January 2026

மௌனத்தின் முதல் வரி

புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்?

மௌனத்தின் முதல் வரி Read More »

பகை வளர்ந்தது

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

பகை வளர்ந்தது Read More »

அவள் முதல் அவள் வரை

அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது.

காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும்.

சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான்.

சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்.

சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார்.

சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு.

அவள் முதல் அவள் வரை Read More »

அத்தியாயம் 01

இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார்.

திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை.

அத்தியாயம் 01 Read More »

நினைவு -1

உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு.

உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியாக வாழக் காரணமாக அமைவதே இந்த உறவுதான். அப்படிப்பட்ட உறவில் அன்போடும் காதலோடும் தோன்றிய உறவு எவ்வளவு அழகானது.

இந்த உலகத்தில் மனிதன் பலவித உறவுகளுடனும் உணர்வுகளுடனும் பின்னிப் பிணைந்து இருக்கான். அப்படி உறவுகளோடு உணர்வுகளோடும் போராடும் இரண்டு அழகான இதயங்களைப் பத்திதான் இங்கு பார்க்கப் போறோம்.

இன்னும் தெளிவாகச் சொல்லணும்னா காதலின் வலியை, அதன் ஆழத்தை அனுபவிப்பதற்காகவே மறுபிறவி எடுக்கும் நாயகனையும், ஒட்டுமொத்த தூய காதலையும் ஒருங்கே பெறுவதற்குப் பிறந்த நாயகியையும் பற்றிய கதைதான் இது…

காதல் பலரிடம் பல பரிமாணங்களில் பல விதங்களில் வெளிப்படும். என்னுடைய பார்வையில்…

நினைவு -1 Read More »

இதயத்தின் மொழி

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி Read More »

வெந்து தணிந்த இதயம்-1

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-1 Read More »

திரையிட்டு விலகாதே! -2

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -2 Read More »

மௌன ராகம் 1

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 1 Read More »

Epi – 2 – முதல் தொடுதல்

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 2 – முதல் தொடுதல் Read More »

You cannot copy content of this page