பாவம் ஓரிடம் பழி ஓரிடமோ, நான் செய்த பாவமெல்லாம் பழியாய் நீ சுமந்ததேனோ காதலே…!
உன்னில் சிறையாகிறேன் – 26
“நான் பெருசா மதிக்கிற தாத்தா கூப்பிட்டாலே வரலைன்னு சொல்லிட்டேன், நீங்க வந்து சொன்னா மட்டும் உங்க பின்னாடியே வந்திடுவேன்னு நினைக்கிறீங்களா மிஸ்டர் அக்னி” என்று,
சிறிதும் பயமே இல்லாமல் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து கேட்டாள் அருவி,
“நான் உன்னை கூட்டிட்டு போக தான் வந்தேன்னு யார் சொன்னா” என்று அவளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான் அக்னி,
“அப்புறம் எதுக்காக இங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று அருவி பாய்ச்சலோடு கேட்க,
“என்ன பண்றது என் விதி எல்லாம் இந்த தாத்தாவால வந்தது, இவ முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி கெஞ்ச விட்டு வேடிக்கை பார்க்குறார்” என்று தன் தாத்தாவை முறைத்தவன்,
“அது… வந்து… இந்த சொசைட்டிக்கு நீ இப்ப என் லீகல் வொய்ப்ன்னு அதனால என் வொய்ப் இப்படி ஒரு குடிசையில இருக்கிறது வெளியில தெரிஞ்சா என் இமேஜ் என்ன ஆகும் அதான், போனா போகுதுன்னு வந்தேன்” என்று தன் மிடுக்கு குறையாமல் சொன்னவனை,
பேசாமல் கொன்று விட்டால் என்ன எனும் ரீதியில் முறைத்தாள்,
என்ன பேச சொன்னா, இவன் என்ன பேசி சொதப்பிட்டு இருக்கான் என்று திருவாசகம் தலையில் கை வைத்துக் கொண்டார்,
“உங்க சொசைட்டி சோசியல் இமேஜ்காக எல்லாம் என்னால உங்ககூட வர முடியாது, எனக்கு என் சுயமரியாதை தான் முக்கியம், நீங்க போகலாம்” என்று அவனை விட விறைப்பாக சொன்னாள் அருவி,
“ஓஹோ அப்படியா, இட்ஸ் ஓகே, வெரி சிம்பிள் நீ வர வேண்டாம் என் தாத்தா குடுத்தாரே பணம் ஒரு கோடி ரூபாய் அதை குடு,
இல்லன்னா அந்த பணத்துக்கு ஈடா உன் குழந்தையை தூக்கிட்டு போயிருவேன்” என்று ஏதோ கடன் கொடுத்தவன் வசூலுக்கு வந்தது போல் சொல்லவும் அவனை முறைத்தாள் அருவி,
“என்ன முறைக்கிற, ஒரு கோடிக்கு எத்தனை சைபர்ன்னு தெரியுமா, அவ்ளோ பெரிய பணத்தையும் வாங்கிட்டு, வா ன்னு கூப்பிட நானே இறங்கி வரணும்னு டிமாண்ட் பண்றது,
போனா போகுதுன்னு இறங்கி வந்த வர மாட்டேன்னு வீராப்பா சொல்றது, இங்க பார், இன்னும் அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன் நீயா வந்துட்டா ஓகே,
இல்லன்னா குழந்தையை தூக்கிட்டு போயிட்டே இருப்பேன், அப்புறம் நீ எப்பவும் அவளை பாக்க முடியாதபடி பண்ணிருவேன்” என்று கூறி வி்ட்டு விறுவிறுவென வெளியேறினான் அக்னி,
அருவிக்கு மூச்சு முட்டியது, மெல்லத் திரும்பி யாழினியைப் பார்த்தாள். அவள் கவியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்,
தமிழினி பதற்றத்துடன் அருவியின் தோளைப் பற்றினாள்,
“அருவி, ஏன் இப்படிப் பிடிவாதம் பண்ற, அவர் தான் கூப்பிடறார்ல போடி” என்று ரகசியமாகக் கூறினாள்,
தாத்தா திருவாசகம் இதையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார், அக்னி ஏன் இப்படிப் பேசுகிறான் என்பது அவருக்குப் புரிந்தது,
அவனது இயல்பான குணம் அன்பாகச் சொல்லத் தெரியாமல் அதிகாரமாகச் சொல்ல வைக்கிறது,
பிறகென்ன அக்னியின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாமல் தமிழினியிடம் விடைபெற்று குழந்தையுடன் வெளியே வந்தாள் மகிழருவி,
