March 2026

அத்தியாயம்- 24

தீபனின் கோப பார்வை தாங்காமல், அங்கிருந்து நகர்ந்து சென்றாள் ஜோதி…!! இருவரும், காரிலேறி சென்றுவிட… மனம் வெறுமையாக இருப்பது போல் உணர்ந்தான் அவன் !! இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி தான் மனம் வெறுமையாக இருப்பது போலவும்.. தன்னந்தனியே  கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவும் உணர்ந்தான்…. காரணமின்றி பொங்கி எழும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழியறியாது தவித்து போனான்… இதுபோன்ற உணர்வுக்கு ஆளாகாதவன் தீபன், இது ஏதோ புது வித மாற்றத்தை அவனுக்குள் கொண்டு வந்தது.. மணி மணி […]

அத்தியாயம்- 24 Read More »

அத்தியாயம்- 23

பார்த்து பார்த்து கண்களே பூத்து போய்விடும் போல.. அத்தனை நேரம் இருவரும்.. ஒருவரை ஒருவர் விழியசைக்காது பார்த்துக்கொண்டிருந்தனர் பார்த்தூவும் விஜியும் !! சுத்தியிருக்குற அத்தனையும் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருக்க… அவனுக்கு அவளும், அவளுக்கு அவன் மட்டுமே ஃபோகஸில் தெரிந்தனர் !! இடம் பொருள் ஏவல் அறியாமல் இணைந்த இரு விழிகளும், காந்தம் போல் ஒன்றை ஒன்று ஈர்த்தது !! அவனின் கூர்மையான கண்கள், அவளை அளவிட தொடங்கியது…..!! கடைந்தெடுத்த தந்த சிலை போல் ஜொலிக்கும் அவளின்

அத்தியாயம்- 23 Read More »

அத்தியாயம் 22

வள்ளி சமயலறையில் வடகம் பொரித்து ரசம் தாளித்து கொண்டிருந்தார்… பார்த்தூ தொலைக்காட்சியில், பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான்… “மீனம்மா… அதிகாலையிலும், அந்திமாலையிலும்.. உந்தன் ஞாபகமே !!!” “நமக்கு, காலையிலயும் சாயங்காலமும் டீ காபி நெனப்பு தான் வருது”, என்றான் கையில் இருந்த மிக்சரை கொறித்து கொண்டே !! “தண்ட சோறு  தண்ட சோறு .. எப்படி திங்கிது பாரு.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?? எந்த கவலையும் இல்லாம ஒரு மனுஷன் எப்படி வாழ்றான் ??.. “, என்று கடிந்து கொண்டார்..

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம்- 21

FM இல் ஒலித்த பாடலை கேக்கவும்.. இருந்த கோபம் மேலும் தலைக்கேறியது அவனுக்கு !! தெரு தெருவாக சுற்றியும், அவன் தேடி வந்த முகவரி கிடைக்காமல் தவித்தான் தீபன்…. அப்போது, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் வாசலில் ஒரு பெண் நுழைந்தாள்.. அவளின் பின்புற தோற்றம் அவன் மனைவியை போல் காட்சியளிக்க.. உடனே காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் !! இறங்கி அந்த பெண்ணை பின்தொடர தொடங்கினான், அருகில் சென்று பார்க்க… அவளோ, “யாரு”, என்று கேட்டாள்..

அத்தியாயம்- 21 Read More »

அத்தியாயம்- 20

இன்ஜின் வண்டி புகையை கக்குவது போல்.. காதிலும் மூக்கிலும் புகை வர… உஷ்ணம் தலைக்கேறி கடுங்கோபத்துடன் வந்தாள் நிமி !! என்ன தின்னக்கம் இருந்தால், என் மாமா கிட்ட இப்படி நெருங்கி பழகுவா??.. இது சரி பட்டு வராது இப்பவே அப்பா கிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..என்று மனதிற்குள் நினைத்தவள்.. நேரே தன் தந்தையை தேடி ஓடினாள்.. “அப்பா.. அப்பா..”, வீடே அதிரும்படி கத்தினாள் நிமி!! “ஏ   என்னடி.. எதுக்கு இப்போ காட்டு கத்தலாய்

