Camping) ஒரு மறக்க முடியாத அனுபவம். சாம் (Sam) அல்லது கூரி (Khuri) மணல் குன்றுகளில் ஆடம்பர மற்றும் பட்ஜெட் கூடாரங்கள், ஒட்டக சவாரி, ஜீப் சவாரி, ராஜஸ்தானி நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் இரவு உணவோடு கூடிய கலாச்சார நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.
 

 

முக்கிய தகவல்கள்:

 

சிறந்த இடங்கள்: சம்தா மணல் குன்றுகள் (அதிக வணிகமயமானது, பரபரப்பானது) மற்றும் கூரி மணல் குன்றுகள் (அமைதியானது, இயற்கையானது).

 

வசதிகள்: ஸ்விஸ் கூடாரங்கள், இணைக்கப்பட்ட குளியலறைகள், படுக்கைகள், மற்றும் சூடான உணவு.

 

செயல்பாடுகள்: மணல் திட்டுக்கள் மீது ஒட்டகச் சவாரி, 4×4 ஜீப் சவாரி

 

பாலைவனத்தில் நட்சத்திரங்களுக்கு அடியில் தங்குவது, ராஜஸ்தானி கலாச்சாரத்தை அனுபவிக்க உதவும். 

 

நீங்கள் ஆடம்பரமான கூடார வசதியை விரும்புகிறவர்களுக்கும் , அல்லது இயற்கை சார்ந்த அமைதியான சூழலை விரும்புவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
 

 

ஆரண்யா தோழிகளுடன் ஒரு முறை இங்கு வந்து தங்கி இருக்கிறாள். ஆட்டம் பாட்டு அரட்டை என மகிழ்ந்த நினைவுகள் ஒரு பக்கம் வந்தாலும் இப்போது அவள் மனம் முழுவதும் இருப்பது அவன் ஒருவனே, அவன் யாருடன் வந்திருக்கிறான் என்பதே.
 

 

இரவு பாடல், நடனத்திற்கு மேடை, அமர்ந்து பார்ப்பதற்கு படுக்கை விரிப்புகள்,  உருளை வடிவில் தலையணைகள் என அந்த காலத்து அரண்மனையில் ராஜ உபச்சாரத்தில் விருந்து, இசை போன்ற தோற்றத்தில் இருக்கும்.
 

 

அதன் இருபுறமும் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். விருந்து உண்பதற்காக ஆங்காங்கே மேசைகள் அதை சுற்றி இருக்கைகள் இருக்கும். 
 

 

வர்மாவை எங்கு இருக்கிறான் என்று அந்த இடத்தை சுற்றி தேடினாள். அவள் அணிந்திருந்த நீண்ட பாவாடை அவள் நடக்கும் போது தரையில் புரள வேகமாக நடப்பது சிரமமாக இருந்தது அதை இரு கைகளிலும் கொஞ்சமாய் பிடித்துக் கொண்டு அவள் நடந்து வருவது ராஜபுத்திர ராணி நடந்து வருவது போல் இருந்தது.
 

 

மேடையின்  முன்  அவள் அவன் இருக்கிறானா என்று பார்த்துக் கொண்டிருக்க, ஓட்டகத்தில் இருந்து இறங்கினான் வர்மா ராஜபுத்திர அரசனை போல் அவன் ஓட்டகத்தின் மேலே இருக்கும் போதே அவளைப் பார்த்து விட்டான்.
 

 

அவன் நடந்து வரும் போது இருள் கவ்வத் தொடங்கியதால் ஆங்காங்கே அமைக்கப்பட்ட வண்ண விளக்குகள் ஒளிரத் தொடங்கியது. பாட்டு பாடுபவர்களும், இசை வாத்தியங்கள் இசைப்பவர்கள், நடனம் ஆடுபவர்கள் என அனைவரும் அந்த இடத்தில் குழுமி இருக்க, ஆரண்யா இன்னுமே வர்மாவை பார்க்க முடியாமல் திணறினாள்.
 

 

அவளின் பார்வையை தன்னை தேடுவதை ரசித்துக் கொண்டே அவள் கண்ணில் படாமல் இருந்தான் வர்மா, தலைப்பாகையும்,வண்ண உடையும் ராஜஸ்தான பாரம்பரிய உடையில் இருந்ததால் ஆரண்யாவால் அடையாளம் காண முடியவில்லை.
 

 

கூமர் நடனம் பெண்கள் நீண்ட பாவாடை அணிந்து சுழன்று ஆடும் புகழ்பெற்ற நடனம். கமாய்சா கம்பியிசைக்கருவி.

 

ராவன்ஹத்தா, கம்பி கருவி.புங்கி,சங்  காற்று மற்றும் தாள வாத்தியங்கள் இசைக்க  மாண்ட்,பாணி பாடல்கள் மிகவும் பிரபலமானவை, இவை அரண்மனை மற்றும் பாலைவன வாழ்க்கையை அழகாய் சித்தரிக்கும்.
 

