January 2026

நலம் தானா ஊதாப் பூவே!! -5

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!! -5 Read More »

நினைவு -4

உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு.

உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியாக வாழக் காரணமாக அமைவதே இந்த உறவுதான். அப்படிப்பட்ட உறவில் அன்போடும் காதலோடும் தோன்றிய உறவு எவ்வளவு அழகானது.

இந்த உலகத்தில் மனிதன் பலவித உறவுகளுடனும் உணர்வுகளுடனும் பின்னிப் பிணைந்து இருக்கான். அப்படி உறவுகளோடு உணர்வுகளோடும் போராடும் இரண்டு அழகான இதயங்களைப் பத்திதான் இங்கு பார்க்கப் போறோம்.

இன்னும் தெளிவாகச் சொல்லணும்னா காதலின் வலியை, அதன் ஆழத்தை அனுபவிப்பதற்காகவே மறுபிறவி எடுக்கும் நாயகனையும், ஒட்டுமொத்த தூய காதலையும் ஒருங்கே பெறுவதற்குப் பிறந்த நாயகியையும் பற்றிய கதைதான் இது…

காதல் பலரிடம் பல பரிமாணங்களில் பல விதங்களில் வெளிப்படும். என்னுடைய பார்வையில்…

நினைவு -4 Read More »

திரையிட்டு விலகாதே! -32

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -32 Read More »

அத்தியாயம் 3

திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி …. எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது…… தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்…… தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி….. ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை……. கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன…. தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது….. காத்திருந்து பார்ப்போம்.

அத்தியாயம் 3 Read More »

காற்றினிலே வரும் கீதம் 11

ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர்.
குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள்.
ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது.
அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன்.
அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..?
கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..?
அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..?
அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..
இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது..

காற்றினிலே வரும் கீதம் 11 Read More »

தூவானம் -14

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -14 Read More »

இதழ் – 10

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இதழ் – 10 Read More »

இதழ் – 9

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இதழ் – 9 Read More »

வெந்து தணிந்த இதயம்-32

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-32 Read More »

என்னை என்ன நினைப்பான்

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

என்னை என்ன நினைப்பான் Read More »

You cannot copy content of this page