அத்தியாயம்- 20 Read More »

அத்தியாயம்- 19

கொலுசு சத்தம் கூட கேக்காத அளவிற்கு, தரைக்கும் வலிக்காமல் காலுக்கும் வலிக்காமல் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள் விஜி !! பார்த்தூ, எப்படா இவள் விழுவாள்.. கையில் ஏந்தலாம் என்று காத்து கிடக்க… கீழே சிதறி இருக்கும் எண்ணெயையும் அவளையும் மாறி மாறி பார்க்க… விஜி,  அவன் குறி வைத்த இடத்தை நோக்கி நெருங்கி வர வர வர……………………. கண்களை மூடி கொண்டு , இரு கைகளையும் விரித்தபடி  புன்னகையுடன் நின்றான் பார்த்தூ !! அதை கண்ட

அத்தியாயம்- 19 Read More »

அத்தியாயம்- 18

இரவு உணவை உண்டுவிட்டு, சுடரும் ஜோதியும் அறைக்கு வந்தனர்… “அக்கா.. சூர்யா மாமா கிட்ட பேசினியா ??” திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தாள்… “என்னக்கா, பதிலே காணோம் “ “அதான் தெரியுது இல்ல.. அப்புறம் என்னடி திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க..” “ஏன் அக்கா இப்படி டென்ஷன் ஆகுற??.. இப்ப நான் என்ன கேட்டேன்?” “பேசாம தூங்குற வழிய பாரு.. சும்மா கேள்வி கேட்டுட்டு.. படுடி” “ம்க்கும்.. ரொம்ப தான் அலுத்துக்குற.. போக்கா..”, என்றுவிட்டு போர்வையை

அத்தியாயம்- 18 Read More »

அத்தியாயம்- 17

“விழியில் விழுந்து… இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே…!!” என்று இருவரும் விழி வழியே சங்கமிக்கும் நேரம் சாத்திய கதவை சைத்தான் போல திறந்து கொண்டு வந்தாள் நிமி !! அரவம் கேட்டு விலகினர் இருவரும்.. அவர்களின் நெருக்கத்தை கண்டு நெருப்பில் விழுந்த புழு போல துடித்து போனாள் நிமி… ஜோதியை முறைத்து கொண்டே.. “நீ இங்க என்ன பண்ற??”, என கேட்டாள்.. “சார் தான் வர சொன்னார்” உடனே , அவன் பக்கம் திரும்பி கோப

அத்தியாயம்- 17 Read More »

அத்தியாயம்- 16

வசந்தா கஃபே.. “என்ன ஜோதி…எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க??”, என்று கேட்டான் சூர்யா… “நீங்கதான் பேசணும்னு கூட்டிட்டு வந்தீங்க.. நீங்கதானே பேச ஆரம்பிக்கனும்.. ??” “சரிதான்…” “ஆமா என் ஃபோன் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது??.. நான் வேலை செய்யுற ஆபீஸ் எப்படி தெரியும்??”, என்று அவள் கேள்விகளை அடுக்க தொடங்க… அவனோ, கேக்கில் மொய்க்கும் ஈ போல… அவள் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் !! அவனிடம் இருந்து பதில் வராது போகவே…

அத்தியாயம்- 16 Read More »

அத்தியாயம்- 15

வீடெல்லாம் சுத்தம் செய்து.. தரையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க…நாற்காலிகள் நான்கும்,அதில் அமர போகும் மனிதர்களுக்காக காத்திருந்தது !! வாசல் வரை மணந்தது மஞ்சுளா வைக்கும் மாம்பழ கேசரியும், மிளகு போட்ட முறுக்கும்.. வாசனை பிடித்து கொண்டே அடுப்பின் அருகில் நின்று கொண்டு உதவி செய்கிறேன் பேர்வழி என்று உற்று உற்று பார்த்து கொண்டிருந்தாள் சுடர், எப்போது கேசரியும், முறுக்கும் கைக்கு வருமென்று !! வாசலுக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டே இருந்தார் சிவகிரி, “எப்போது மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள்”, என்று

அத்தியாயம்- 15 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!