March 2026

அத்தியாயம்- 34

“அவகிட்ட பேசினா உங்களுக்கென்ன வந்துச்சு ?? “, என்று பார்த்தூ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் விஜி…!! இதை என்னவென்று சொல்லுவாள் அவளும் பாவம்.. அவளுக்கே அவள் பார்த்தூவை விரும்புவது இன்னும் புரிய காணோம்.. இந்த லட்சணத்தில் அவனிடம் தன் மனதை எப்படி வெளிப்படுத்துவாள் இந்த பேதை !! “எ…..என்… எனக்கென்ன வந்துச்சு.. எனக்கு ஒரு டென்ஷனும் இல்லயே.. நீ யார் கூட பேசினா எனக்கென்ன வந்துச்சு.. ஐ ஆம் ஆல் ரைட் “,என்று […]

அத்தியாயம்- 34 Read More »

அத்தியாயம்- 33

அத்தியாயம் 33 நிமி, அவளை தள்ளி விட்ட வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தாள் ஜோதி !! உடனே அவளுக்கு கை குடுத்து எழுப்பி விட்டான் தீபன்… “என்ன அடி எதுவும் பட்டுச்சா??”, என்று கேட்டான் வெகு அக்கறையாக…!! (ஜோதி M V: என்ன ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவுற கதையால்ல இருக்கு.. நியாயமா பார்த்தா நான் விழுந்ததற்கு இவர் சந்தோஷம் தானே பட்டிருக்கணும்??) “இல்ல”, என்றாள் ஒற்றை வார்த்தையில். “நானே கலங்கி போய் வந்து நிக்குறேன்.. இங்க,

அத்தியாயம்- 33 Read More »

அத்தியாயம்- 32

கீழே இறங்கி வந்து இருவரும் காலை உணவை உண்டு விட்டு கைகழுவ செல்ல…. விசாலம் அடுக்களையில் நின்றுகொண்டே தன் மருமகளை கை ஆட்டி ஜாடையில் அழைத்தார்…. புரிந்து கொண்டு அவளும் கை கழுவி விட்டு அடுக்களைக்கு செல்ல…  “என்னங்க மா?? சொல்லுங்க..” “அம்மாடி ஜோதி… சாப்பிட்டியா ?? நம்ம வீட்டு சமையல் உனக்கு பிடிச்சிருக்கா?? “, என்று கேட்டார் வாஞ்சையாக !! “ரொம்ப நல்லா இருக்கு மா…”, என்றாள் மனதார.. “சந்தோஷம்மா, அப்புறம் இன்னொன்னு சொல்லணும்…. என்

அத்தியாயம்- 32 Read More »

அத்தியாயம்- 31

கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் பதட்டமானார்கள் !! ஓரமாக நிறுத்தி வைக்க பட்டிருந்த பாயையும் தலையணையையும்  வேகமாக ஓடி சென்று எடுத்து வந்து மெத்தையில் அடுக்கி வைத்தாள் ஜோதி…. விரிப்புகளை சரிசெய்துவிட்டு, பாயை தூக்கி கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டாள்…… பின் வேகமாக கதவை நோக்கி அவள் முன்னேற….  குறைக்கே வந்து அவளை தடுத்தது தீபனின் கரங்கள் !! என்ன என்பது போல் அவனை அவள் முறைக்க….. “பெரிய அறிவாளின்னு நினைப்பா உனக்கு??”, என்று கேட்டான் திமிராக..

அத்தியாயம்- 31 Read More »

அத்தியாயம்- 30

அவனின் கரங்கள் இரும்பென மாறி அவளை அணைத்து கொள்ள…….. இருவரும் ஒருவரை ஒருவர் ஆற தழுவினர்……..💘💘💘💘💘💘 காற்று கூட புக முடியாத அளவிற்கு இறுக்கி அணைத்து கொண்டார்கள்…!!💘💘 மெல்ல நிமிர்ந்து அவளது வதனத்தை  கையில் ஏந்தி அவளின் கன்னங்களின் மென்மையை அளவிட்டு கொண்டே வருடியது அவனின் கரங்கள்…. பூக்களால் செய்த மேனியோ ?? இத்தனை மென்மையாக இருக்கிறதே..என்று வியந்தவன், வழவழப்பான அவளது கன்னத்தையும், வழுக்கி சென்ற அவளது இடையையும் வெகு நேரம்…. நேரம் போவதே தெரியாமல் வருடி

அத்தியாயம்- 30 Read More »

