அத்தியாயம் 20.2
“ஆதி அழாதடா. நம்ம என்னனு கன்பார்மா கேட்டுக்கலாம்டா. நீ ஃபீல் பண்ணாத. அப்பா நம்மோட தான் இருப்பார்” என்று சமாதானப்படுத்தினான். ஆதி அவனை நிராசையாக பார்த்தான். “அழக்கூடாது ஆதி” என்று அவனை ஆறுதலாய் அணைத்தான். விஷ்ணு விமான கம்பெனிக்கு போன் செய்து விசாரிக்க அந்த செய்தி உறுதி என்றே தெரிந்தது. ஆதியும், விஷ்ணுவும் ஆதியின் வீட்டுக்கு போகும் போது லலிதா அங்கே அழுது கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் அவன் தம்பி அமைதியாக இருந்தான். ஆதி அவர்களிடம் எப்போதும் ஏதும் வைத்து கொள்வதில்லை. இப்போது அங்கே செல்ல “வீட்ட விட்டு வெளிய போடா அனாதை பயலே. இத்தன நாள நல்லா இருந்தாரு… இவன் பிஸினஸ் பாக்கறேனு உள்ள வந்து அவங்க அப்பாவ கொன்னுட்டான்” என்று எல்லார் முன்னும் ஆதி பழி போட்டாள். “டேய் வெளிய போடா” என்று வசுதேவ் துரத்த ஆதியின் ரௌத்திர பார்வையில் ஒரு அடி தள்ளி நின்றான். விஷ்ணு வசுதேவிடம் சண்டைக்கு போக அவனை தடுத்தவன் அந்த வீட்டை விட்டு கிளம்பினான். ஆதி மௌனமாக கார் ஓட்டி கொண்டு வந்தான். அந்த மௌனம் விஷ்ணுவுக்கு பீதியை கிளப்பியது. விஷ்ணு பேசலாம் என்று நினைக்க ஆதியே பேச ஆரம்பித்தான். “ மச்சி இங்க இருந்தா மூச்சு முட்டியே செத்துடுவேன் போல இருக்கு. நான் ஊட்டிக்கு போகட்டுமாடா?” “ஏன்டா மச்சான் இப்டி பேசற?. உனக்கு நான் இருக்கேன்டா. இப்படி பேசாத. நீ போய்ட்டு வா. நானும் வரட்டுமா?” “இல்லடா. இங்க ஆஃபிஸ் பாக்கணும். நீ இங்க என்ன நடக்குதுனு எனக்கு போன் பண்ணனும். சோ நீ இங்க இருக்கணும்டா“ “ஓகேடா. நான் பாத்துக்கறேன்” என்ற விஷ்ணு அவனை ஊட்டிக்கு அனுப்பினான். ஆதிக்கு ஒவ்வொன்றாய் நினைக்கும்போது கண்ணீர் பெருகியது. அதே சமயம் கோபமும் வந்தது. அவன் தனக்குள் இறுகி போய் அமர்ந்திருந்தான். அப்போது யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அவன் திரும்பி பார்த்தான். ஒரு பெண் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள். அவனை பார்த்ததும் நின்றவள் “சார்… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. என்ன துரத்திட்டு வராங்க” என்று அழுது கொண்டே சொன்னவளை புழுப்போல பார்த்தான். “என்ன நடிக்கிறயா?. அவனும் உங்க குரூப் தான?. உனக்கு தேவ பணம் தான?. இந்தா” என்று பர்சில் இருந்த பணத்தை எடுத்து நீட்ட அவளோ அவன் கண்களை ஊடுருவுவது போல் பார்த்தவள் சட்டென அவன் பணத்தை வாங்கியவுடன் அவன் அவளை ஏளனமாக பார்க்க அவளோ அதை அவன் முகத்தில் விசிறி எறிந்தாள். பின்பு அவனை ஒரு முறை பார்த்தவள் சட்டென அங்கிருந்து ஓடினாள். அவனை அந்த பார்வை ஏதோ செய்தது. ஆனால் மேற்கொண்டு அதை பற்றி யோசிக்காமல் பணத்தை எடுத்து கொண்டிருக்கும் போது இன்னும் இருவர் அந்த பக்கமாக ஓடினர். […]
