March 2026

அத்தியாயம்- 74

தீபனுக்கு விபத்து நிகழ்ந்ததை அறிந்தவுடன் பார்த்தா விஜி இருவரும் அவசர அவசரமாக கிளம்பி சென்றனர் மருத்துவமனையை நோக்கி…!! இன்னொரு பக்கம் ஜோதி மகனை தூக்கி கொண்டு.. நெஞ்சம் பதற ஓடி வந்தாள், தன் கணவனை காண…!! ICU வார்டுக்கு முன்பாக நின்றிருந்த காவல் அதிகாரி.. டாக்டர் வெளியே வருவதை கண்டு வேகமாக முன்னேறி சென்று விசாரித்தார் தீபனின் நிலையை பற்றி……. “கொஞ்சம் க்ரிட்டிக்கல் தான், இப்ப அவரோட நிலைமை.. எதையும் உறுதியா சொல்ல முடியாது.. அவரோட ரிலேட்டிவ்ஸ் […]

அத்தியாயம்- 74 Read More »

அத்தியாயம்- 73

ஊட்டியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த தனியார் பேருந்து…. ஜன்னல் வழியே தெரியும் கண்கொள்ளா காட்சியை  ரசித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள் ஜோதி… தன் காதல் கணவனை காணப்போகும் ஆவலில் அவளுக்கு தலைகால் புரியவில்லை…. அருகில் அமர்ந்து துயில் கொண்டிருந்த தன் மகனை வாஞ்சையுடன் பார்த்தாள்… மெல்ல அவனின் உச்சந்தலையை முகர்ந்து முத்தமிட்டு விட்டு.. அவன் தலையை வருடி கொடுத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்… குழந்தை வளர்ந்த பிறகு தன் தந்தை யார் என்று அவன் கேட்கும்

அத்தியாயம்- 73 Read More »

அத்தியாயம்- 72

சூர்யாவையும் பவித்ராவையும் சந்தித்த பிறகு தான் தீபனுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டது.. பிறகு அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை உடனே தன் மனைவியையும் மகனையும் காண வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டு விட.. காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்…!! அவளிடம் அன்று, விவாகரத்து பெறுவதற்காக இதேபோல் தான் கண்களில் நீர் வழிய காரை ஓட்டிக்கொண்டு சென்றான் மனவேதனையில்…  இப்பொழுதும் அவளை காண வேண்டும் என்று தான் செல்கிறான்.. ஆனால் என்ன  மகிழ்வோடு செல்கிறான்.. ஆனந்த கண்ணீர் வழிய❤️❤️ ”

அத்தியாயம்- 72 Read More »

அத்தியாயம்- 71

சுலோச்சனாவின் புகைப்படத்தை பார்த்தா காட்டவும் அதிர்ச்சி அடைந்தாள் ஜோதி… மேலும் அவளை பார்த்ததாக பார்த்தா கூற… இன்னும் அதிர்ந்து போனாள்…. ” என்ன சொல்றீங்க பார்த்தா?? இவங்க இறந்து போயிட்டதா தானே நிமி என்கிட்ட சொன்னாங்க” “நிமி.. அவ எல்லாம் ஒரு ஆளுன்னு சொல்லிட்டு அவ பேச்ச கேட்டுட்டு இப்படி அநியாயமா உன் புருஷன சந்தேகப்பட்டு விட்டாயே ஜோதி..”, என்றான் வருத்தமாக.. ” என்னதான் சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” ” சொல்றேன்

அத்தியாயம்- 71 Read More »

அத்தியாயம்- 70

போதை தெளிந்து எழுந்ததும், தன் எதிரே இருந்த டீபாய் மீது இருந்த பத்திரத்தை எடுத்துப் பார்த்தான் தீபன்… அந்த விவாகரத்து பத்திரத்தில், ஜோதி கையெழுத்திட்டு இருப்பதை பார்த்தவுடன் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..!! அப்படி என்றால் விவாகரத்திற்கு சம்மதித்து விட்டாளா.. அது சரி சம்மதிக்காமல் என்ன செய்வாள்?? வேறு திருமணம் வேறு செய்துவிட்டாள், குழந்தை வேறு இருக்கிறது.. இந்த லட்சணத்தில் அவள் எப்படி என்னை ஏற்றுக் கொள்வாள்?? என்னை எப்படி அவள் மனதார விரும்புவாள்?? அடச்ச… எனக்கு ஏன்

