May 2026

ஜனனம் – 4

இதழ்யா வீட்டுக்குள் நுழைகையிலே தன் அத்தையும், மாமாவும் ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். “அத்தே, மாமா..!” சந்தோஷமாக அழைத்தவாறு அருகில் வரவே, அண்ணன் மகளைக் கண்டு புன்னகைப் பூத்தார். “இப்போ தான் இஸ்கூல் முடிஞ்சதா ? ஆறு மணி வரைக்குமா இஸ்கூல் வைக்குறாக ?” என வரலட்சுமிக் கேட்க, அவர்களின் அருகில் அமர்ந்துக் கொண்டாள். “ஆமாத்தே ! ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்காங்க. அக்காவை பார்க்க ரெண்டு பேரும் வந்தீகளா ?” என்க, “ஆமாம்மா. அப்படியே உன் அப்பன் கிட்ட […]

ஜனனம் – 4 Read More »

ஜனனம் – 3

“ஆத்தாடி ஆத்தா ! நான் ஏதோ தெரியாம கேட்டுட்டேன். விடுத்தா. உன் கிட்ட சண்டை போட்டு என் தூக்கத்தை கெடுக்க முடியாது “ என்று தன்னருகில் வந்தவளைப் பார்த்து இரு கரங்களையும் குவித்துக் காட்ட, “என்னை பார்த்தா என்ன உங்களுக்கு சண்டைக்காரி மாதிரி இருக்கா  ?” என விட மாட்டேன் என்பதுப் போல் மல்லுக்கு வந்து நின்றாள். “அய்அய்யோ ! அப்படியெல்லாம் இல்லம்மா. நீ என் தங்கம், என் ராசாத்தி. உன்னை அப்படி நினைப்பேன்னே. போம்மா போய்

ஜனனம் – 3 Read More »

ஜனனம் – 2

ஊதுபத்தியின் நறுமணமும், பூக்களின் வாசனையும், சாம்பிராணி புகையும் பரவியிருந்த பூஜை அறையில், வெள்ளை வேஷ்டி, கருப்பு சட்டை அணிந்து கையில் ஆரத்தி தட்டோடு நின்றான் துருபதன். சூடத்தை ஏற்றியவனோ அங்கிருந்த குலதெய்வம், மற்ற தெய்வம் தங்களின் முன்னோர்கள் அனைவருக்கும் ஆரத்தி சுற்றி மணியோசை ஒலிக்க விட்டு அவர்களின் ஆசிப் பெற்றான். அங்கிருந்த திருநீரை எடுத்து பூசி நெற்றியில் வைத்தவன், தன் ஆறடி கட்டுமஸ்தான உடலை தரையில் சரிய வைத்து வணங்கி எழுந்து, இதயத்துடிப்பின் அருகே தன் கரங்களை

ஜனனம் – 2 Read More »

ஜனனம் – 1

பழைய அரண்மனையைப் புதுப்பித்ததுப் போன்று இருந்த வீட்டின் முன்னே புதிதாக மூன்று கார்கள் நின்றது. உள்ளே பலரின் பேச்சு சத்தம் சந்தோஷமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சமையலறைலிருந்து டீயின் நறுமணம் அந்த வீதியெங்கும் நாசியை நுகர வைத்து இழுக்கும் வண்ணம் இருந்தது. பின்னே தங்களின் இரண்டாவது மகளைப் பெண் பார்க்க இன்று வந்திருக்கிறார்கள்  என்றால் மணக்க மணக்க கொடுக்க வேண்டாமா ? “இதை நான் போய் அவுங்களுக்கு கொடுத்துட்டு வாரேன். நீ சீக்கிரம் அடுத்து ஊத்தி வை “

ஜனனம் – 1 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!