April 2026

அத்தியாயம் 22

அத்தியாயம் 22   வசுந்தராவின் கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டிருந்தது. வித்யாதரன், பொன்னப்பன், அமுதா என மூவரும் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள். ஆனாலும் அவளின் மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. ‌தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தன் மூத்த சகோதரனைப் பற்றிய தகவலைத் தேடி தோற்றுத்தான் போனாள் பெண்ணவள். கைலாசநாதன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு எங்குச் சென்றானோ யாருக்கும் அது தெரியவில்லை. சிவகாமியின் பிறந்த வீட்டிற்குக்கூட அவர்கள் செல்லவில்லை. அவளின் […]

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

அத்தியாயம் 21   “அண்ணா, நடந்தது எல்லாம் இப்பத்தான் எனக்குத் தெரிஞ்சது. என்னை மன்னிச்சிடுங்க! என்னாலதான் உங்களுக்கு இந்தக் கஷ்டம். அண்ணி, நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க!” என்ற வசுந்தராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “நீ இப்படி செய்வேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை வசு. உன் மேல எத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன், ஆனா எனக்குக்கூட சொல்லாம இப்படி செஞ்சிட்டியே?” என்றவனுக்கு தங்கையின் மீது வருத்தம்தான் மேலோங்கியது. “அண்ணா, நான் உங்ககிட்ட சொல்லகூடாதுன்னு நினைக்கலை. ஆனா நீயும் ஒத்துக்கலைன்னா என்னால

அத்தியாயம் 21 Read More »

அத்தியாயம் 20

அத்தியாயம் 20      சிவகாமியும் கைலாசமும் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இப்பொழுது சிவகாமி கர்ப்பமாய் இருக்கிறாள். இந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசு அவளின் வயிற்றில் கருவாய் உருவாகி உள்ளது. இந்த நிலையில் அவர்களை வெளியே அனுப்பியது பெண்ணவளுக்கும் சரி ஒரு ஆணாய் ஆடவனுக்கும் மனது மிகவும் வலித்தது.ராஜவேலுவுடன் சேர்த்து கற்பகநாயகியும் எதுவும் சொல்லவில்லை எனும்போது அவரும் ஒரு தாய் தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை கணவன்

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 31

அங்கு பிரகாஷும் இல்லை. அவனும் இரவே சென்று இருந்தான். விக்னேஷ் கௌரி இடம் வந்து  கௌரி சொன்னா கேளு. எழுந்து போய் முகம் அலம்பி கொண்டு வா. நான் உனக்கு கேன்டீனில்  இருந்து காபி வாங்கி கொண்டு வருகிறேன் என்று சொல்ல, கௌரி எனக்கு எதுவுமே வேண்டாம் அண்ணா. எனக்கு வர்ஷினி திரும்பி வந்தா போதும் என்றிட, விக்னேஷ் வர்ஷினி கண்டிப்பா வருவா கௌரி. அவ வந்தா அவளை பார்க்கவாவது நீ தெம்பா இருக்க வேணாமா? என்றிட,

அத்தியாயம் 31 Read More »

அத்தியாயம் 30

 அன்று கவிதா கௌரிக்கு போன் பண்ணியிருந்தாள். கௌரி, வர்ஷினிக்கு ஐந்து மாதம் ஆகப்போகுது. மதுமதிக்கு பண்ணினது போல இவளுக்கும் ஐந்து மாதத்திலேயே வளைகாப்பு பண்ணிடலாமா? என்று கேட்க, கௌரி, அம்மா நான் இப்போ லீவு போட்டுட்டு ஊருக்கு வந்தா மறுபடியும் வர்ஷினிக்கு குழந்தை பிறக்கும்போது லீவு போட்டுட்டு என்னால வர முடியாதும்மா. அதனாலே ஒன்பது மாதத்திலேயே வளைகாப்பு வச்சிக்கலாம் அப்பத்தான் என்னாலே வர்ஷினிக்கு டெலிவரி சமயத்தில் அவ கூடவே இருக்க முடியும் என்றிட, கவிதா ஒன்பதாவது மாசம்

அத்தியாயம் 30 Read More »

