அத்தியாயம் 22

 

ஐஸ் ஸ்லெட்டில் இருவரும் சென்று கொண்டிருந்த போது அபிஷேக் ஜோஸ்வினியின் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்தான்.

ஐஸ் ஸ்லெட் மிக வேகமாக சென்று கொண்டிருந்த போது அவன் ஜோஸ்வினியின் மகிழ்ச்சியை ரசித்தான்.

அப்போது அவர்களுக்கு அருகில் வந்த ஒரு ஸ்லெட் கட்டுப்படுத்த முடியாமல் அவர்களை இடித்து சென்றது.

அதில் அவர்களது ஸ்லெட் பேலன்ஸ் இல்லாமல் குப்புற கவிழ்ந்தது.

திடீரென்று இப்படி நிகழ்ந்ததில் அதிர்ச்சியான அபிஷேக் ஜோஸ்வினியை கட்டி பிடித்தபடி உருண்டான்.

ஜோஸ்வினிக்கு என்ன நடந்தது என்று புரியவே இல்லை.

அவள் “அபி, அபி” என்று கதற அவனோ ஜோஸ்வினிக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று காயங்கள் அனைத்தையும் தனதாக்கி கொண்டான்.

அவன் ஜோஸ்வினியை தன் மேல் சாய்த்து இறுக்கி அணைத்திருக்க அவள் தான் மிகவும் பயந்து போனாள்.

“அபி என்னாச்சு டா? முழிச்சு பாருடா. அபி… அபி…” என்றவள் பதட்டத்தில் கத்தினாள்.

ஒரு சில நிமிடங்களில் தன்னை சுதாரித்தவன்

“நத்திங்டா. கூல்‌. எனக்கு ஒண்ணும் இல்ல பேபி”

“நிஜமா?” என்றவள் கையை தொட அவனோ “ஸ்ஸ்…” என தன்னை மீறி வலியில் முனகினான்.

“அபி என்னடா? எங்க வலிக்குது?” என்றவள் கேட்டு கொண்டிருக்க அவர்களை சுற்றி கூட்டம் சூழ்ந்தது.

பின்னர் அங்கிருந்த மருத்துவர் குழுவிற்கு அவனை கூட்டி சென்றவர்கள் அவனுக்கு தேவையான மருந்தை கொடுத்தார்கள்.

அவனது கையில் லேசான ஃபிராக்சர் ஆகியிருப்பதாக சொல்லவும் அவள் ரொம்பவும் பயந்து போனாள்.

“அபி… ஊருக்கே போயிடலாம்டா. வேணாம்”

“ஜோ… உங்க ரிலாக்ஸானுக்காக தான் வந்தோம். நீங்க என்ஜாய் பண்ணுங்க”

“நீ இப்டி கைல கட்டு போட்டுட்டு இருக்கறப்ப நான் எப்படிடா சந்தோஷமா இருப்பேன்?”

“ஜோ”

“இங்க இருந்து இப்போ என்னால கார் ஓட்ட முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோங்க. நம்ம சரியானதுக்கப்புறம் ஊர் சுத்திட்டு போலாம்”

அவன் கொஞ்சம் கொஞ்சமாக பேசி சம்மதிக்க வைக்க அவள் மனமே இல்லாமல் அவனுடன் தங்கினாள்.

வீட்டிற்கு போன் பேசுகிறேன் என்று சொன்னவளையும் தடுத்து விட்டான்.

“ஏன் அபி இப்டி பண்றே?”

“யூ டோன்ட் வொர்ரி ஜோ.‌ ஐ கேன் மேனேஜ்” என சொன்னவனுக்கு ஒவ்வொன்றும் கஷ்டமாக அமைந்தது.

இவர்கள் அன்று இரவு ஆர்டர் செய்த உணவு வர அதை சாப்பிட கூட அவனால் எடுக்க முடியவில்லை.

அவனுக்கு கை வலியில் உயிரே போனது.

ஜோஸ்வினியும் இவன் என்ன செய்கிறான் என கவனித்தாள். ஆனால் மறந்தும் அபிஷேக் அவளிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. அதனால் ஜோஸ்வினி கோபம் கொண்டாள்.

“ஏன் அபி நான் எதுக்கு இருக்கேன். நீ கேக்க மாட்டியா?”

“என்னைய பாத்துக்க எனக்கு தெரியும் ஜோ” என்றவன் உணவோடு போராட அவளுக்கு தான் பொறுமை பறந்தது.

“ஏன் அபி உனக்கு இவ்ளோ பிடிவாதம்?”

“என்ன நம்பாதவங்க கிட்ட நான் எந்த ஹெல்ப்பும் வாங்கிறதில்லங்க ஜோ” என்றவன் இறுகிய குரலில் சொன்னதும் அவள் அடிபட்ட பார்வை பார்த்தாள்.

