என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே
தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். ***
இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்..
****
குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்..
