February 2026

மொழி – 6

சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி ‘பவித்திர பாரிஜாதம்’.

சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் ‘யஷ்வந்த்’.

யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி.

பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள்.

ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது.

சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை.

இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மொழி – 6 Read More »

அத்தியாயம் 11

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 11 Read More »

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 5

சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது.

இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள்.

நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும்
தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம்.

அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான்.

நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள்.

அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா?

அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா?

அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும்
நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா?

தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை
நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது?

அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களே
இந்தக் கதையின் பயணம்

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 5 Read More »

அத்தியாயம் 6

தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா…

அத்தியாயம் 6 Read More »

காதல் இதுதானா ? – காதல் 29

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 29 Read More »

தூவானம் -15

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -15 Read More »

அத்தியாயம் 4

திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி …. எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது…… தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்…… தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி….. ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை……. கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன…. தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது….. காத்திருந்து பார்ப்போம்.

அத்தியாயம் 4 Read More »

திரையிட்டு விலகாதே! -33

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -33 Read More »

அத்தியாயம் -11

வேனலின் வெண்பூவே.

இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன்.
அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா?

அத்தியாயம் -11 Read More »

அத்தியாயம் -10

வேனலின் வெண்பூவே.

இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன்.
அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா?

அத்தியாயம் -10 Read More »

You cannot copy content of this page