அக்னி காரின் அருகில் சாய்ந்து நின்று கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவள் வருவதைக் கண்டதும் விறைப்பாக நின்றவன்,
“டைம் ஓவர், கரெக்டா அஞ்சாவது நிமிஷம் வாசலுக்கு வந்துட்ட, குட்” என்று ஒரு நக்கல் சிரிப்புடன் சொன்னான் அக்னி,
அருவி அவனை முறைத்தபடி,
“உங்க இமேஜைக் காப்பாத்த நான் வரல, என் குழந்தையை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க தான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்,
அக்னி முன்இருக்கையில் அமர்ந்து கொண்டான், திருவாசகம் அவருடைய காரில் ஏறிக் கொண்டார், கார்கள் அங்கிருந்து கிளம்பவும் தமிழினி கண்களில் நீரோடு அருவிக்கு கையசைத்து வழியனுப்பினாள்,
காரின் ஏசி குளிர்ச்சியிலும் அருவியின் மனம் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது, வீடு வந்து சேர்ந்ததும், அக்னி இறங்கி விறுவிறுவென உள்ளே சென்றான்,
அருவி குழந்தையைத் தூக்கிக்கொண்டு மெல்லத் தயக்கத்துடன் இறங்கினாள், திருவாசகம் அவளிடம் வந்தார்,
“என்னம்மா அப்படியே நின்னுட்ட உள்ள வாம்மா” என்று அழைத்துச் சென்றார், எதுவும் பேசாமல் அவருடன் உள்ளே வந்தாள் அருவி,
அருவி ஹாலில் நுழையும் போது அங்கு யாருமே இல்லை, கிச்சனின் வாயிலில் சமையல்காரர் ரவி நின்றிருந்தார், அருவியையும் யாழினிக் குட்டியையும் கண்டவர் முகத்தில் அத்தனை மலர்ச்சி,
“ரவி குழந்தைக்கும் அருவிக்கும் லன்ச் ரெடி பண்ணி குடு, அதுக்கு முன்னாடி குழந்தைக்கு குடிக்க பால் கொண்டு வா” என்றார் திருவாசகம், ரவியும் சந்தோஷமாக தலையசைத்து விட்டு வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தார்,
“ரவி பால் கொண்டு வர்ற வரைக்கும் இப்படி வந்து உட்காரும்மா” என்று
அருவியை ஷோபாவில் அமர வைத்து விட்டு, அத்தோடு நிற்காமல் படிகளில் ஏறி மேலே சென்றார் திருவாசகம், யாழினி அருவியின் மடியில் இருந்து இறங்கி அவளைப் பார்த்தாள்,
“என்னடா செல்லம், ஏன் ஒரு மாதிரியா இருக்க, தூக்கம் வருதா” என்று அருவி ஆதுரவாய்க் கேட்க, இல்லை என்று தலையசைத்த யாழினி,
“மம்மி நம்ம வீட்டுக்கு போலாமா மம்மி” என்று மழலை மொழியில் யாழினி கேட்க,
“ஏன், என் அம்குட்டிக்கு இங்க வந்தது பிடிக்கலையா?” என்று குழந்தையை கட்டிக் கொண்டு கேட்டாள் அருவி,
“ஆமா மம்மி, இங்க இருக்கவே பயமா இருக்கு, நம்ம வீட்டுக்கே போலாம் மம்மி, அங்க கவியக்கா, தமிழ் அத்தை எல்லாம் இருப்பாங்க, கவியக்கா கூட ஜாலியா விளையாடிட்டு இருக்கலாம்,
அத்தை நிறைய கதை சொல்லி தூங்க வைப்பாங்க, நாம இப்பவே போயிடலாம் மம்மி” என்று யாழினி சொல்ல,
அருவியின் மனம் பட்ட பாட்டை சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம், உயிராக உறவாக உலகமாக இருக்கும் குழந்தையை மனதளவில் காயப்படுத்துகிறோமோ என்று எண்ணி மனதிற்குள் கலங்கிப் போனாள் அருவி,
குழந்தையை இன்னமும் இறுக்கி கட்டிக் கொண்டு தலை கோதி உச்சி முகர்ந்து முத்தமிட்டு பிஞ்சு முகத்தைப் பார்த்த அருவி,
“நாம கொஞ்ச நாள் மட்டும் இங்க இருந்துட்டு அப்புறமா நம்ம வீட்டுக்கு போயிடலாம்மா, அதுவரைக்கும் கொஞ்சம் அஜ்சஸ் பண்ணிக்கோடா தங்கம்” என்று கெஞ்சலாக சொன்னவள் அவளது குரல் தழுதழுத்தது,
அப்போது படிகளில் யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்க, அருவி சட்டென நிமிர்ந்து பார்த்தாள், இறங்கி வந்தது வசந்தா, அக்னியின் அம்மா.
