January 2026

வெந்து தணிந்த இதயம்-1

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-1 Read More »

மௌன ராகம் 1

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 1 Read More »

என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே

தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். ***

இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்..
****

குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்..

என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே Read More »

மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1

கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது.
​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.
​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?
​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது.

மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1 Read More »

அத்தியாயம் – 1

மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம்.
பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு.

அத்தியாயம் – 1 Read More »

கண்கள் பேசுதே – அத்தியாயம் -1

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே – அத்தியாயம் -1 Read More »

நிழல் – 1

நிலவின் நிழல் நானடி
அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா.
ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி ‘தான் தான்’ என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது.
மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

நிழல் – 1 Read More »

கண்மணியே காதலில் கரைந்திட வா

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

கண்மணியே காதலில் கரைந்திட வா Read More »

நிஜமாகும் நினைவுகள்

நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்

நிஜமாகும் நினைவுகள் Read More »

உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!