January 2026

உன்னில் சிறையாகிறேன் – 2

இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம்,

காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி,

மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி,

உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன்,

உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன்,

ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்” இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது , 

உன்னில் சிறையாகிறேன் – 2 Read More »

நிழல் – 1

நிலவின் நிழல் நானடி
அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா.
ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி ‘தான் தான்’ என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது.
மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

நிழல் – 1 Read More »

கண்மணியே காதலில் கரைந்திட வா

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

கண்மணியே காதலில் கரைந்திட வா Read More »

நிஜமாகும் நினைவுகள்

நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்

நிஜமாகும் நினைவுகள் Read More »

உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு Read More »

இதுவும் கடந்து வாழவே – அத்தியாயம் 1

காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர்.

அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா?

இதுவும் கடந்து வாழவே – அத்தியாயம் 1 Read More »

அத்தியாயம் 1

உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர்.
பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான்.
காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது.
பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா?
இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ?
அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம்.

அத்தியாயம் 1 Read More »

காதல் இதுதானா ? – காதல் 12

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 12 Read More »

காதல் இதுதானா ? – காதல் 11

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 11 Read More »

கேட்காத சங்கீதம்

புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்?

கேட்காத சங்கீதம் Read More »

You cannot copy content of this page