November 2025

என் துணை – 2

ஆர்யனைக் கண்டதும் தன்னைச் சுற்றி நிகழும் சூழலையே மறந்து, தன் நிகழ்கால நொடிகளையும் துறந்து, உயிர்ச்சிற்பம் போல் அசையாது, அவனை மட்டுமே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் திரவ்யா.  மொத்த உலகமும் ஓர் நொடி இருளாக மாறிப்போக, அந்த இருளில் தோன்றிய வெளிச்சமாக ஆர்யன் திரவ்யாவின் கற்பனையில் தெரிந்தான். அவர்கள் அருகில் நெருங்கி வந்த ஆர்யன் யாரிடமும் எதுவும் பேசாமல் அவளோடு நின்ற இரு குழந்தைகளையும் பார்த்தான். இரு வாண்டுகளும் அன்னையின் ஆடையைப் பற்றியபடி அவனைப் […]

என் துணை – 2 Read More »

என் துணை – 1

லண்டனில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் அனைவரும் ஏதோ ஒரு மகிழ்வுடனும், பரபரப்புடனும் பயணம் செய்து கொண்டிருந்தனர். திரவ்யா மட்டும், ஐந்து வயதான தன் இரட்டை குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டு பல நூறு சிந்தனைகளோடு வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருந்தாள். முகத்தில் சிறிதும் மகிழ்ச்சி இல்லாது விமானத்தின் மேற் கூரையை வெறித்தபடி இருந்தது அவள் கண்கள். சாதாரண போட்டோகிராபர் பெண்ணாக தன் தொழில் துறையில் கால் பதித்து பயணத்தை தொடங்கியதில் இருந்து, இன்று அதே கேமரா கம்பெனியின்

என் துணை – 1 Read More »

காதல் – 2

“நாழி ஆயிடுத்து பொண்ண அழச்சிட்டு வாங்கோ” என்ற சத்தம் விக்ரமின் காதில் தேனாய் ஒலிக்க, அவனை சிறிதும் ஏமாற்றாமல் ஆத்விகாவை அழைத்து கொண்டு வந்தனர் அவள் தோழிகள்.  அவனின் கண்ணிற்கு தங்கசிலை ஒன்று நடந்து வருவது போல் தோன்றியது ஆத்விகாவின் வருகை.  கண்ணிமைக்காமல் அவள் வருகையையே பார்த்து கொண்டு இருந்தவனிடம், “ஆத்துக்காரிய அப்புறமா பாருங்கோ! இப்போ இங்க கவனிங்கோ” என்று கூறினார் ஐயர்.  முத்து பற்கள் தெரிய ஐயரிடம் வழிந்து கொண்டிருந்த தன்னவனை அப்பட்டமாய் ரசித்தபடி நெருங்கி

காதல் – 2 Read More »

காதல் – 1

வீடு முழுவதும் நிறைந்திருந்த உறவினர்களின் சலசலப்பான உரையாடல் சத்தமும், தோழிகளின் ஏகத்துக்கும் மாறான கேலி பேச்சுகளுமே உணர்த்தியது அது ஒரு காதல் திருமணம் தானென்று.  அந்த வீட்டின் இளவரசியான ஆத்விகாவிற்கு விடிந்தால் திருமணம். இரவு முழுவதும் தோழிகளின் கிண்டலுக்கு ஆளாகி தூக்கத்தை தொலைத்து பற்பல கனவுகளுடனும், கற்பனைகளுடனும் திருமண மண்டபத்திற்கு எப்போது செல்வோம், மனம் நிறைந்த மணாளனை எப்போது கரம் பிடிப்போம் என்ற ஏக்கத்துடன் காத்திருந்தாள் ஆத்விகா. ஆத்விகா ஒரு நடமாடும் பார்பி டால் போல இருப்பவள்.

காதல் – 1 Read More »

நிழல் – 2

வேகமாக வேலையை முடிக்க நினைத்த ஷாலினி அரிசியை கிரைண்டரில் போட்டுவிட்டு கடகடவென பாத்திரங்களை கழுவினாள். அதை முடித்த கையோடு, அவள் அடுப்பு மேடையையும் சுத்தம் செய்து விட, அரிசி முக்கால் பாகம் அரைந்து விட்டது.  பூனைக்குட்டி போல, கிச்சனில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தாள். மாமியார் மாமனாரின் அறை பூட்டப்பட்டு கிடந்தது. சந்தேகத்தோடு ‘அத்தை!’ என ஒரு முறை அழைத்தாள். பதில் ஏதும் வரவில்லை…  அவர் உறங்கியது உறுதியானதும் நைசாக பருப்பை மிக்ஸியில் போட்டு

நிழல் – 2 Read More »

நிழல் – 1

அதிகாலை சூரியன், காலைப் பனியினை கிழித்துக்கொண்டு கிழக்கு வானில் உதித்திருந்த நேரம் அது. ஷாலினி அவசர அவசரமாய் தன் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டாள். சென்னையில் ஒரு புகழ்பெற்ற கணினி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நவநாகரீக யுவதி அவள்.  வர்ணங்கள் ததும்பும் பட்டாம்பூச்சி போல இலக்கின்றி பறந்து கொண்டிருந்தவளை காதல் எனும் ஒரே ஒரு செயல், ஒட்டுமொத்தமாய் புரட்டி போட்டுவிட்டது. அன்று முதல் அவள் வாழ்வில் எல்லாமே விருப்பத்திற்கு மாறாக சென்றுவிட்டது.  இந்த வேலை ஒன்று

நிழல் – 1 Read More »

You cannot copy content of this page