 

அடர்ந்த குங்கும சிவப்பில் வெள்ளி இழைகள் சேர்ந்து சதுர வடிவில் உடை முழுவதும் வடிவமைக்கப்பட்டு அதை சுற்றி வெள்ளி நிற இழைகள், உடையின் ஓரங்களிலும் வெள்ளி இழைகள் தொங்க விடப்பட்டு, நீண்ட பாவாடை, பேண்டும் அணிந்திருப்பர், அதன் மேல் இடுப்பு வரை சட்டை போன்ற மேல் ஆடை அதன் மேல் தாவணி அது பின் புறமாய் நிலத்தில் புரளும் வகையில் ஆடை இருக்கும்.
 

 

இசைக்கு ஏற்ப பெண்கள் சுழன்று ஆடிட, நீண்ட பாவாடை போன்ற ஆடை மயில் தோகை போல் விரிந்து சுழல இரவில், விளக்குகளின் ஒளியில் அந்த ஆடை அழகாய் மின்னி சுழல, சொர்க்கமே நிலத்தில் வந்து இறங்கியது போல் இருக்கும்.
 

 

தால் பாட்டி சுர்மா ராஜஸ்தானின்  பாரம்பரிய உணவு, அரச இனிப்பு, உணவுப் பிரியர்களின் சுவை மொட்டுகளை வியக்க வைக்கும் அளவுக்கு கம்பீரமானது. மோகன் தால் ராஜஸ்தானுக்கே உரித்தான ஒரு தனித்துவமான இனிப்பு வகையாகும். இது கடலை மாவு மற்றும் உலர் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நெய்யின் நறுமணமும் சுவையும் இந்த இனிப்புக்கு மேலும் மெருகூட்டு கின்றன.
 

 

மிர்ச்சி படாக்கள், மாலை நேரத் தேநீர்,ஜோத்பூரின் மாவா கச்சோரிகள் ராஜஸ்தானில் கட்டாயம் சுவைக்க வேண்டிய ஒரு உணவு வகையாகும். இந்த கச்சோரிகள், மொறுமொறுப்பான உலர் பழங்களுடன் மாவாவையும் உள்ளே வைத்து, சூடாகப் பரிமாறப்படுவதால், உங்கள் காலைப் பொழுதுகள் இனிமையாகவும் நிறைவாகவும் மாறும்!
 

 

அசைவ உணவுகளில் மிகவும் பொதுவான ஒரு பகுதியான லால் மாஸ், அதன் நிறத்திற்குக் காரணம் காரமான சிவப்பு மிளகாய்களே. தக்காளி, மிளகாய் மற்றும் சுடச்சுட மசாலாப் பொருட்கள் கலந்த சூடான குழம்பில் இந்த இறைச்சி சமைக்கப்படுகிறது.
 

 

ராஜஸ்தானத்தில் பெரும்பாலும் இனிப்பு வகைகள் அதிக அளவில் இருக்கும். நெய்யின் மணமும் இனிப்பும் அவர்களின் உணவில் அதிகம் இருக்கும். பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் நெய், தயிர், பால் ஆகியவை உணவில் அதிகம் இருக்கும்.
 

 

நடனத்தின் அழகை விட ஆராண்யாவின் கண்களின் சுழற்சியில் ஒரு வித மயக்கம் ஆட்கொள்ள, தன்னை தேடி தவித்துக் கொண்டிருப்பவளை நோக்கி நடந்தான் வர்மா.
 

 

தேடி தேடி களைத்து போனவள் வாடிய ரோஜாவைப் போல் திரும்பி செல்ல கால் எடுத்து வைக்க, முரட்டு கரம் ஒன்று அவள் இடையைச் சுற்றி கையிட்டு அவளை திருப்பியது.

திடீர் தொடுகையில் அதிர்ந்தாலும் கரத்தின் பிடியின் வலிமை, அதன் வெம்மை அவளுக்கு உணர்த்தியது. அவன் அணிந்திருந்த ஆடையின் அமைப்பு தான் அவளை குழப்பி விட்டது. புருவம் உயர்த்தி காட்டியதில் குறிப்பு எடுத்துக் கொண்ட இதயம் அவளிடம் உன் மாறன் தான் என்று இசை மீட்ட, மெல்ல கையை உயர்த்த, அவளை இடுப்போடு தூக்கினான் பாலைவன ராஜா அவன் தூக்கியதும் தலைப்பாகையை சமயம் பார்த்து எடுக்க மாட்டிக் கொண்டான் மாற வர்மன்.

திகைத்துப் பார்த்தாள் மாறனின் ராஜபுத்திர இளவரசி..

அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page