February 2026

அத்தியாயம் 22

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 22 Read More »

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 15

சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது.

இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள்.

நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும்
தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம்.

அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான்.

நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள்.

அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா?

அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா?

அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும்
நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா?

தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை
நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது?

அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களே
இந்தக் கதையின் பயணம்

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 15 Read More »

இதயத்தின் மொழி _15

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி _15 Read More »

தூரிகை 8❤️

இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்…

பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்…

ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா…

அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!!

காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!!
அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!!

தூரிகை 8❤️ Read More »

கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 1

பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம்.

கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 1 Read More »

இதயத்தின் மொழி _14

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி _14 Read More »

அத்தியாயம் 7

பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள்.
இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை.

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 9

படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது… அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்… அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா?

ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்?

காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே?

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம்- 17

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம்- 17 Read More »

அத்தியாயம்- 16

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம்- 16 Read More »

You cannot copy content of this page