அத்தியாயம் 4
மித்ராவும்,யாழினியும் தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். “ஏய் யாழி.. மெல்லமா போடி. ரேஸ்ல போற மாதிரி ஓட்டற?” “ஆன்லைன்ல டிக் புக் பண்ணா மட்டும் போதாது. சீக்கிரம் கிளம்பி வரவும் தெரியணும்” என்று மித்ராவை முறைத்தபடி கூறினாள். “ஏய் கிளம்பறப்ப அம்மா புடிச்சிகிட்டாங்க யாழி வேல செய்யறது இல்லேனு.சமாளிச்சிட்டு வரதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு“ அதை கேட்டவள் சிரித்து கொண்டே “அதுக்கு இன்னும் வளரணும் மித்து” என்றாள். “அப்டியா மேடம். நான் வேணா ஆன்ட்டி கிட்ட சொல்லட்டுமா?” “அமைதியா இருடி பக்கி.அவங்க புலம்ப ஆரம்பிச்சிட்டா நிறுத்த மாட்டாங்க“ “தெரியுதுல்ல. என்னய மட்டும் சொல்ற” என்று மித்ரா முறுக்கி கொள்ள “கூல் பேபி” என்று அவளை சமாதானம் செய்தாள். தியேட்டர் வந்ததும் டூவிலரை பார்க் செய்தார்கள். யாழினிக்கு பிடித்த ஹூரோ படம் ஆதலால் தியேட்டருக்கு வந்தார்கள். திரையில் ஹூரோ பெயர் போட ஆரம்பித்தவுடன் இவர்கள் லூட்டி ஆரம்பமானது. யாழினி,மித்ரா இருவரும் டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பித்தவர்கள் எந்த சீனையும் விடவில்லை. ஹூரோவின் அறிமுக பாடலுக்கு இவர்களும் சேர்ந்து ஆடினார்கள். ஒவ்வொரு சீனுக்கும் விசில் சத்தமும், ஹூரோவின் பெயரை கத்திக் கொண்டும் இருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் ஆதியும்,விஷ்ணுவும் இருந்தார்கள். முதலில் யாரோ என்ற அலட்சியத்தில் இருந்த விஷ்ணு மித்ரா விசிலடிப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். ‘ஆபிஸ்ல இந்த பூனையும் பால் குடிக்குமா ரேஞ்ச்ல இருக்கா?. இப்போ இந்த ஆட்டம் போடறாளே?’ என்று ஜெர்க் ஆனான். அவர்கள் இருவரையும் பார்த்த ஆதிக்கோ கோபம் உச்சத்தில் ஏறியது. “டேய் என்னடா ஒரு படம் கூட நிம்மதியா பாக்க முடியல. ஆபிஸ்ல தான் இதுங்க தொல்ல தாங்க முடியலனா… இங்கயுமா?” என்று அவன் பல்லை கடித்தான். “மச்சி அதுக்கு நான் என்னடா பண்ணட்டும்?. அதிசயமா தியேட்டருக்கு வந்திருக்க. என்ஜாய் பண்ணேன்டா“ விஷ்ணுவின் புலம்பலில் ஆதி அமைதியானான். ‘ஹப்பா மல இறங்கிட்டான் சாமி. தாங்க் காட்‘ என்று விஷ்ணு மனதிற்குள் நினைத்து கொண்டே ஆதியை பார்க்க அவனோ யாழினியை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தான். ‘ஆஹா.. இது வேறயா?. இதுக்கா அப்படி விரப்பா இருந்தான். இருடா வரேன்‘ என கருவிக் கொண்டே “மச்சி” என்றழைக்க ஆதி ‘ஆஃபிஸ்க்கு வரப்போ எப்டி இருக்கா?.இந்த பாட்டுக்கு என்ன எக்ஸ்பிரஸன் காட்டறா?’ என்று திகைப்பாய் பார்த்தவன் தன்னை மறந்து அவளை ரசித்தான். அவளது ப்ளூ ஜூன்ஸூம், ஒய்ட் காட்டன் சர்ட்டும் அந்த பாடலுக்குண்டான அவளது நடன அசைவுகளும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றன. அவனை கூப்பிட்டவன் பக்கத்திலிருந்த மித்ராவை கவனித்தான். அவள் யாழினியோடு சேர்ந்து அடித்த லூட்டியில் தன்னை மறந்து சிரித்தான். அவன் சிரிப்பதை கவனித்த ஆதி அவனை முறைத்தான். […]
