April 2026

அத்தியாயம் 11

ஆதி அலுவலகத்திற்கு வந்தவுடன் யாழினி அவனிடம் பேப்பர்களை காட்டினாள். அவற்றில் ஒரு சில திருத்தங்கள் சொன்னவன் அடுத்த நாள் எல்லாவற்றையும் ரெடியாக இருக்கும்படி பார்த்து கொள்ள சொன்னான். இதற்கிடையில் யாழினி அவள் ஆர்டர் செய்த புக் பார்சல் வீட்டுக்கு வந்தவுடன் அதை எடுத்து கொண்டு அலுவலகம் வந்தாள். “சார்“ “என்ன யாழினி?” “ஆர்டர் பண்ண புக் பார்சல் நேத்து வந்தது” என்றபடி பார்சலை கொடுத்தாள். “இங்க வைங்க. விஷ்ணு வரட்டும்” என்றவன் விஷ்ணுவிற்கு போன் செய்தான். “டேய் வாடா” என்றவன் அந்த பார்சலை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அதில் முகவரி,டெலிவரி நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. “எப்போ ஆர்டர் பண்ணீங்க யாழினி?” “சன்டே சார்“ “நேத்து தான் வந்தது இல்லையா?” “எஸ் ஸார்“ ஆதி யாழினியிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது விஷ்ணு வந்தான். “என்னடா?” “ஆர்டர் பண்ண சொன்ன புக் வந்துடுச்சி. பாரு” என்றபடி பார்சலை கொடுத்தான். அது ஒரு அட்டையில் மடித்து பார்சலாக வைக்கப்பட்டு இருந்தது. பார்சலின் நடுவில் கம்பெனியின் பெயரை சுற்றி ஒட்டி இருந்தார்கள். அட்டையை பிரித்தவுடன் அதற்கான பில் உள்ளே இருந்தது. புத்தகம் பாலிதின் கவரால் சுற்றப்பட்டு இருந்தது. “டேய் ஆதி. . பாருடா எப்டி பேக் பண்ணிருக்காங்கனு!” “ஆமாடா. அதுக்கு தான் உன்ன கூப்டேன்” என்றவன் யாழினியிடம் “மெஸேஜ் ஏதாவது வந்ததா?” என்று விசாரித்தான். “ஆமா சார். எங்க இருந்து வந்தது, எப்படி டெலிவர் ஆகுதுனு எல்லாமே மெஸேஜ்ல வந்தது“ “டேய் பாத்தியா?. நம்மலும் பண்றப்ப இதுலாம் பண்ணனும்” என்று விஷ்ணுவிடம் சொன்னான். “ஓகேடா” என்றவனிடம் “தேவ் எங்க?” என்று விஷ்ணுவிடம் கேட்டான். “அவன் வொர்க் பாத்திட்டு இருப்பான். ஏன்டா?” சிறிது நேரம் யோசித்தவன் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டினான். “ஓகே யாழினி. இன்னைக்கு நான் சொன்ன வேல எல்லாம் முடிச்சிடுங்க. அதுக்கு முன்னாடி நம்ம கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேல இருக்கு“ ‘வெளியேவா?. இவனோடயா?’ என்ற யோசனையுடன் அவனை பார்த்தாள். “என்ன யோசனை?” “நத்திங் சார்“ “கொஞ்சம் நேரம் கழிச்சி கிளம்பலாம். வொர்க் பாருங்க“ […]

