February 2026

அத்தியாயம் 11

திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி …. எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது…… தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்…… தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி….. ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை……. கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன…. தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது….. காத்திருந்து பார்ப்போம்.

அத்தியாயம் 11 Read More »

அலை கடல் பெண்ணவள்

என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், “அலை கடல் பெண்ணவள் ‌”

பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை.

முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே.

அலை கடல் பெண்ணவள் Read More »

அத்தியாயம் 8

விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி.

விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது.

தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம்.

இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை..

அத்தியாயம் 8 Read More »

இதயம் 1 2

சந்திர பிரகாஷ் – நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்…

இதயம் 1 2 Read More »

முரடன் 8

நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான்.

நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது.

பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக.

முரடன் 8 Read More »

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 14

சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது.

இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள்.

நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும்
தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம்.

அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான்.

நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள்.

அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா?

அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா?

அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும்
நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா?

தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை
நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது?

அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களே
இந்தக் கதையின் பயணம்

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 14 Read More »

உன்னில் சிறையாகிறேன் – 16

இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம்,

காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி,

மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி,

உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன்,

உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன்,

ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்” இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது , 

உன்னில் சிறையாகிறேன் – 16 Read More »

நிஜமாகும் நினைவுகள்

நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்

நிஜமாகும் நினைவுகள் Read More »

Epi -22 – மகளுக்கு மேல் தந்தை 16 அடி

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi -22 – மகளுக்கு மேல் தந்தை 16 அடி Read More »

2.மௌனத்தின் கடைசி எல்லை

தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை.

2.மௌனத்தின் கடைசி எல்லை Read More »

You cannot copy content of this page