January 2026

இதயத்தின் மொழி

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி Read More »

கண்கள் பேசுதே – அத்தியாயம் -2

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே – அத்தியாயம் -2 Read More »

அத்தியாயம் 1

தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா…

அத்தியாயம் 1 Read More »

காற்றினிலே வரும் கீதம் 1

ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர்.
குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள்.
ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது.
அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன்.
அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..?
கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..?
அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..?
அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..
இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது..

காற்றினிலே வரும் கீதம் 1 Read More »

தூவானம் -1

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -1 Read More »

மௌன ராகம் 6

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 6 Read More »

அத்தியாயம் 2

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம்- 3

அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது.

காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும்.

சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான்.

சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்.

சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார்.

சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு.

அத்தியாயம்- 3 Read More »

முரடன் 1

நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான்.

நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது.

பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக.

முரடன் 1 Read More »

அத்தியாயம் – 2

மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம்.
பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு.

அத்தியாயம் – 2 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!