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

அடுத்த நாள் அதிதேவ் தனது அலுவலகத்திற்கு  கம்பீர நடையுடன் வந்ததை பார்த்தவர்கள் அவனுக்கு விஷ் செய்ய ஊழியர்களின் வணக்கங்களை சின்ன தலையசைவுடன் ஏற்று கொண்டவன் தனது அறையை நோக்கி சென்றான். அவன் உள்ளே சென்றவுடன் யாழினியிடம் என்ன ஷெட்யூல் என கேட்டவன் சிறிது யோசித்து விட்டு அவளுக்கு ஒரு சில இன்ஸ்ட்ரக்ஸன் கொடுத்துவிட்டு அதை டைப் செய்ய சொன்னான். அவன் கணிணியில் வேலை செய்து கொண்டிருந்த போது ஆதிக்கு போன் வந்தது. போனில் சொன்ன செய்தியைக் கேட்டவன் திகைத்தான். பிறகு போனை சிறிது நேரம் பார்த்தவன் அவசரமாக வெளியே கிளம்பினான். போகும்போது யாழினியிடம் முடிக்க வேண்டியவற்றை பற்றி சொல்லி விட்டு சென்றான். ‘இவனுக்கு என்ன ஆச்சு?. ஏன் இப்டி ஓடறான்?’ என்ற யோசனையோடு வேலையில் ஆழ்ந்தாள். மதிய உணவு உண்ண யாழினியை அழைக்க மித்ரா உள்ளே வந்தாள். அதிதேவை வெளியே போனதை கவனித்தவள் அவன் இல்லையென்றதும் அவனது அறைக்குள் நுழைந்தாள். “ஏய் என்னடி இவ்ளோ சின்சியரா ஒர்க் பண்ணிட்டு இருக்க?” “ஆதி வேலய முடிக்க சொன்னான்டி. அவன் ஈவ்னிங் வரதுக்குள்ள முடிச்சிருக்கணுமாம்” என்று சொல்லி கொண்டே கணிணியை அணைத்தாள். “அடேங்கப்பா… நீ எப்போ இருந்து இவ்ளோ சின்சியர் ஆன?” “நானா?. அடப்போடி. நானே கடுப்புல இருக்கேன்“ “ஏன் மேடம்?” “வந்தான்… வேலய சொன்னான்… ஓடிப் போயிட்டான்“ “என்னது?. ஓடிப் போயிட்டானா?” யாழினியின் வார்த்தைகளில் மித்ரா திகைத்தாள். “ஆமாடி. போன் பேசிட்டு இருந்தான். எப்டி மாயமா மறஞ்சானு தெரில“ “யாழிமா… ஏன்டா இவ்ளோ ஃபீல் பண்றே?” “அடிங்… நானே தனியா இங்க உட்கார்ந்து வேல செஞ்சிட்டு இருக்கேனு கடுப்புல இருக்கேன். நீ வேற ஏத்தி விடாத“ “ஆமா. நா அப்டி தான் ஏத்தி விடுவேன்“ “ஏய் வேணாம்டி” என்று அவள் மிரட்ட “நான் அப்டி தான் பேசுவேனே…” என்று அவள் இழுக்க அதில் கடுப்பானவள் “அப்படியா! அப்டினா இதயும் வாங்கிக்கோ” என்று யாழினி துரத்த ஆரம்பிக்க மித்ரா ஓட ஆரம்பித்தாள். மித்ரா கதவை திறக்க சரியாக அதே சமயத்தில் விஷ்ணு உள்ளே வர அவன் மீது மோதியவளை கீழே விழாமல் இருப்பதற்காக அவளை பிடிக்க அதற்கு முன்னமே சுதாரிப்பதற்காக அவன் சட்டையை பிடித்தவள் அவன் பிடித்தபோது அவனது கன்னத்தில் முத்தம் இடுவது போல் நின்றாள். இதை எதிர்பார்க்காதவன் சிறகில்லாமல் வானில் பறந்தான். தன் ஒட்டு மொத்த காதலையும் தேக்கி அவளை பார்த்தான். அவன் கண் மூடி கனவுலகில் சஞ்சரிக்க மித்ரா அவனை திகைத்து போய் பார்த்தாள். ‘என்ன ஒரு சத்தமும் வரல?’ என யோசித்து கொண்டே விஷ்ணு கண்ணைத் திறக்கும்போது மித்ரா திருதிரு வென்று விழித்தபடி நின்றாள். அவன் முத்தத்தை தவறவிட்ட கடுப்பில் அவளை முறைத்தான். அவளோ எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நின்றாள். யாழினியோ ஆவென்று வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள். ‘இங்க என்ன நடக்குது?!’ மித்ராவோ அவன் கண்களில் இருந்து அவள் கண்களை எடுக்க முடியாமல் தவித்தாள்.

