January 2026

3.அத்தியாயம்

காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள்.

அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா?

தீண்டாமலே சுடும் தணல் நீயே!

இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை….

3.அத்தியாயம் Read More »

தூவானம் -9

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -9 Read More »

காதல் இதுதானா ? – காதல் 23

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 23 Read More »

மொழி – 3

சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி ‘பவித்திர பாரிஜாதம்’.

சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் ‘யஷ்வந்த்’.

யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி.

பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள்.

ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது.

சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை.

இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மொழி – 3 Read More »

திரையிட்டு விலகாதே! -24

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -24 Read More »

அத்தியாயம்- 3

கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது.
​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.
​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?
​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது.

அத்தியாயம்- 3 Read More »

காதல் இல்லம் – அத்தியாயம் 5

‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் – ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்:

1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி
2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில்
துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து
ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு.
3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று
பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று
4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ்
விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம்
அல்லது வெறுப்பிற்கு காரணம் .

இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன்.

காதல் இல்லம் – அத்தியாயம் 5 Read More »

காதல் இல்லம் – அத்தியாயம் 4

‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் – ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்:

1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி
2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில்
துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து
ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு.
3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று
பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று
4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ்
விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம்
அல்லது வெறுப்பிற்கு காரணம் .

இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன்.

காதல் இல்லம் – அத்தியாயம் 4 Read More »

காதல் இல்லம் – அத்தியாயம் 3

‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் – ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்:

1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி
2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில்
துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து
ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு.
3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று
பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று
4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ்
விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம்
அல்லது வெறுப்பிற்கு காரணம் .

இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன்.

காதல் இல்லம் – அத்தியாயம் 3 Read More »

ரசிகை – 7

நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்!

ரசிகை – 7 Read More »

You cannot copy content of this page