November 2025

ஆரெழில் – 1

ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது.

அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது.

ஆரெழில் – 1 Read More »

அத்தியாயம் 2

யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா.

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க,

அத்தியாயம் 1 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!