கிச்சனில் இருந்து ரவி பால் கிளாஸுடன் வெளியே வர,
ஹாலில் நின்ற சித்ராவைக் கண்டதும் அவர் அப்படியே உறைந்து நின்றார் ரவி, வசந்தாவின் முகம் அருவியையும், அவள் மடியில் இருந்த யாழினியையும் கண்டதும் விஷத்தைக் கக்கியது,
”ஓ போனா தொல்லை ஒழிஞ்சதுன்னு பார்த்தா, மறுபடியும் இழுத்துட்டு வந்துட்டாரோ அந்த மனுஷன்” என்று ஹாலில் நின்றபடியே கத்தினாள் வசந்தா,
அருவி எழுந்து நின்றாள், வசந்தாவின் வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தினாலும், யாழினியின் கையைப் பலமாகப் பற்றிக்கொண்டு அமைதியாக இருந்தாள்,
”ரவி, யாருக்குப் பால் கொண்டு போற? இந்த வீட்டுக்குச் சம்பந்தம் இல்லாதவங்களுக்குப் பணிவிடை செய்யனும்னு அவசியமில்ல, போய் உன் வேலை என்னவோ அதைப் பாரு,” என்று அதிகாரமாகக் கத்த,
ரவி தயக்கத்துடன் திருவாசகம் ஐயா இருக்கும் திசையைப் பார்த்தார், சத்தம் கேட்டு மேலே இருந்து இறங்கி வந்த திருவாசகம்,
“அருவி இந்த வீட்டு மருமகள், அவளுக்கும் அவ குழந்தைக்கும் செய்ய வேண்டியதை ரவி செய்வான், நீ தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு இருக்காம உன் ரூமுக்குப் போ வசந்தா” என்று கறாராகச் சொன்னார்,
”மருமகளா, இவளா, தெருவுல போற வர்றவளையெல்லாம் என் மருமகள்னு சொல்லாதீங்க, அக்னியை நீங்க என்ன சொல்லி மிரட்டி வச்சிருக்கீங்களோ தெரியல,
உங்க பேச்சுக்கு கட்டுப்பட்டு தான் என் பையன் இவளை உள்ள விட்டுருக்கான், ஏய் இங்க பாருடி அதுக்காக இந்த வீட்டையே அதிகாரம் பண்ணி அடக்கி ஆளலாம்னு நினைக்காதே,
நான் இந்த வீட்டுக்கு வந்ததே பையன் லைஃப்ல இருந்து உன்னை விரட்ட தான், வந்த வேலை முடியாம இங்க இருந்து போக மாட்டேன், இனிமே உன்னையும் உன் குழந்தையையும் படுத்துற பாட்டுல
துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட ஓட விரட்டுவேன்டி” என்று அருவியைப் பார்த்து விரல் நீட்டி எச்சரித்தாள் வசந்தா,
யாழினி பயத்தில் அருவியின் உடையை பிடித்துக்கொண்டு அழத் தொடங்கினாள்,
“மம்மி… எனக்குப் பயமா இருக்கு மம்மி…” என்று அழவும்,
அருவிக்கு இப்போது கோபம் தலைக்கேறியது,
“குழந்தைக்கு முன்னாடி இப்படித் தரக்குறைவா பேசாதீங்க, எனக்கும் இங்க இருக்கணும்னு எந்த ஆசையும் இல்லை, உங்க பையன் மிரட்டித் தான் என்னைக் கூட்டிட்டு வந்திருக்காரு,” என்று பதிலடி கொடுத்தாள்,
வசந்தா இன்னும் ஏதோ பேச வாயெடுத்தபோது, மாடியிலிருந்து அக்னியின் குரல் இடியென முழங்கியது,