அத்தியாயம்- 70 Read More »

அத்தியாயம்- 69

கண்ணோடு கண் வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே நின்றனர் ஜோதியும் தீபனும்..!! ” நீ கத்தி பேசறதால நீ செஞ்ச தப்பு எல்லாம் இல்லைன்னு ஆகிடாது.. என்னைக்கு நீ எனக்கு துரோகம் செஞ்சேன்னு  தெரிஞ்சதோ.. அப்பவே மனசால செத்துட்டேன்.. வேணாம் வேணாம்னு தானடி விலகி போனேன்.. நீயா தேடி வந்த.. நீயா அன்பு காட்டுன.. நீயா விலகிப் போயிட்ட.. இதெல்லாம் எனக்கு தேவையா?? என்னுடைய எதிரியாக என் முன்னாடி நின்னு என்னை எதிர்த்து நின்று

அத்தியாயம்- 69 Read More »

அத்தியாயம்- 68

ஷாப்பிங் செல்லும் வழியில் ஆதவனை கண்டு விட்டு அவனிடம் பேச வந்தான் தீபன்….. அப்போது ஆதவன் சற்று துடுக்காக பேசவும்….. ” நீ எப்பவுமே இப்படித்தானா?? இல்ல என்கிட்ட மட்டும் தான் இப்படியா??” ” எப்படி??” ” இல்ல இப்படி ஏதாவது கேள்வி கேட்டா எதிர் கேள்வி கேட்கிறாயே அதை சொன்னேன்” ” ஓ அதுவா.. நான் எப்பவுமே இப்படித்தான்.. நான் இந்த மாதிரி பேசும்போதெல்லாம் எங்க அம்மா கூட சொல்லுவாங்க நான் அப்படியே எங்க அப்பா

அத்தியாயம்- 68 Read More »

அத்தியாயம்- 67

தன்னை தேடி வந்திருந்த தீபனை கண்டு கடுப்பாகி போன ஜோதி வார்த்தைகளை அள்ளி வீசினாள்…!! ” என்னை அலுவலகத்தில் டார்ச்சர் பண்ணது பத்தாதுன்னு இப்ப தேடி வந்து டார்ச்சர் பண்ணலாம் என்று பாக்குறீங்களா??.. போதா குறைக்கு என் மகனை வேறு இடிக்க வந்திருக்கீங்க.. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல??..”, என்று அவள் கோபமாக கத்த தொடங்கவும்… ” போதும் நிறுத்து.. நீ ஒன்னும் உலக அழகி கிடையாது தேடி வந்து உன்னை சைட் அடிக்க.. ரொம்ப

அத்தியாயம்- 67 Read More »

அத்தியாயம்- 66

இரவு 10 மணி.. தனது அறையில் இரவு விளக்கின் வெளிச்சத்தில்.. கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் தீபன்..!! இந்த ஐந்து வருட பிரிவிற்கு பின்பு முதல்முறையாக அவளை அணைத்த அந்த நொடி அவனின் மனக்கண் முன்பு மீண்டும் மீண்டும் வந்து இம்சித்தது..!! கொடி போன்ற அவளின் தேகமும்.. முன்பு இருந்ததை விட மேலும் மெருகேறி இருந்த அவளின் அழகும்.. அவனை தூங்க விடாமல் செய்தது…. ஒரு குழந்தைக்கு அம்மா என்று அடித்து சொன்னால்

அத்தியாயம்- 66 Read More »

அத்தியாயம்- 65

தீபன் வேகமாக இழுத்தபடியால்.. சடாரென்று  திரும்பிய ஜோதி, அவன் மீது மோதி விட… தடுமாறி விழ போனவளை தாங்கிப் பிடித்தது அவனின் இரும்பு கரங்கள்❤️❤️ விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் அவனின் தோள்களை இறுக பற்றினாள் ஜோதி.. ஐந்து வருடங்களுக்குப் பிறகு…. மீண்டும் இரு விழிகளும் மோதிக்கொண்டது.. இருவரின் மூச்சு காற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ள.. இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது!! இன்று தான்  மலர்ந்த மலர் போல் காட்சியளித்த அவளின் அழகை கண்டு

அத்தியாயம்- 65 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!