அத்தியாயம் 10 Read More »

அத்தியாயம் 9

அடுத்த நாள் வினித் கார்த்திக்குடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவனுடைய அப்பா காளியப்பன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். காளியப்பன் பொதுப்பணித் துறை அமைச்சர். அரசியலில் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று அறிந்தவர். அப்பாவி மக்களின் முன் நல்லவன் போல வேஷமிடும் அடப்பாவி அமைச்சர். அவரது செல்வாக்கில் தான் வினித் அதிதேவிமிடருந்து புரோஜக்டை பறித்தான். இப்பொழுதும் தந்தையும், மகனும் எப்படி அடுத்தவன் தொழிலை கெடுப்பது என்பது பற்றி சிந்தித்து கொண்டிருந்தார்கள். “டாடி நீங்க எங்க இங்க?. வரேனு சொல்லவே இல்ல“ “இன்னைக்கு தான் கொஞ்சம் ஃப்ரீயா இருந்ததுடா. கட்சி, மீட்டிங்னு பிஸியாவே இருக்கு“ “சரி. இது யாரு?” அவர் கேட்ட தோரணையில் கார்த்திக் எழுந்தான். “ஐயா…” “டாடி இவன்கிட்ட அதிதேவ் கம்பெனில டிவைஸ் வைக்க சொன்னேன்“ அதிதேவ் தன் மகனை பெருமையாக பார்த்தார். ‘ஏன்டா டேய் பண்றது ஃப்ராடு. இதுல பெருமையாடா உங்களுக்கு?’ என்று கார்த்திக் மனதில் நினைத்தான். “பட் அந்த ஆதி டிவைஸ கண்டுபிடிச்சிட்டான் டாட்” என்ற வார்த்தைகளில் திடுக்கிட்டார். “எப்டிடா?” “ஐயா ஒரு பொண்ணு கண்டுபிடிச்சட்டாயா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது “ஏன்டா டேய் இத சொல்ல உனக்கு வெட்கமா இல்ல. பொண்ணாம்… அப்றம் நீ எதுக்குடா இருக்கற?” என்றவர் அவன் கன்னத்தில் இடியை இறக்கினார். அவரது தாக்குதலில் அவன் பேச்சு வராமல் மலங்க மலங்க விழித்தான். “டேய் வேலய முடிச்சிட்டு இங்க வா. அதுக்கு முன்னாடி இங்க வராத” என்று கர்ஜித்தார். “டாட் அவன ஆதி வேலய விட்டு தூக்கிட்டான்“ வினித் சொன்னதில் கார்த்திக்கை உயிரை ஊடுருவும் பார்வை பார்க்க அவன் முதுகுத்தண்டு சில்லிட்டது. ‘ஓ… காட்… கொலகார கும்பல்ல மாட்டிக்கிட்டேனே…’ என்று அவன் புலம்ப “யார்டா கண்டுபிடிச்சா?” “யாழினி” என்ற பெயரை கேட்டவுடன் அவன் முகம் செந்தனலாக மாறியது. “ஏன்டா… என்ன ஆச்சு?. அந்த பொண்ண உனக்கு தெரியுமா?” அவரது கேள்வியில் சுதாரித்தவன் “இல்லப்பா. இது வேற பொண்ணு“ “இப்போ அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?” அவரது கேள்வியில் ஒரு நிமிடம் யோசித்தவன் “டாடி அவன் புதுசா பிஸினஸ் பண்ண போறானு கேள்விப்பட்டேன். அத ஸ்டார்ட் பண்ண விடக் கூடாது” என்று தீவிரமான குரலில் கூறினான். “அத நான் பாத்துக்கறேன்டா” என்றவனிடம் “சார்…”

