January 2026

முரடன் 6

நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான்.

நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது.

பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக.

முரடன் 6 Read More »

வெந்து தணிந்த இதயம்-22

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-22 Read More »

தூவானம் -10

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -10 Read More »

மாண்புமிகு காதலன்

ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன்

மாண்புமிகு காதலன் Read More »

இதயத்தின் மொழி -8

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி -8 Read More »

அத்தியாயம் 7

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 7 Read More »

இதயம் 9

சந்திர பிரகாஷ் – நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்…

இதயம் 9 Read More »

3.அத்தியாயம்

காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள்.

அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா?

தீண்டாமலே சுடும் தணல் நீயே!

இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை….

3.அத்தியாயம் Read More »

தூவானம் -9

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -9 Read More »

அத்தியாயம்- 3

கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது.
​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.
​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?
​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது.

அத்தியாயம்- 3 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!