”போதும் நிறுத்துங்க” என்றவாறு
அக்னி தன் கோட் சட்டையைக் கழற்றி கையில் ஏந்தியபடி இறங்கி வந்தான், அவனது கண்கள் சிவந்திருந்தது,
அக்னி மெல்ல படியிறங்கி வந்தான், அவனைக் கண்டதும் சட்டென வாயை மூடிக் கொண்டாள் வசந்தா,
“என்ன தாத்தா இது, வீடா இல்ல வேற ஏதாவதா, யார் யாரோ வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்காங்க, நீங்களும் பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க” என்று மறைமுகமாக வசந்தாவை சாடினான் அக்னி,
“அப்படி சொல்லுப்பா, என்னையே எப்படி எதிர்த்து பேசுறா பாரு, முதல்ல இவளை வீட்டை விட்டு தொறத்துப்பா நம்ம அந்தஸ்த்துக்கு ஏத்த பொண்ணா உனக்கு நான் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றாள் வசந்தா,
“தாத்தா, அவங்கிட்ட சொல்லுங்க, நான் யாரை கல்யாணம் பண்ணனும் எப்படி வாழனும்னு எனக்கு தெரியும், இனிமே என் வொய்ப்ப ஒரு வார்த்தை பேசினாலும் அப்புறம் இங்க நடக்கிறதே வேற” என்று சொன்ன,
அக்னி அருவியின் கையைப் பலமாகப் பற்றியபடி,
“போதும் இங்க நின்னு வேடிக்கை பார்த்தது. மேல வா,” என்று அதிகாரத்தோடு அவளை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான்,
வசந்தா முகம் கறுத்துப் போனது, மகனை எதிர்த்து பேச முடியாமல் வெடுக்கென திரும்பி தன்னறைக்கே சென்றாள், திருவாசகம் அக்னியின் வார்த்தையில் மனம் குளிர்ந்து போனார்,
”கை விடுங்க அக்னி வலிக்குது, நான் குழந்தையைத் தூக்கணும்” என்று அருவி திமிறினாள்,
”அதெல்லாம் அவளே நடந்து வருவா, நீ ஒழுங்கா வா” என்று மிரட்டலாகச் சொல்லிவிட்டு அவளைத் தன் அறைக்கு அழைத்து வந்தான்,
அறைக்குள் நுழைந்ததும் அவளை உள்ளே தள்ளிவிட்டு கதவைத் தாளிட்டான் அக்னி, அருவி பயமும் கோபமுமாக அவனைப் பார்த்தாள்,
“நீங்க மனுஷனே இல்ல ஒரு மிருகம், அதுவும் அதிகார வெறிபிடிச்ச மிருகம்” என்றாள்,
”மிருகத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன்னு தெரியுது இல்ல, அப்போ என்னை கோபப்படுத்தாம ஒழுங்கா இரு, எல்லா நேரமும் எனக்கு பொறுமை இருக்கும்னு சொல்ல முடியாது” என்றவனை கொல்லும் அளவு கோபத்தோடு முறைத்தாள் அருவி,
அவளின் கோபக்கணலை ஒரு பொருட்டாக கூட மதிக்கமல் தன் கோட் சட்டையைச் சரி செய்தபடி அக்னி வெளியேறினான்,
அவன் சென்ற பின்னும் அவனது அதிகாரத்தின் அதிர்வு அந்த அறையில் அப்படியே இருந்தது, அருவி தன் குழந்தையை அணைத்துக்கொண்டு மௌனமாக அழுதாள்,
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