அத்தியாயம்- 29

சாந்தி முகூர்த்தம் என்றதும் வெளிறி போய்விட்டது இருவரின் முகமும்… இப்பவரைக்கும் நடந்தது கனவா இல்ல நனவா?? என்றே புரியாமல் குழப்பத்தில் சற்று ஆனந்த குழப்பத்தில் இருக்கிறாள் ஜோதி….!! இதில் சாந்தி பூந்தி என்றால்… அவளும் தான் என்ன செய்வாள்?? அதான் அவளுக்கு பீதி ஆகிவிட்டது போலும்…!! “ஏதோ இவ விஷயத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது தான்.. ஆனால் அதுக்காக இந்த காதல் கத்திரிக்காய், கல்யாணம் கர்ணகிழங்கு இதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.. அப்படியிருக்க இவ கழுத்துல தாலி

அத்தியாயம்- 29 Read More »

அத்தியாயம்- 28

கழுத்தில் தொங்கும் தாலியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜோதி….!! நிஜமாவே, நமக்கு கல்யாணம் ஆயிடுச்சா??.. அதுவும் இந்த பாறாங்கல் கூடயா????.. இதெல்லாம் நிஜமா இல்ல கனவா?????…. எப்படி இதை தெரிஞ்சிக்கிறது???… படத்தில் வர மாதிரி கிள்ளி பார்த்து தெரிஞ்சுக்கலாமா ??…  சற்று யோசித்து விட்டு, “ஆமா அதான் சரி.. பேசாம கிள்ளி பார்த்திடலாம்.. “, என முடிவெடுத்த ஜோதி, கிள்ளி பார்க்க தயாரானாள்……!! “ம்ம்மா…………..”, என்று அலறினான் தீபன்.. “இடியட்.. இடியட்… எதுக்கு இப்போ

அத்தியாயம்- 28 Read More »

அத்தியாயம்- 27

கல்யாணம் நிச்சயம் நடக்கும் என்று ஒலித்த அந்த தீர்க்கமான குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பி பார்க்க…. அங்கே, விசாலம் தன் விசாலமான கண்களால் ஜோதியை கனிவுடன் பார்த்து கொண்டிருந்தார்…. தீபன் திடுக்கிட்டு போய் விழித்தான், தன் தாயின் இந்த பேச்சால்….. ஜோதிக்கு குழப்பம் மேலோங்க, புருவம் முடிச்சிட்ட முகத்துடன் நின்றிருந்தாள்.. அனைவரின் முகமும் freeze ஆனது போல் இருக்க… தீபன் தான் முன் வந்து தன் அன்னையிடம்.. “என்னம்மா பேசுற?? நான் எதுக்கு இவளை

அத்தியாயம்- 27 Read More »

அத்தியாயம்- 26

நடக்கவிருந்த நிச்சயத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நிமி பேச தொடங்க, அனைவரும் திகைத்து போய் நின்றனர்!! “இது என்னடா இது, சீரியல்ல வர மாதிரி இந்த பொண்ணு இந்நேரம் பார்த்து நிறுத்துங்கன்னு  வந்து நிக்கிது.. ஒருவேளை அந்த பொண்ணு மேல ஏதும் தப்பு இருக்குமோ “, என்று அங்கிருந்த ஜனம்,ஆளாளுக்கு தங்களுக்குள்ளேயே பேசி கொண்டிருக்க.. “இவளை கல்யாணம் பண்ணினால் வர போற மாப்பிள்ளைக்கு தான் கஷ்டம்.. சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம்”, என்றாள் நிமி புதிராக !!

அத்தியாயம்- 26 Read More »

அத்தியாயம்- 25

“என்னங்கடா ரெண்டு பேரும் இப்படி திரு திருனு முழிக்கிறீங்க ?? வாயை திறந்துதான் பேசுறது?? “, என்று விசாலம் விசாரிக்க… தீபன் மௌனம் காத்தான்.. “ம்ம்.. இவன்கிட்ட கேட்டா வேலைக்கு ஆகாது, டேய் பார்த்தூ நீ சொல்லுடா ??”, என்று கேக்க…. “மா, ஜோதி நம்ம ஆஃபிஸ்ல வேலை பாக்குற பொண்ணு தான்மா.. ஆனா நீங்க எப்படி இங்க வந்தீங்க??” “அப்படியா?? அட கடவுளே கையில வெண்ணெய்யை வச்சிட்டு தான் நெய்க்கு அலைஞ்சுட்டு இருந்திருக்கேனா இத்தனை நாளாக??..

அத்தியாயம்- 25 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!