March 2026

மதுரம்- 27

வேதாந்த் அன்று இரவெல்லாம் உறக்கம் இல்லாமல், தன் அறையையே சுற்றி சுற்றி வந்தான். எதேட்ச்சையாக கண் விழித்த நேத்ரா, மெதுவாக எழுந்து கிச்சனுக்கு சென்றாள். அவள் போவதை இவன் பார்த்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சரியாக ஐந்து நிமிடம் கழித்து காபி கப்போடு அவன் அறை வாசலில் வந்து நின்றாள்.   வேதாந்த் கேள்வியாய் அவள் முகம் பார்க்க, “எனக்கு பசிச்சது, நீங்களும் தூங்காம இருக்கிறதால உங்களுக்கும் ஒரு கிளாஸ் சேர்த்து போட்டேன். வேண்டாம்னா ஃப்ரிட்ஜ்ல வச்சிடுங்க, காலையில சூடு பண்ணி […]

மதுரம்- 27 Read More »

மதுரம்- 26

நாற்பது வயது மதிக்கத் தக்க அவரிடம், “ரத்தம் வருதுல சார், ஏன் ஹாஸ்பிடல் போக மாட்டேங்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவரை பிடித்து தூக்கினான்.   “இல்ல சார், எனக்கு என் உயிரை விட என் லேப்டாப் பேக் தான் இப்போ முக்கியம். அதுலதான் என் குடும்பத்தோட வாழ்க்கையே இருக்கு. அதை நீங்கதான் கண்டுபிடிச்சு கொடுக்கணும்.”   “கண்டிப்பா பண்றேன் சார். முதல்ல இங்க என்ன நடந்துச்சுனு சொல்லுங்க” என்று வேதாந்த் கேட்க,    அவர் அழுது கொண்டே, “என்

மதுரம்- 26 Read More »

மதுரம்- 25

“நான் ஏன்ங்க அப்படி பண்ண போறேன்? நீங்க டிவோர்ஸ் பத்தி பேச்சு எடுத்ததுமே நான் என் ஆபீஸ் பக்கத்துல பிஜி பார்த்து வச்சிட்டேன். என்னால உங்களுக்கு இனிமே எந்த இடைஞ்சலும் வேணாம். முழு மனசோட நானே டிவோர்ஸ் கொடுத்துடுறேன்” என்று சொல்லி விட்டு எழுந்தாள்.    “ஆல்ரைட், இன்னைக்கு நான் மட்டும் போறேன். நெக்ஸ்ட் ஹியரிங்க்கு கண்டிப்பா ரெண்டு பேரும் போவோம்…”    “இன்னைக்கே வரேன்.”   “வேண்டாம், அங்க வந்து மயங்கி சீன் போட்டாட்டா எனக்கு தான் தேவை

மதுரம்- 25 Read More »

மதுரம்- 24

வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள்…‌    கடற்கரை ஓரத்தில் இறந்த கிடந்த பெண் கொலை வழக்கில், எம்எல்ஏ விநாயகம் மற்றும் அவரது மகன் பிரகாஷ் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆதாரங்கள் அனைத்தும் எம்எல்ஏவுக்கு எதிராக உள்ளதாக சொல்லி காவல் துறையினர் அவர்கள் இருவரையும் ரகசியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். இதனால், அவர்களின் ஆதரவாளர்கள் இவை அனைத்தும் எதிர்க்கட்சியினரின் சதி என்று சொல்லி ஆங்காங்கே கலவரம் செய்து வருகின்றனர்…    என்று வாசிப்பாளினி செய்தியை கூறிக்கொண்டே செல்ல, அதைப் பார்த்த

மதுரம்- 24 Read More »

மதுரம்- 23

 நல்ல வேளையாக வேகத்தை ஏற்கனவே குறைத்திருந்ததால், பெரிதாக அடி எதுவும் படவில்லை.   விழுந்து கிடந்தவனை இருவர் கண்ணு மண்ணு தெரியாமல் அடிக்க, இன்னும் இருவர் அவசரமாக அவன் பாக்கெட்டை சோதனை செய்தனர்.   “யார்றா நீங்கள்லாம்? எதுக்காகடா இப்படி பண்றீங்க?” என்று கேட்க,   “அதெல்லாம் சொல்ல முடியாது. ஒழுங்கா நேத்து ராத்திரி உனக்கு கிடைச்ச அந்த வீடியோ எவிடென்ஸ எங்ககிட்ட கொடுக்க போறீயா இல்லையா?” என்று அந்த அடியாள் கேட்டதும், வேதாந்த் புரியாமல் அவனை திரும்பி பார்த்தான். அவனின் அப்பாவி தனமான முகத்தைக் கண்டு

