அத்தியாயம் 1
தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா…









