January 2026

அத்தியாயம் 1

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 1 Read More »

நிழல் – 3

நிலவின் நிழல் நானடி
அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா.
ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி ‘தான் தான்’ என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது.
மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

நிழல் – 3 Read More »

வெந்து தணிந்த இதயம்-12

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-12 Read More »

திரையிட்டு விலகாதே! -16

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -16 Read More »

வெந்து தணிந்த இதயம்-11

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-11 Read More »

இதழ்கள் மௌனம் காக்க

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

இதழ்கள் மௌனம் காக்க Read More »

அத்தியாயம்-4

ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

அத்தியாயம்-4 Read More »

வலியை சூடிய காதலே – 17

நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி,

ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான்,

ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது,

இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா?

வலியை சூடிய காதலே – 17 Read More »

தூவானம் -5

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -5 Read More »

உன்னில் சிறையாகிறேன் – 12

இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம்,

காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி,

மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி,

உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன்,

உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன்,

ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்” இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது , 

உன்னில் சிறையாகிறேன் – 12 Read More »

You cannot copy content of this page