மதுரம்- 23 Read More »

மதுரம்- 22

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் தலை தெரிய காணோம்.   “ஆனா அது எப்படி இந்த லேடிகிட்ட வந்துச்சு? அந்த பொண்ணோட ஹேன்ட் பேக் தானானு கன்ஃபார்ம் பண்றதுக்குள்ள இவங்கள வேற காணுமே. ஐயோ இருக்குற பிரஷர்ல இப்படியா மறந்து தொலைப்பேன்?…” என கண்டதையும் புலம்பிக் கொண்டு அங்கிருந்த மீன் கடைக்காரரின்‌ பக்கம் வந்தான்.    “அண்ணே, இங்க கருப்பா குள்ளமா ஒரு அக்கா சுண்டல் வித்திட்டு இருந்தது. காதுல கூட மாட்டலோட குடை தொங்கட்டான் போட்ருந்தாங்க.

மதுரம்- 22 Read More »

மதுரம்- 21

தாடை இறுக, “அப்படிலாம் இல்ல சார். தப்பு பண்ணிட்டானு தெரிஞ்சதுக்கு அப்றம், பொலிடிகல் பர்சனா இருந்தா என்ன? நார்மல் பர்சனா இருந்தா என்ன? நமக்கு அவன் அக்யுஸ்ட் தான் சார்.”   “குட், ஆனா ஒரு நியுஸ் சேனல்ல அந்த எம்எல்ஏ பையன் பிரகாஷ் தான் அந்த பொண்ணு கிட்ட வம்பிழுத்து இருக்கான்னு ஸ்ப்ரெட் பன்றாங்க.‌ போலிஸ் நம்ம அதை வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கோம். அது சம்பந்தமா ஏதாவது விசாரிச்சீங்களா?”    “அதை பத்தி தான்

மதுரம்- 21 Read More »

மதுரம்- 20

அன்று மதியமே சத்யாவை அழைத்துக் கொண்டு ஒரு பெண் மருத்துவரை காணச் சென்றாள். அவரும் தன் பங்குக்கு அந்த நல்ல செய்தியை உறுதி செய்து விட்டு, நேத்ராவுக்கு கர்ப்ப காலத்தில் பின் தொடர வேண்டிய சில அறிவுரைகளை கூறினார்.    “ஏன்மா, ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? படிச்சப் பொண்ணு தானமா நீ? வேலையில எல்லாம் இருக்கீங்க, ஒழுங்கா காய்கறி சேர்த்து சாப்பிட மாட்டீங்களா? இந்த காலத்து பிள்ளைகளை என்னத்த சொல்ல? சரி இனிமே உனக்காக இல்லைன்னாலும் உன் குழந்தைக்காக நேரத்துக்கு சாப்பிடணும். அதுவும் நல்ல

மதுரம்- 20 Read More »

மதுரம்- 19

“வேதாந்த்…!”    “ஐயோ! உன் வாயால என் பேர இனிமே சொல்லவே சொல்லாத. நேத்து நைட் முழுக்க என் பேர் சொல்லி பேசி, என்னோட ஒண்ணா இருந்தப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. ஆனா இப்போ உன் குரல கேட்கவே வெறுப்பா இருக்கு! உன் முன்னால நிற்கவே அசிங்கமா இருக்குடி. நீ தொட்ட இடமெல்லாம் ஏதோ அசிங்கம் ஒட்டுன மாதிரி…” தடுமாற்றத்தோடு தன் உடலை உதறினான்.    அவளால் அவன் வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலையில் அடித்துக்

மதுரம்- 19 Read More »

மதுரம்- 18

தனியே இருந்த நேத்ராவை எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தனர்.    “பாரேன், கல்யாணம் ஆனதையே யாருக்கும் சொல்லாம மூடி மறைச்சுட்டா. இன்னும் என்னெல்லாம் நமக்கு தெரியாம ரகசியமா வச்சிருக்காளோ தெரியல…”   “இவளை நம்பி எந்த மடையன் வாழ்க்கையை பலி கொடுத்தானு தெரியலையே. ஆனா, அவனுக்கு கண்டிப்பா இவளால பெரிய ஆபத்து வரத்தான் போகுது.”   “ஆளு பார்க்க அப்பாவியா இருக்காளேன்னு நெனச்சா, இவ பெரிய மலை முழுங்கி தான் போல. நாமளும் இனிமே இவகிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும்.”

மதுரம்- 18 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!