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

அடுத்த நாள் யாழினி அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அதிதேவ் அவளை அழைத்தான். “யாழினி நான் கேட்ட டீடெல்ய்ஸ் ரெடி பண்ணீங்களா?” “சார்” என்று அவள் புரியாமல் பார்த்தாள். “நான் 5 இயர்ஸ் அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் கேட்ருந்தேனே?” “சார்” என்று எரிமலையானவள் “என்ன எப்போ அந்த வொர்க் முடிக்க விட்டிங்க?. அதான் பழி போட்டு வெளிய அனுப்பிச்சிட்டீங்களே?” என்று அடிபட்ட குரலில் சீறினாள். அவள் குரலின் மாற்றத்தை கவனித்தவன் “கமான். சீயர் அப் யாழினி. அத மறந்துடுங்க. இப்போ எனக்கு டீடெய்ல்ஸ் வேணும். சோ டூ இட் ஃபாஸ்ட்” என்று கனிவான குரலில் ஆரம்பித்து இறுக்கமான குரலில் முடித்தான். ‘அதான உனக்கு வேல தான முக்கியம்‘ என்று திட்டியபடியே வேலை செய்ய ஆரம்பித்தவளிடம் “இப்போ ஒரு சின்ன மீட்டிங் இருக்கு. ரெடியா இரு” என்றபடி விஷ்ணுவிற்கு போன் செய்தான். “மச்சான் வாடா இங்க” என்று விஷ்ணுவிற்கு போன் செய்ய அவள் கொலைவெறியாய் முறைத்தாள். “என்ன ஆச்சு மேடம்?” என்று அவன் கேட்க நத்திங் என்றபடி தலையாட்டினாள். விஷ்ணு சிறிது நேரத்தில் வரவும் யாழினியும் ஆதியின் இருப்பிடத்திற்கு சென்றாள். “மச்சான் டெண்டர்க்கு அனுப்பியாச்சாடா?” “நான் சென்ட் பண்ணேட்டேன்டா” என்றவனிடம் “மச்சான் டிமார்ட் அன்னைக்கு ஏதோ ஐடியா இருக்குனு சொன்னியே?” “ஆமாடா. ஃபர்ஸ்ட் இலக்கிய விருது வாங்கின புக்ஸ்,பெஸ்ட் செல்லர் புக்ஸ்,நல்ல விமர்சனம் வந்த புக்ஸ்னு எல்லாத்தையும் லிஸ்ட் பண்ணனும்டா“ “ டிமார்ட்டா?. அது என்ன சார்?” என்று யாழினி புரியாமல் கேட்டாள். “அது ஈகாமர்ஸ் பிஸினஸ்ங்க யாழினி. எல்லாமே ஆன்லைன் தான்” என்று விஷ்ணு விளக்கம் சொன்னான். அவள் வியப்பாய் புருவம் உயர்த்தினாள். “நம்ம டீம்கிட்ட கொடுத்து இந்த லிஸ்ட் பைனலைஸ் பண்ண சொல்லு“ “டேய் அப்டினா பப்ளிஷர்ஸ்க்கு ஏதோ ஐடியானு சொன்னியே?. என்ன அது?” “மச்சி நம்ம ஏன் பப்ளிஷர்கிட்ட போகணும்?. ரைட்டர்ஸயே சைட்ல புக் போட வச்சிட்டா என்ன?” “மச்சான் கரெக்டா சொல்லுடா“ “சார் அவர் இபுக் மாதிரி சொல்ராரு. அப்படித்தானே சார்?” என்று யாழினி கேட்கவும் ஆதி புன்னகையுடன் தலையசைத்தான். “டேய் சூப்பர் ஐடியா மச்சி” என்றவனிடம் “ஸ்டோரி புக்ஸ் தவிர மத்ததுக்கு பப்ளிஷர்ஸ் மீட் பண்ணலாம்டா” என்று யோசனை சொன்னான். இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது மித்ரா வந்தாள். “சார் யாழினிய பாக்க விஸிட்டர் வந்திருக்காங்க“ “என்னது விசிட்டரா?. நம்மள பாக்க யார் வர போறாங்க?” என்று மித்ராவிடம் கேட்டவள் 