“அ… அபி என்ன பேசற?”

“உண்மைய தான் சொல்றேன். உங்களுக்கு ஏன் என்ன நம்ப தோணலங்க ஜோ?”

“ஒரு ஃபிரண்டா கூடவா உங்களுக்கு என்ன தோணல?”

“சும்மா சும்மா எப்போ பாத்தாலும் உங்கள கம்பல் பண்ணோம்னு சொல்றீங்க?”

“ஷியாம் எப்டியாப்பட்ட ரோக் தெரியுமா?” என்றவன் அப்போதும் கூட கோபத்தை சமாளிக்க முடியாமல் மேஜை மேல் குத்தினான்.

“அ… அபி என்ன பண்ற?” என்றவள் அபிஷேக்கின் பக்கம் ஓடி வந்தாள்.

“ஜஸ்ட் லீவ் மீ ஜோ. ஐ வான்ட் அலோன்” என்று இறுகிய குரலில் கத்தினான்.

அவனுடைய கத்தலை கேட்டதும் பயந்து போன ஜோஸ்வினி தன்னை மீறி கண்ணீர் வழிய தனியே சென்றமர்ந்தாள்.

‘அவன் கேட்டதும் உண்மை தான?’

‘அவன் ஃபிரெண்ட்டா இருக்கறப்போ எவ்ளோ உனக்கு ஹெல்ப் பண்ணான்?’

‘இன்னைக்கு அவன் மட்டும் இல்லேனா நீ உயிரோட இருப்பியா?’

‘எவ்ளோ பெரிய பள்ளத்தாக்கு? கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா கூட உன் உயிர் உன்கிட்ட இருந்திருக்குமா?’

‘அவன் உயிர பணயம் வெச்சு உன்ன காப்பாத்திருக்கான். இப்போ கூட உனக்கு உன் பிரஸ்டீஜ் தான் முக்கியமா ஜோ?’

‘ஆரம்பத்துல இருந்து அவன் உனக்கு நல்லது தானே பண்ணிருக்கான் ஜோ’

‘எங்க நல்லது பண்ணிருக்கான்? ஷியாம் பத்தி ஒண்ணும் தெரியலையே’

‘ஏன்டி அவன் உயிர குடுத்து உன்ன காப்பாத்திருக்கான். உனக்கு ஷியாம் தான் முக்கியமா ஜோ?’‌ என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.

அவன் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றும் அவளுக்கு உதவி செய்ததை சிந்தித்து பார்த்தவள் அபிஷேக் என்ன திட்டினாலும் பொறுத்துக் கொள்ள முடிவு செய்தாள்.

எப்படியோ தன்னை தேற்றி கொண்டு அபிஷேக் இருந்த இடம் சென்ற போது அவன் அந்த உணவோடு போராடி தோற்று போய் உட்கார்ந்திருந்தான்.

அவளிடம் கெத்தாக சொல்லி விட்டான் தான். ஆனால் அவனால் ஒரு வாய் கூட உண்ண முடியவில்லை.

ஜோஸ்வினி அவனை நம்பாதது மனதின் மூலையில் அவனுக்கு உறுத்தி கொண்டே இருந்தது.

அவள் தன்னை நம்பாததை அபிஷேக்கால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதனால் தான் அவனையும் மீறி ஒவ்வொரு முறையும் ஜோஸ்வினியிடம் கோபம் கொண்டான்.

ஆனால் இப்போதோ ஏதேதோ நினைவுகள் வந்தது.

அந்த நினைவுகளுடன் தற்போதைய நிலையும் ஞாபகம் வர அவனையறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வந்தது.

வந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் எங்கோ வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்தவனை பார்த்த ஜோஸ்வினிக்கு தூக்கி வாரி போட்டது.

“அபி… அபி… என்னடா ஆச்சு? ரொம்ப வலிக்குதா?”

“ஏன்டா எதும் பேசாம இருக்க? பயமா இருக்கு” என்று ஜோஸ்வினி‌ பதறி போய் கேட்டாள்.

“எனக்கு கை ஒண்ணும் வலிக்கல. இங்க தான் வலிக்குது” என்றவன் இதயத்தை தொட்டு காட்டினான்.

“அபி”

“ஆமா. நீ பண்றது ஒவ்வொன்னும் எனக்கு இங்க தான் வலிக்குது. என் முன்னாடி நிக்காத. ஜஸ்ட் கெட் அவுட்” என்று அவன் கத்தினான்.

ஜோஸ்வினியோ அவனது கத்தலில் திடுக்கிட்டாலும் தன்னை சமாதானம் செய்து கொண்டு மெல்லமாக அவனை நெருங்கியவள் கட்டி அணைத்து கொண்டாள்.

முதலில் அவளது செய்கையை எதிர்பார்க்காதவன் அவளிடமிருந்து திமிறினான்.

