March 2026

ஆடி வரும் வண்ண மயிலே-11

அந்தி நேர மாலையிலே
தோகை விரித்தாடும்
அழகு மயிலே…

உன் தோகையில் தஞ்சம்
கொள்ள நான் வரவா
காவல்காரன் நான் உன்
காவலில் கைதாகவா…?

தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை…

அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு…

அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது.

சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை..

அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள்.

அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார்.

அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை.

அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி வரும் வண்ண மயிலே-11 Read More »

தூவானம் -31

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -31 Read More »

காதல் – 3

“என் அன்பே! எந்தன் ஆருயிரே!” காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை.

காதல் – 3 Read More »

Epi – 30 – கற்பிலாவது நேர்மை?

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 30 – கற்பிலாவது நேர்மை? Read More »

You cannot copy content of this page