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

யாழினியின் முகத்தை பார்த்த மாலதிக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவர் உடனே குணசேகரனுக்கு போன் பண்ணினார். “சொல்லு மாலு. என்ன இந்த டைம்ல கூப்பிட்டிருக்க?” “என்னனு தெரியலங்க. யாழினி ஆஃபிஸ் போன கொஞ்ச நேரத்திலயே வந்துட்டா. அவ முகமே சரியில்ல” என்று கவலையுடன் கூறினார். “ஏன்?. என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டார். “கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா. நீங்க சீக்கிரம் வாங்க“ “கவலப்படாத மாலு. நான் பாத்துக்கறேன். அவ ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று சொல்லியபடி போனை வைத்தார். யாழினி குணசேகரன் வரும் வரை அறையை விட்டு வெளி வரவில்லை. அவள் நடந்ததை நினைத்தபடியே இருந்தாள். குணசேகரன் அவள் அறைக்குள் வந்தவர் “யாழினி” என்றவுடன் அவள் அப்பாவை பார்த்ததும் அவர் தோள்களில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். அவள் முதுகை வருடி கொடுத்தவர் “என்னாச்சு பேபி?. ஏன் இப்டி அழற?” என்று அவர் பதறி போய் கேட்டார். “டேடி அதிதேவ் என்மேல திருட்டு பழி போடறான். வினித் கிட்ட நான் அவன் கம்பெனி பத்தி இன்ஃபர்மேஷன் கொடுக்கறேனு சொல்றான்” என்று விசும்பியபடி சொன்னாள். “ஏய்… என்னடி சொல்ற?. இதுக்கு தான் நான் வேலைக்கு போகாதனு சொன்னேன். கேட்டியா?” என்று மாலதி புலம்பினாள். “அமைதியா இரு மாலு. வேலைக்கு போகாம அவ எப்டி எல்லாம் கத்துப்பா?” என்று அவரை அதட்டியவர் யாழினியிடம் “பேபி நீ ஃபீல் பண்ணாத. நான் யார்னு அவனுக்கு காமிக்கறேன்” என்று அவளை சமாதானப்படுத்தினார். “வேணாம் டாடி. நான் யார்னு அவனுக்கு ஃபுரூப் பண்ணிட்டு தான் வந்தேன்” என்று தெளிவான குரலில் சொன்னாள். “அப்றம் ஏன்டா ஃபீல் பண்ற?. ஃபர்ஸ்ட் சாப்பிடு. நல்லா தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போய்டும்” என்று சொன்னவர் “அவளுக்கு சாப்பிட எடுத்து வை” என்று மாலதியை பணித்தார். யாழினி இரவு உணவை முடித்து விட்டு அவள் அப்பாவுடன் பேசிய பின் ஏற்பட்ட அமைதியான மன நிலையில் படுத்தாள்.                        ************* அதிதேவ் விஷ்ணுவுடன் அவனுடைய வீட்டில் இருந்தான். “என்ன மச்சி யோசிச்சிட்டு இருக்க?” “யாழினிய பத்தி தான்டா“ “இத பார்ரா. ஏன்டா அது அவங்க மேல பழி போட்டப்ப தோணலயா?” என்று நக்கலான குரலில் கேட்டான். “டேய் நீயும் ஏன்டா இப்படி பேசற?” “ஏன்டா அவங்கள பாத்தா உனக்கு இன்ஃபர்மேஷன் சொல்ற மாதிரியா இருக்கு?. அன்னைக்கு அந்த வினித் அடி வாங்காம தப்பிச்சிருந்தானா அதே பெரிய விஷயம்” என்ற விஷ்ணுவின் விளக்கத்தில் அவன் தன்னை மறந்து சிரித்தான். “டேய் இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேன்.

