அத்தியாயம்- 44
நேரே கார் பார்த்தாவின் வீட்டுக்கு பறந்து செல்ல….. அங்கே…… வீட்டின் வாசலில் வாழைமரம் தோரணம் கட்டி மாக்கோலம் போட்டிருந்தனர்… வீடெங்கும் சின்னஞ்சிறு சிறார்கள் அங்கும் இங்குமாக ஓடி ஆடி விளையாடி கொண்டிருக்க…. அடுக்களையில், சமையல் வேலையில் மூழ்கி இருந்தார் வள்ளி… மணக்கும் காபியும், சுட சுட பஜ்ஜியும் ஒருபக்கம் இருக்க… இன்னொரு பக்கம் கமகமக்கும் கேசரியும், காராபூந்தியும் தயாராகி கொண்டிருந்தது….!! எல்லாம் வீட்டிற்க்கு வந்திருக்கும் உறவினர்களுக்கு தான் இந்த பலகார வகைகள்… வந்தோரை உபசரித்து உண்ண வைப்பதில், […]