ஆனால் ஜோஸ்வினியோ அவனை விடவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானவன் அவளுடைய இடுப்பை கட்டி கொண்டு கதறி விட்டான்.

ஜோஸ்வினி அவன் அழுவான் என்று எதிர்பாராதவள் மிகவும் பதறி விட்டாள்.

“அபி… ஒண்ணும் இல்லடா”

“ஏன்டா இப்டி அழற?”

“கூல்டா. நான் தான் உன் கூடவே இருக்கேன்ல” என்று ஏதேதோ சொல்லி தேற்றி கொண்டு இருந்தாள்.

அத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் உன் கூட இருக்கேன்ல என்று சொன்னதும் விலுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தான்.

“என் கூட நீ இருப்பில்ல பேபி?” என அவன் சிறு குழந்தை போல கேட்க அந்த குரலில் உருகியவள் ஆமென்று தலையாட்டினாள்.

பின்னர் அவனுக்கு சாப்பிட ஊட்டி விட்டவள் தனது அறைக்கு செல்ல திரும்பினாள்.

ஆனால் அவனோ மடி மீது படுத்து விட்டான்.

அவனது தலை கோதி தூங்க வைத்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

எப்போதும் தன் உணர்ச்சிகளை அவன் வெளிபடுத்தியதில்லை.

ஆனால் இன்றோ அவன் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

இருவரும் அவரவர் நிலையை ஏதோ ஒரு விதத்தில் புரிந்து கொண்டாலும் அவர்களுக்குள் உண்டான குழப்பங்கள் அவர்களை பேச விடவில்லை.

இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி கொள்ள எப்போது சந்தர்ப்பம் வருமோ?

        *****

அடுத்த நாள் காலையில் அபிஷேக் கண் விழித்த போது தான் ஜோஸ்வினியின் மடியில் படுத்ததை பார்த்து திகைத்தான்.

ஜோஸ்வினி கட்டிலில் சாய்ந்தபடி படுத்திருப்பதை பார்த்தவனுக்கு நேற்று நடந்ததெல்லாம் ஞாபகம் வந்தது.

‘என்னடா நேத்து சொதப்பி வெச்ச? சாப்பிட முடியாததுக்கு உன்னோட லவ்லா ஞாபகம் வரணுமா?’

‘அச்சோ… அவ கேட்டா என்ன சொல்லி சமாளிக்கறது?’ என அவன் யோசித்து கொண்டிருக்கும் போது அவள் விழிக்கவும் இவன் உடனே கண்களை மூடினான்.

ஏனோ அவனுக்கு ஜோஸ்வினியை எதிர் கொள்ளவும் எப்படியோ இருந்தது.

ஜோஸ்வினி எழுந்ததும் அவனை நன்றாக படுத்து வைத்தவள் அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.

“எல்லாம் சரியாகிடும் டா. ஆனா அபி நேத்து நீ அழுதத என்னால ஜீரணிக்க முடியல” என்றவள் அவனது சிகையை கோதி விட்டு சென்றாள்.

அவள் சென்ற பின்பு விழித்தவன் இப்போது என்ன செய்வதென்று திகைத்து நின்றான்.

நேற்று அவளுடைய அருகாமையில் அவனது காயங்கள் மாயமாய் மறைந்தது.

ஆனால்… அவன் குழப்பமாக யோசித்து கொண்டிருக்கும் போது ஜோஸ்வினி அவனை எழுப்பி விட்டாள்.

“அபி எந்திரி… ப்ரஷ் பண்ணு” என்றவள் எழுப்பி விட்டதும் அவள் சொன்னதை செய்தாலும் யோசனையாக பார்த்தான்.

அதே போல அவள் ஊட்டி விடுவதில் இருந்து சட்டை அணிவித்து விடும் வரை அனைத்தும் செய்ய அவன் தான் அவளது அருகாமையில் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள திணறினான்.

தன்னை மீறி அழுததும் அவனை ஏதோ செய்ய ஜோஸ்வினியிடம் பேசவே யோசித்தான்.

ஆனால் ஜோஸ்வினியோ அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

அவனை எப்பாடு பட்டாவது வெளியே கொண்டு வர பிரயத்தனப்பட்டாள்.

அவனும் அவளை புரிந்தது போல கொஞ்சம் கொஞ்சமாக தனது கூட்டுக்குள் இருந்து வெளியே வந்தான்.

ஏறக்குறைய ஐந்து நாட்கள் சென்ற நிலையில் அபிஷேக்கின் கை குணமானவுடன் அபிஷேக் ஜோஸ்வினியை வெளியே அழைத்து சென்றான்.

அப்போதும் அவள் சுலபமாக ஒத்து கொள்ளவில்லை.