தூரிகை 36 (நிறைவு பகுதி )❤️

அவன் அவளுக்காக சாந்தி முகூர்த்த அறையில் காத்திருக்க அவள் அன்னம் போல் மெதுவாக நடந்து வந்தாள். அதிலேயே அவனுக்கு இதய துடிப்பு தாறு மாறாக எகிறி குதித்தது. இவளின் நிலைமையும் அதே தான்,, இருவருமே இதற்கு முன்பு இந்த நிகழ்வை அனுபவித்து இருந்தாலும் அது இருவருக்குமே ஆனந்தத்தை கொடுக்கவில்லை ஒருவனுக்கு கசப்பான மனவருத்தத்தையும் அவளுக்கு கசப்பான உடல் காயங்களையும் தான் கொடுத்தது. அது எல்லாம் நினைத்துக் கொண்டே வந்தவள் கைகள் நடுங்க அவனுக்கு பாலை ஊற்றி கொடுத்தாள்.

தூரிகை 36 (நிறைவு பகுதி )❤️ Read More »

தூரிகை 35❤️

அமுதனுக்கு காயங்கள் மெல்ல ஆறியது. ஆனால், என்ன இங்கு வந்ததிலிருந்து பழையது யோசிச்சு மன காயங்கள் அதிகமாகின…  இவளுக்கும் நீலன் சொன்னதிலிருந்து யோசித்துப் பார்த்தாள். அமுதனை தனக்கு பிடிக்குமா?  என்று கேட்டுக் கொண்டாள். ஆனால், அவளுக்கு தெரியவில்லை அவள் அவளாகவே இருந்தது அவனுடன் நேரத்தில் மட்டும்தான், நீலன் சொன்னானே ஒரு முறை வாழ்ந்து தான் பாருங்கள் என்று வாக்கியம் மட்டும் அவள் மனதில்  ஓடிக் கொண்டிருக்க…  ‘ஒரு முறை வாழ்ந்து பார்க்கலாமா? ‘என்று யோசித்தாள். அப்போது நீலன்

தூரிகை 35❤️ Read More »

இறுதி பதிவு

சென்னையின் அந்தப் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நறுமணம் வீசும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள், கண்ணைப் பறிக்கும் சரவிளக்குகள் என ஆடம்பரம் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தது. பாலாஜி – தனுஜா திருமணத்திற்காகச் சூர்யா செய்திருந்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் ராயல் ரகம். திருமண ஏற்பாடுகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. மேடைக்கு அருகே பாலாஜியும் தனுஜாவும் நின்றிருந்தனர். பாலாஜியின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், அவனது கண்கள் மட்டும் வாசலையே வெறித்துக் கொண்டிருந்தன. உறவினர்கள், நண்பர்கள் என ஹோட்டலே

இறுதி பதிவு Read More »

ரசிகை – 34

டெல்லியின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றடைந்தான் சூர்யா. செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆகாஷ் மற்றும் சுஜித் பற்றிய செய்திகள் வெளியானதில் இருந்து, நிறுவனத்தின் பங்குகள் அதலபாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருந்தன. உள்ளே நுழைந்தவனை இரண்டு பேரும் மரியாதையாக வரவேற்று மீட்டிங் அறைக்கு கூட்டி சென்றனர். அங்கிருந்த போர்டு மெம்பர்கள் அனைவரும் மரியாதையோடு எழுந்து நின்றனர். அவர்களின் முகங்களில் ஆகாஷ் மீதான கடும் கோபமும், நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அப்பட்டமாகத் தெரிந்தது.

ரசிகை – 34 Read More »

ரசிகை – 33

மருத்துவமனை அறைக்குள் நுழையும்போது பூர்ணிமாவுக்கு ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் சூர்யா அவளை விடவில்லை. அவளது கையைப் பிடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். படுக்கையில் அப்சரா ஒரு புழுவைப் போலச் சுருண்டு கிடந்தாள். ஒரு காலத்தில் பேரழகியாக வலம் வந்தவள், இன்று தன் முகத்தைக் கண்ணாடியில் கூடப் பார்க்க முடியாமல் போர்வையால் போர்த்திக் கொண்டு கிடந்தாள். “அப்சரா… இப்போ எப்படி இருக்க?” எனும் சூர்யாவின் குரல் கேட்டு மெல்லத் தலையைத் தூக்கினாள். அவளது வீங்கிய கண்களைப் பார்த்த

ரசிகை – 33 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!