காதல் -22
யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக.
எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்…
இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி?
காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன்.

