February 2026

அத்தியாயம் -12

வேனலின் வெண்பூவே.

இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன்.
அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா?

அத்தியாயம் -12 Read More »

தூரிகை 7❤️

இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்…

பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்…

ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா…

அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!!

காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!!
அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!!

தூரிகை 7❤️ Read More »

அத்தியாயம் 6

விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி.

விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது.

தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம்.

இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை..

அத்தியாயம் 6 Read More »

Epi – 20 – சந்திரிகா ❤️ வைஷூ

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 20 – சந்திரிகா ❤️ வைஷூ Read More »

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 12

சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது.

இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள்.

நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும்
தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம்.

அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான்.

நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள்.

அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா?

அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா?

அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும்
நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா?

தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை
நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது?

அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களே
இந்தக் கதையின் பயணம்

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 12 Read More »

நினைவு -6

உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு.

உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியாக வாழக் காரணமாக அமைவதே இந்த உறவுதான். அப்படிப்பட்ட உறவில் அன்போடும் காதலோடும் தோன்றிய உறவு எவ்வளவு அழகானது.

இந்த உலகத்தில் மனிதன் பலவித உறவுகளுடனும் உணர்வுகளுடனும் பின்னிப் பிணைந்து இருக்கான். அப்படி உறவுகளோடு உணர்வுகளோடும் போராடும் இரண்டு அழகான இதயங்களைப் பத்திதான் இங்கு பார்க்கப் போறோம்.

இன்னும் தெளிவாகச் சொல்லணும்னா காதலின் வலியை, அதன் ஆழத்தை அனுபவிப்பதற்காகவே மறுபிறவி எடுக்கும் நாயகனையும், ஒட்டுமொத்த தூய காதலையும் ஒருங்கே பெறுவதற்குப் பிறந்த நாயகியையும் பற்றிய கதைதான் இது…

காதல் பலரிடம் பல பரிமாணங்களில் பல விதங்களில் வெளிப்படும். என்னுடைய பார்வையில்…

நினைவு -6 Read More »

அத்தியாயம் – 4

மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம்.
பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு.

அத்தியாயம் – 4 Read More »

அத்தியாயம்-12

ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

அத்தியாயம்-12 Read More »

தோளில் சாயும் நேரம் 13

நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது.

தோளில் சாயும் நேரம் 13 Read More »

அத்தியாயம் – 13

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம் – 13 Read More »

You cannot copy content of this page