“அபி… நம்ம இன்னொரு டைம் கூட பாத்துக்கலாம். உன்னோட ஹெல்த் முக்கியம்”

“பரவால்லங்க ஜோ. ஹியர் ஆஃப்டர் ஐ ஹேவ் லாட் ஆஃப் வொர்க் இன் ரெஸ்ட்டாரன்ட். சோ நம்ம இங்க என்ஜாய் பண்ணிட்டே போகலாம்” என்றவன் சொன்னதும் சரி என ஒத்து கொண்டாள்.

அவனுக்கு எப்போதும் ரெஸ்ட்டாரன்ட் வேலைகள் அதிகம் இருப்பதை அவளும் கவனித்து கொண்டிருந்தாள்.

அதனால் அவன் சொன்னதும் வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டாள்.

இந்த முறை அவளை ஷில்டன் நகருக்கு கூட்டி சென்றான்.

லிஃப்ட் போல ஒன்றில் சென்றார்கள்.

ஷில்டனின் ஐஸ் மலைகள் அவளை கொள்ளை கொள்ள தன்னை மறந்து குழந்தை போல குதூகலமானாள்.

அவளை அமைதியாக ரசித்தவன்  கேபிள் காரில் கூட்டி சென்றான். இரண்டு, மூன்று கேபிள் காரில் மாறி மாறி சென்றார்கள்.

அந்த உயரத்தில் அந்த கேபிள் காரில் ஒன்றில் இருந்து மற்றொன்றில் மாறுவதற்கு அதுவே திரில்லாக அனுபவமாக இருந்தது.

ஆனால் இது மிக உயரத்தில் இருந்ததால் கீழே பார்க்கும் போதே தலை சுற்றும் அளவுக்கு இருந்தது.

“ஐய்யோ… அபி… என்னடா இவ்வளோ ஹைட்?”

“ஆமாங்க. கீழே பாக்கறீங்களா?”

“வேணாம்டா. இங்க இருந்து பாக்கறப்பவே எப்டியோ இருக்கு”

“பட் அபி இந்த கேபிள் கார் செம அமேசிங். இப்போவே வந்தோம். இல்லேனா மிஸ் பண்ணிருப்பேன்” என்றவள் பயந்து கொண்டே ரசிக்க அவளும் அவளை புன்னகையுடன் ரசித்தான்.

அபிஷேக்கிற்கு ஏற்கனவே அடிபட்டதால் இந்த ஐஸ் ஸ்லேட் அவர்கள் பயன்படுத்தவில்லை.

எல்லாவற்றையும் பார்த்ததும் மேலே இருந்த ரெஸ்ட்டாரன்ட்டிற்கு சென்றார்கள்.

அது முன்னூற்று அறுபது டிகிரி ரெஸ்ட்டாரன்ட்.

அவர்கள் அங்கிருந்த சேரில் அமர்ந்ததும் அங்கிருந்த நாற்காலியோடு சேர்ந்து அவர்களும் சுத்த இவள் தான் பயந்து போனாள்.

“டேய்… என்னடா நடக்குது?” என்று பயந்து போய் அவன் கைகளை பற்றினாள்.

“கூல் ஜோ‌. இது த்ரீ சிக்ஸ்டீ டிகிரி ரெஸ்ட்டாரன்ட். சோ அப்டி தான் இருக்கும்” என்றவன் விளக்கம் சொன்னான்.

“வாவ்… அதான் இப்டி சுத்தறாமா? பட் இவ்ளோ ஹைட்ல இதுவும் டிப்ரண்ட் எக்ஸ்பீரியன்ஸ் பக்கி” என்றதும் வழக்கம் போல அவளுக்கு புன்னகையை தந்தான்.

அவர்கள் ஆர்டர் செய்த பர்கர் வரவும் அந்த பர்கரை பார்த்ததும் திகைத்தாள்.

“எரும… இதென்ன 007 சிம்பல் போட்ருக்கு?”

“இங்க ஜேம்ஸ்பான்ட் ஷீட்டிங் எடுத்தாங்க. சோ அந்த ஃபிலிம் ஞாபகமாக தான் இங்க இப்படி சேல்ஸ் பண்றாங்க” என்றவன் சொன்னதும்

“வாவ்… செமடா” என்று குதூகலித்தவள் அதனை சாப்பிட்டாள்.

அந்த பர்கரில் 007 உடன் துப்பாக்கியுடன் இருக்க அது ஜோஸ் வினிக்கு எதிர்பாராத சர்ப்ரைஸாக இருந்தது.

ஜோஸ்வினியையே பார்த்து கொண்டிருந்தவன்

“நெக்ஸ்ட் நான் எங்க கூப்டாலும் வருவியா செர்ரி?” என்றவன் கேட்க

“ஓ… வருவனே” என்று குதூகலித்த குரலில் சொன்னவளை வியப்பாய் பார்த்தான்.

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page