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

ஆதி பார்ட்டியில் இருந்து கிளம்பும்போது அவனது உள்ளம் உலைக்கலனாக கொதித்து கொண்டிருந்தது. ‘எப்படி வினித்துக்கு தகவல் தெரிந்தது?’ என்ற யோசனையில் இறுகி போயிருந்தான். “மச்சி டோன்ட் வொர்ரி. நாம சரி பண்ணிடலாம்டா” என்று விஷ்ணு அவனை சமாதானப்படுத்தினான். ஆனால் ஆதியோ உணர்ச்சியற்ற முகத்துடன் இருந்தான். அவனுக்கு யாழினியின் முகமே கண் முன் வந்தது. அதனால் அவன் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள வெகுவாக போராடினான். ஆதிக்கு அவளை நேரில் பார்த்தால் கொன்று விடும் வெறி வந்தது. அவன் வீட்டிற்குள் நுழைந்த போது அங்கே அவன் சித்தி லலிதா மும்முரமாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். அவன் இறுகிய முகத்துடன் உள்ளே நுழைந்தான். ஆதி அவன் அறைக்கு போகும் போது அவனிடம் “ஆதி புது பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாயா?” என்று கேட்டாள். ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அவளது கேள்வியில் அவளை கண்களால் எரித்தான். ‘வீட்டுக்கு வந்தேன். சாப்டியான்னு கூட கேக்கல?.உனக்கு பிஸினஸ் தான் முக்கியமா?’ என்று நினைத்தவன் அவளை சீற்றத்துடன் பார்த்தான். அவன் கண்களில் தெரிந்த சீற்றத்தில் அவள் நடுங்கினாள். அவளை வெறுப்புடன் பார்த்தவன் “உங்களுக்கு தேவை பணம் தானே?.அது கரெக்டா வந்துரும். தேவை இல்லாம என் விஷயத்தில நீங்க தலையிட வேணாம்” என்று கட்டளை போல கூறியவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். லலிதா– ஆதியின் சித்தி. ஆதியின் அம்மா சிறு வயதிலேயே இருந்ததால் ஜெயதேவ் அவளை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார். அவளுக்கு குடும்பத்தை விட பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது. இதில் அதிகமாக அடிபட்டுப் போனவன் ஆதி. அவனுக்கு அம்மாவுடைய அருகாமை வேண்டுமென்று தோன்றும் நேரம் லலிதா அவனை கவனித்ததில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனநிலை மாற காரணமாகியது. அறைக்குள் வந்தவனுக்கு அனைத்தையும் தூக்கி உடைக்கக் கூடிய அளவுக்கு கோபம் வந்தது. ‘நீ எனக்கே துரோகம் பண்ண பாக்கறீயா?. துரோகி. உன்ன நான் சும்மா விட மாட்டேன்‘ என்று திட்டியவன் அடுத்து என்ன பண்ணலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தான். சிறிது நேரம் சிந்தித்து அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்தவன் மனம் அமைதி அடைந்தது. சிறு புன்னகையுடன் படுக்க சென்றான். ஆதி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்த போது இரு கண்கள் அவனை  யாசித்தது. அந்த கண்களில் இருந்து வழிந்த கண்ணீரில் அவன் கரைந்தான். அதில் திடுக்கிட்டு கண் விழித்தவன் வெகு நேரம் கழித்தே உறங்கினான். அடுத்த நாள் காலையில் ஆதி கண் விழித்தவன் சீக்கிரமாக அலுவலகம் சென்றான். அவன் அலுவலகத்தில் கணிணியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது யாழினி ஒரு பைலுடன் அவன் அறைக்குள் நுழைந்தாள். அவளை பார்த்தவுடன் அவனுக்கு நேற்று நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது. யாழினி பிங்க் நிற உடையில் பூங்கொத்து போன்று இருந்தாள். ஏதேச்சையாக பார்த்தவன் விழி எடுக்காது அவளை சைட் அடித்து கொண்டிருந்தான். “சார்” என்ற கணீர் குரலில் திடுக்கிட்டவன் “சொல்லுங்க” என்றபடி தனது பாவனையை மாற்றினான். அவனிடம் பைலை கொடுத்த போது அதிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்தது. “ஃபைல் கூட ஒழுங்கா எடுத்துட்டு வர மாட்டிங்களா யாழினி?” என்று அவன் கர்ஜித்தான். அவனது கத்தலில் உறைந்தவள் “சாரி சார்” என்றபடி டேபிளுக்கு அடியில் இருந்த காகிதங்களை எடுத்தவள் கண்ணில் சிறிதாக ஏதோ தட்டுப்பட்டது. ‘இது… எங்கயோ பாத்திருக்குமே?.இது என்ன?’ என்றபடி யோசனையில் ஆழ்ந்தாள். அதை பார்த்த ஆதி “ட்ரீம்ல இருக்கீங்களா யாழினி?.பேப்பர்ஸ் எடுக்க இவ்ளோ நேரமா?” என கத்தினான். அவனது கத்தலில் சுதாரித்து அவசரம் அவசரமாக தாள்களை எடுத்தவள் கையோடு அந்த சிறிய கருவியையும் வெளியே எடுத்து அவன் முன் நீட்டினாள். அதனை பார்த்தவன் முகத்தில் உச்சகட்ட அதிர்ச்சி பரவியது.

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

அதிதேவ் வெளியே சென்று விட்டு வந்தவன் யாழினியை புத்தகங்கள் பற்றிய தகவல்களை எடுக்க சொன்னான்.அதை எடுத்து வந்தவள் அவனிடம் மன்னிப்பு வேண்டினாள். அவன் யாழினியை வியப்பாய் பார்த்தான்.அவனது பார்வையில் ‘இது என்ன ரியாக்ஷன்?’ என்று மனதில் நினைத்தாள்.“மேடம்க்கு சாரில கேட்க தெரியுமா?”“சார்?!”“ஃபர்ஸ்ட் டே பாத்தப்ப நீங்க என்ன பண்ணீங்கனு ஞாபகம் இருக்கா யாழினி?” என்று இறுகிய குரலில் கேட்டான்.‘இவன் மறந்திருப்பானு நினைச்சோமே’ என்று ஒரு நிமிடம் திகைத்தவள் பின்பு ஒரு நிமிர்வுடன் அவன் கண்களை பார்த்து பேசினாள்.“சார்

அத்தியாயம் 5 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!