அத்தியாயம் 16
அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்த ஆதி யாழினிக்கு நிறைய கட்டளைகள் பிறப்பித்தான். “யாழினி நியூ சைட்க்கு ஆர்டர் பண்ண திங்க்ஸ் வந்திடுச்சா?” “வந்திடுச்சி சார்“ “சரி. மேகஸின்ஸ்ல ஆட் கொடுங்க.ஓகே?. பில்லிங் அன்ட் பேக்கிங் புரோசஸ் அன்ட் டிரைவர்ஸ். இது ஒரு ஆட் கொடுங்க. தென் அனதர் இன்டர்வியூ ஃபார் கிராஜூவேட்ஸ். கொடுத்துட்டு இன்ஃபார்ம் பண்ணுங்க யாழினி“ “சரி சார்“ “நம்ம இது வரையும் ஆர்டர் பண்ணது கரெக்டா டெலிவர் பண்றாங்களானு ஃபாலோ பண்ணுங்க“ “இப்போ நானும், விஷ்ணுவும் நம்ம நியூ சைட்க்கு போய் பாத்திட்டு வந்தறோம்” என்று கிளம்பினார்கள். ஆதியும், விஷ்ணுவும் அவர்கள் வேலை நடக்கும் சைட்டுக்கு சென்றார்கள். அது டிமார்ட்டின் வொர்க்வேர் ஹவுஸாக தயாராகி கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 2.5 லட்சம் சதுரடியில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருந்தது. ஆதி தனது கம்பெனியின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு இப்போதில் இருந்தே அதற்கான வேலைகளை ஆரம்பித்திருந்தான். ஆதி ஒவ்வொன்றாக கவனித்து கொண்டிருக்க விஷ்ணு ஏதோ யோசனையிலேயே இருந்தான். அதை கவனித்த ஆதி “மச்சான் என்னாச்சுடா?” என்று விசாரிக்க “மச்சி நேத்து நல்லா தான இருந்த?. அப்றம் ஏன்டா திடீர்னு மூட் ஆஃப் ஆன?” என்று கேட்க ஆதியின் முகம் இறுகியது. “அதப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் கிடையாது. நீ என்கிட்ட எல்லாமே சொல்றியா என்ன?” “ஆதி…” அவனது கேள்வியில் திடுக்கிட்டான். “நீ கரெக்டா இரு. நானும் கரெக்டா இருக்கறேன்” என்று ஆதி அழுத்தமான குரலில் கூறினான். விஷ்ணு ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாய் நின்றான். “மச்சி அந்த டெண்டர் என்னாச்சு?” “இன்னைக்கு என்னனு தெரிஞ்சிரும்டா“ “நா சொன்ன மாதிரி தான அனுப்பின?” “ஆமா ஆதி“ “ஓகே. பாக்கலாம். இன்னைக்கு என்ன நடக்கும் போகுதுனு நான் ஆவலா இருக்கேன்“ “மச்சி” என்றவனை பார்த்து கண் சிமிட்டினான். *********** வசி ராஜை பார்க்க சென்றபோது அவன் வசியின் மீது ஏக கோபத்தில் இருந்தான். “வசி நான் என்ன சொன்னேன்?. நீ என்ன பண்ணி வெச்சிருக்க?” “ஜி நான் நீங்க சொன்னது எல்லாமே பண்ணேன் ஜி“ “எங்க எல்லாம் பண்ணீங்க?. அதான் சரியா தப்பா பண்ற தானே?” “ஜி கூல்.நான் சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன். அது வொர்க் அவுட் ஆகும்” என்றவன் அதை பற்றி விவரிக்க அதை கேட்ட ராஜின் முகம் பிரகாசமானது. “டன்” என்றபடி சந்தோஷத்துடன் ராஜ் சென்றான். […]
